வாலாஜா டோல்கேட் அருகே உள்ள புலித்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர்  ஜுணன் (36). இவர் மனைவி சங்கரி (27). இவர்களது மகன் கமலேஷ்(9) நான்காம் வகுப்பு படித்து வந்தான். கமலேஷ் சுமைதாங்கி கிராமத்தில் சிலம்பாட்டம் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தான். நேற்று முன்தினம் காலை சங்கரி தனது ஸ்கூட்டியில் மகனை அழைத்து கொண்டு சிலம்பாட்ட பயிற்சி வகுப்பிற்கு சென்றார். சுமைதாங்கி அருகே சென்ற போது முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் நிலை தடுமாறிய ஸ்கூட்டி லாரியின் பின்னால் மோதியது.

இந்த விபத்தில் சங்கரி, மகன் கமலேஷ் படுகாயம் அடைந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவேரிப்பாக்கம் போலீசார் சங்கரி, கமலேஷை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு கமலேஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.