கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் இஸ்ரோ சார்பில் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து செயற்கைகோள்கள் தயாரித்து விண்ணில் செலுத்தப்படுகிறது. இதில், தமிழகம் முழுவதும் திறமை வாய்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவர்கள் தேர்வு செய்து பயிற்சி பெற அரசு சார்பில் அனுப்பபட்டு வருகிறது.
அதன்படி, 75வது சுந்திர தினத்தையொட்டி இஸ்ரோ விஞ்ஞானிகள் 7 நாட்களில் 75 செயற்கைகோள்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். இந்த பயிற்சியில் பங்கேற்க ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் கல்வி மாவட்டம் சார்பில் 8 பள்ளி மாணவர்கள் நாளை செல்ல உள்ளனர். இதில் பரமேஸ்வரிமங்கலம், காவேரிப்பாக்கம், மூதனூர், குருவராஜபேட்டை ஆகிய பள்ளிகளிலிருந்து தலா 2 பேர் விதம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாணவர்கள் அப்துல்கலாம் தொண்டு நிறுவனம் சார்பில் ராமேஸ்வரத்தில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் மினி செயற்கைகோள் தயாரித்து விண்ணில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.