ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கல்லாலங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராம ஜெயம். அவரது மகன் சுனில் (18). இவர் மேல்மரு வத்தூரில் உள்ள ஓம் சக்தி இன்ஜினியரிங் கல்லூரி யில் பி.இ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டிற்கு சுனில் வந்தார். அங்கு கட்டிலில் படுத்து இருந்த போது தவறி விழுந்தார்.

அப்போது அங்கிருந்த கத்திரிக்கோல் அவரது மார்பில் குத்தியதில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு, சோளிங்கர் அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரி சோதித்த டாக்டர் வரும் வழியில் சுனில் இறந்ததாக கூறினார்.

இதுகுறித்து கொண்டப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.