👉 1708ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி செப்பு நாணயம் முதன் முதலில் ஜப்பானில் உருவாக்கப்பட்டது.


👉 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி இந்திய அறிவியலாளர் கே.இராதாகிருஷ்ணன் கேரளாவில் பிறந்தார்.

👉 1885ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி கோட்லீப் டாயிம்லர், மோட்டார் சைக்கிளுக்கான காப்புரிமம் பெற்றார்.

👉 1831ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி மைக்கேல் பாரடே மின்காந்த தூண்டலை கண்டுபிடித்தார்.

தேசிய விளையாட்டு நாள் - இந்தியா

இந்திய தேசிய விளையாட்டு நாள் (Indian National Sports Day), இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக திகழ்ந்த தியான் சந்த்தைப் பெருமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாளான ஆகத்து 29இல் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. 

இந்நாளின் முக்கிய நோக்கமானது நாட்டு மக்களிடம் ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிப்பதாகும். தேசிய விளையாட்டு நாளில் குடியரசுத் தலைவரால், விளையாட்டுகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, மற்றும் துரோணாச்சாரியார் போன்ற விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.
 
2012 இல் முதன் முதலாக இந்திய அரசு, தியான் சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29ஆம் நாளை, தேசிய விளையாட்டு நாளாக அறிவித்தது.

பிறந்த நாள் :-


தயான் சந்த்

👉 இந்திய ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த் 1905ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார். இவருடைய பிறந்த தினமே இந்தியாவில் தேசிய விளையாட்டு தினமாக 2012-லிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

👉 1928, 1932, 1936 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றதற்கு இவரே முக்கியக் காரணம். இவர் ஹாக்கி விளையாடும் முறை இன்றளவிலும் வியக்க வைக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

👉 இவர் 1948-ல் ஓய்வு பெற்றார். இவரை கௌரவிக்கும் விதமாக டெல்லி தேசிய மைதானத்துக்கு இவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவருக்கு இந்திய அரசு பத்மபூஷண் விருது அளித்துள்ளது.

👉 மூன்று முறை ஒலிம்பிக்கில் தங்கம்வென்ற இந்தியாவின் மிகச்சிறந்த ஹாக்கி வீரர் தயான் சந்த் தனது 74வது வயதில் மறைந்தார்.


மைக்கேல் ஜாக்சன்

👉 இருபதாம் நூற்றாண்டின் மகத்தான பாப் இசைக்கலைஞர் என்று போற்றப்படும் மைக்கேல் ஜோசஃப் ஜாக்சன் 1958ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி அமெரிக்காவின் இன்டியானா நகரில் பிறந்தார்.

👉 இவர் வெளியிட்ட த்ரில்லர் இசை ஆல்பம்தான் இன்றுவரை உலகிலேயே மிக அதிகமாக விற்பனையான இசை ஆல்பம். இந்த வெற்றி கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம் பிடித்தது. இவர் பல கிராமி விருதுகளையும், அமெரிக்க இசை விருதுகளையும் வென்றுள்ளார். கிராமி வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றுள்ளார்.

👉 இவரது பிளாக் அன்ட் ஒயிட் என்ற வீடியோ ஒரே நேரத்தில் 27 நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது. 50 கோடி ரசிகர்கள் இதைக் கண்டு ரசித்தனர். இவருடைய மொத்த ஆல்பங்களும் இதுவரை ஏறக்குறைய 20 கோடி விற்பனையாகி உள்ளன.

👉 இவர் பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து, பாடலுக்கு ஏற்றாற்போல நடனம் ஆடுவது, இடையிடையே நடிப்பு என அனைத்தும் கலந்த பாப் நடனத்தைப் படைத்த அபூர்வ இசை மேதை. அமெரிக்காவில் மக்கள் செல்வாக்குப் பெற்ற முதல் கருப்பின இசைக்கலைஞர். இவர் படைத்த ரோபாட், மூன்வாக் போன்ற நடன வகைகள் மிகவும் பிரபலம்.

