தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 195 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள செய்தி தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
தமிழகத்தில் ஒரே நாளில் 24,898 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 12 லட்சத்து 97 ஆயிரத்து 500 ஆக உயர்ந்துள்ளது. இதில் இன்று மட்டும் 21 ஆயிரத்து 546 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 195 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 974 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் ஒரே நாளில் 6,678 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.