ஆற்காடு பூபதி நகர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 60). இவர் ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில், ஆற்காடு பழைய மேம்பாலத்தின் கீழே பாலாற்றில் பாலாஜி இறந்து கிடப்பதாக அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மகன் ஜெகநாதன் ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், பாலாஜி மேம்பாலத்தில் இருந்து தவறி பாலாற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலாஜியின் மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.