👉 இன்றளவும் பாப் இசையுலகின் ஈடு இணையற்ற கலைஞராகப் போற்றப்படும் மைக்கேல் ஜாக்சன், உடல் நலம் பாதிக்கப்பட்டு தனது 50-வது வயதில் (2009) மறைந்தார்.



இன்றைய நிகழ்வுகள்


708 – செப்பு நாணயம் முதன் முதலில் சப்பானில் வார்க்கப்பட்டது.

1009 – செருமனியில் மாயின்சு பேராலயம் அதன் திறப்பு விழாவின் போது தீயினால் பெரும் சேதத்துக்குள்ளானது.

1261 – நான்காம் உர்பானுக்குப் பின்னர் நான்காம் அலெக்சாந்தர் 182-வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1350 – வின்செல்சி போரில் ஆங்கிலேயக் கடற்படைக் கப்பல்கள் மூன்றாம் எடவர்டு மன்னர் தலைமையில் 40 காசுட்டீலியக் கப்பல்களைத் தாக்கி வெற்றி பெற்றன.

1484 – எட்டாம் இனசென்ட்டுக்குப் பின்னர் நான்காம் சிக்சுடசு புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1498 – வாஸ்கோ ட காமா கோழிக்கோட்டில் இருந்து போர்த்துக்கல் திரும்ப முடிவு செய்தார்.

1526 – மோகாக்சு சமரில் உதுமானியத் துருக்கியர் முதலாம் சுலைமான் தலைமையில் அங்கேரி, பொகீமியாவின் கடைசி ஜாகிலோனிய மன்னரைக் கொன்றனர்.

1541 – உதுமானியத் துருக்கியர் அங்கேரியின் தலைநகர் புதாவைக் கைப்பற்றினர்.

1658 – சீர்திருத்தத் திருச்சபை யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக ஒல்லாந்து மறைப்பரப்புனர் வண. பிலிப்பசு பால்டேயசு என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.[1][2]

1756 – ஐரோப்பாவில் ஏழாண்டுப் போர் ஆரம்பமானது. புருசிய மன்னர் இரண்டாம் பிரடெரிக்கு செருமனியின் சாக்சனியைத் தாக்கினார்.

1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: றோட் தீவில் பிரித்தானிய, அமெரிக்கப் படைகள் முடிவில்லாத போரில் ஈடுபட்டன.

1782 – திருகோணமலை கோட்டையை பிரான்சியர் பிரித்தானியரிடம் இருந்து மீளக் கைப்பற்றினர்.

1786 – ஐக்கிய அமெரிக்காவில் மாசச்சூசெட்ஸ் விவசாயிகள் அதிக கடன், வரி பிரச்சினைகளால் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

1807 – பிரித்தானியப் படையினர் சர் ஆரதர் வெல்லசுலி தலைமையில் கோபனாவன் நகருக்கு வெளியே கோகி என்ற இடத்தில் டென்மார்க்கு படைகளை வென்றனர்.

1831 – மைக்கேல் பரடே மின்காந்தத் தூண்டலைக் கண்டுபிடித்தார்.

1842 – நாஞ்சிங் உடன்படிக்கையை அடுத்து முதலாம் அபினிப் போர் முடிவுக்கு வந்தது. [ஆங்காங்]] பிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடுகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.

1869 – உலகின் முதலாவது மலையேற்ற பற்சட்ட இருப்புப்பாதை வாசிங்டனில் அமைக்கப்பட்டது.

1882 – தேர்வுத் துடுப்பாட்டத்தில் இலண்டனில் ஆத்திரேலியா இந்திலாந்தை 7 ஓட்டங்களால் தோற்கடித்தது. பின்னர் பிரபலமான ஆஷசுத் தொடர் ஆரம்பமாக இது வழிவகுத்தது.

1885 – காட்லீப் டைம்லர் உலகின் முதலாவது உள் எரி பொறி விசையுந்துக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

1898 – குட்இயர் டயர் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

1907 – கியூபெக் பாலம் அமைக்கப்படும்போது இடிந்து வீழ்ந்ததில் 75 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

1910 – ஜப்பான்-கொரியா இணைப்பு ஒப்பந்தம் அமுலுக்கு வந்ததை அடுத்து கொரியாவில் சப்பானியரின் ஆட்சி ஆரம்பமானது.

