குழந்தை இல்லாததால் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் தற்கொலை
ராணிப்பேட்டை, அரக்கோணம் அடுத்த விண்டர்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (26). இவரது மனைவி ப்ரீத்தி (23). இவர்களுக்கு திருமணம் நடந்து 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இந்நிலையில் கணவன், மனைவி இடையே குடும்பப் பிரச்னையால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த சிவகுமார், மனம் உடைந்த நிலையில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிவகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை இல்லாததால் ஏற்பட்ட தகராறில் சிவகுமார் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.