சோளிங்கர் ரயில் நிலையம் அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த ரயில் அவர் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பெயரில் காட்பாடி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

வாலிபர் உடலை மீட்டு அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த வாலிபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ரயில்கள் மிக வேகமாக வரும் என்பதால், அவற்றை பார்த்துவிட்டுதான் கடக்க வேண்டும்.