1911 – ஐரோப்பிய அமெரிக்கர்களுடன் கடைசியாகத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட இஷி என்ற கடைசி பழங்குடி அமெரிக்கர் வடகிழக்கு கலிபோர்னியாவின் காட்டுப் பகுதிகளில் இருந்து வெளியே வந்தனர்.

1915 – எஃப்-4 அமெரிக்காவின் விபத்துக்குள்ளான முதலாவது நீர்மூழ்கிக் கப்பல் ஆகும்.

1916 – பிலிப்பீன்சுகு சுயாட்சி வழங்கும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் நிறைவேற்றபட்டடது.

1930 – சென் கில்டா தீவுகளின் கடைசி 36 குடிமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு இசுக்காட்லாந்தின் ஏனைய பகுதிகளுக்குக் குடியேற்றப்பட்டார்கள்.

1941 – இரண்டாம் உலகப் போர்: எசுத்தோனியாவின் தலைநகர் தாலின் நாட்சி ஜெர்மனியால் கைப்பற்றப்பட்டது.

1943 – இரண்டாம் உலகப் போர்: செருமனியால் ஆக்கிரமிக்கப்பட்ட டென்மார்க்கின் அரசை செருமனி கலைத்தது.

1944 – இரண்டாம் உலகப் போர்: 60,000 சிலோவாக்கியப் படைகள் நாட்சி ஜெர்மனிக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.

1944 – அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஜி. ஜி. பொன்னம்பலம் தலைமையில் அமைக்கப்பட்டது.

1949 – சோவியத் ஒன்றியம் தனது ஜோ 1 என அழைக்கப்பட்ட முதலாவது அணுக்கரு ஆயுதத்தை கசக்ஸ்தானில் சோதித்தது.

1950 – கொரியப் போர்: பிரித்தானியப் படைகள் கொரியாவில் தரையிறங்கின.

1965 – ஜெமினி V விண்கலம் புவிக்குத் திரும்பியது.

1966 – எகிப்திய அரசுத்தலைவர் ஜமால் அப்துல் நாசிரக் கொலை செய்ய சதி செய்த குற்றத்துக்காக எகிப்திய சிந்தனையாளர் சய்யித் கூத்துப் தூக்கிலிடப்பட்டார்.

1966 – பீட்டில்ஸ் தமது கடைசி நிகழ்ச்சியை சான் பிரான்சிஸ்கோவில் நடத்தினர்.

1982 – செயற்கைத் தனிமம் மெய்ட்னீரியம் (அணு எண் 109) முதல் தடவையாக செருமனியில் தொகுக்கப்பட்டது.

1991 – சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் சோவியத் உயர்பீடம் தடை செய்தது.

1995 – முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினரின் ஐரிஸ் மோனா என்ற கப்பலை விடுதலைப் புலிகள் மூழ்கடித்தனர்.

1996 – நோர்வேயில் பயணிகள் விமானம் ஒன்று மலையுடன் மோதியதில் 141 பேர் உயிரிழந்தனர்.

1997 – அல்ஜீரியாவில் ரைஸ் என்ற இடத்தில் 98 ஊர் மக்கள் இசுலாமியத் தீவிரவாதிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.

2003 – ஈராக்கில் நஜாப் நகரில் பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு ஒன்றில் சியா இசுலாம் தலைவர் அயொத்தொல்லா சாயது அல்-அக்கீம் உட்பட 100 பேர் கொல்லப்பட்டனர்.

2005 – அமெரிக்காவின் லூசியானா முதல் புளோரிடா வரையான கரையோரப் பகுதிகளை சூறாவளி கத்ரீனா தாக்கியதில் 1,836 பேர் கொல்லப்பட்டு $125 பில்லியன் சேதம் ஏற்பட்டது.

2012 – சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இடம்பெற்ற சுரங்க விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர், 21 பேர் காணாமல் போயினர்.

