ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்விஷாரம் பகுதியில் வீட்டிலேயே மளிகை கடை நடத்தி வரும் நித்தியானந்தம் என்பவரிடம் இருந்து 1,000 ரூபாய் பணத்தை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நேற்று அதிகாலை நித்தியானந்தம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, கதவை திறந்துகொண்டு உள்ள வந்த வாலிபர், ஆங்கரில் மாட்டி வைத்திருந்த சட்டை பாக்கெட்டில் இருந்த 1,000 ரூபாயை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்ப முயன்றார். அப்போது, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நித்தியானந்தம் விழித்துக்கொண்டு, வாலிபரை கையும், களவுமாக பிடித்து ஆற்காடு டவுன் போலீசில் ஒப்படைத்தார்.

போலீசார் விசாரணையில், வாலிபர் மேல்விஷாரம் பகுதியை சேர்ந்த அப்துல் ரைஸ் (வயது 19) என்பது தெரிய வந்தது. இவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.

அப்துல் ரைஸ் மீது திருட்டு வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம், அப்துல் ரைஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Grocery Store Owner's House Robbed of 1,000 Rupees, Teenager Arrested