அரக்கோணம் அடுத்த தக்கோலம் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த 17 வயது பள்ளி மாணவி நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். 

தகவலறிந்த தக்கோலம் சப் இன்ஸ்பெக்டர் தீபன் சக்ரவர்த்தி சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.