இன்றைய பிறப்புகள்


1632 – ஜான் லாக், ஆங்கிலேய மருத்துவர், மெய்யியலாளர் (இ. 1704)

1780 – ஜீன் ஆகஸ்டே டொமினிக் இன்கிரெஸ், பிரான்சிய ஓவியர் (இ. 1867)

1863 – கிடுகு வெங்கட ராமமூர்த்தி, தெலுங்கு எழுத்தாளர், மொழியியலாளர், வரலாற்று ஆய்வாளர் (இ. 1940)

1887 – ஜீவராஜ் மேத்தா, குஜராத் மாநிலத்தின் 1வது முதலமைச்சர் (இ. 1978)

1887 – எவுப்ராசியம்மா எலுவத்திங்கல், கேரளக் கத்தோலிக்கப் புனிதர் (இ. 1952)

1905 – தியான் சந்த், இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர் (இ. 1979)

1913 – கே. ஜெயக்கொடி, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி

1923 – ரிச்சர்ட் ஆட்டன்பரோ, ஆங்கிலேய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 2014)

1926 – க. இராசாராம், தமிழக அரசியல்வாதி (இ. 2008)

1926 – இராமகிருஷ்ண எக்டே, இந்திய அரசியல்வாதி, கருநாடக மாநிலத்தின் 10-வது முதலமைச்சர் (இ. 2004)

1936 – ஜான் மெக்கெய்ன், அமெரிக்க அரசியல்வாதி (இ. 2018)

1943 – ஆர்தர் பி. மெக்டொனால்டு, நோபல் பரிசு பெற்ற கனடிய இயற்பியலாளர்

1943 – விஜயகுமார், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

1947 – டெம்பிள் கிராண்டின், அமெரிக்க கால்நடை அறிவியலாளர்

1949 – கே. ராதாகிருஷ்ணன், இந்திய அறிவியலாளர்

1958 – மைக்கல் ஜாக்சன், அமெரிக்கப் பாடகர், நடிகர் (இ. 2009)

1959 – அக்கினேனி நாகார்ஜுனா, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

1977 – விஷால், திரைப்பட நடிகர்

இன்றைய இறப்புகள்


1604 – அமீதா பானு பேகம், முகலாயப் பேரரசர் உமாயூனின் மனைவி (பி. 1527)

1976 – காஜி நஸ்ருல் இஸ்லாம், வங்காளக் கவிஞர், புல்லாங்குழல் மேதை (பி. 1899)

1985 – எம். கே. ராதா, இந்தியத் தமிழ் நாடக, திரைப்பட நடிகர் (பி. 1910)

1987 – நயி அல் அலி, பாலத்தீன கேலிச்சித்திர ஓவியர் (பி. 1938)

2003 – ஒரேசு வெல்கம் பாப்காக், அமெரிக்க வானியலாளர் (பி. 1912)

2005 – மரே எமெனோ, அமெரிக்க மொழியியலாளர் (பி. 1904)

2008 – ஆர்வி, தமிழக எழுத்தாளர், பத்திரிக்கையாளர் (பி. 1918)

2009 – மாவை வரோதயன், ஈழத்து எழுத்தாளர்

2015 – வேயின் டையர், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1940)

2016 – ஜீன் வைல்டர், அமெரிக்க நடிகர், இயக்குநர் (பி. 1933)

2017 – ஏ. எச். எம். அஸ்வர், இலங்கை அரசியல்வாதி (பி. 1937)

2018 – நந்தமூரி ஹரிகிருஷ்ணா, தெலுங்குத் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி (பி. 1956)

2020 – ஆசை இராசையா, ஈழத்து ஓவியர் (பி. 1946)

இன்றைய சிறப்பு நாள்


தெலுங்கு மொழி நாள் (இந்தியா)

அணுவாயுத சோதனைகளுக்கு எதிரான பன்னாட்டு நாள்

தேசிய விளையாட்டு நாள் (இந்தியா)

தேசிய எழுச்சி நாள் (சிலோவாக்கியா)