ஆற்காடு அடுத்த பெரிய உப்புப்பேட்டை ரோட்டுத்தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (33). இவர் பஸ் டிரைவர். இவரது மனைவி ரேகா (28). இருவரும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஹரிஹரன் (8), நவ்யாஸ்ரீ (6) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று மாலை பாலமுருகன் மற்றும் அவரது மனைவி ரேகா இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் மனவேதனை அடைந்த பாலமுருகன் வீட்டில் உள்ள படுக்கை அறையில் இருந்த பேன் கொக்கியில் புடவையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆற்காடு தாலுகா போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.