வேலூர் மாவட்டம் காட்பாடி கல்புத்தூர் பகுதியில் பழைய பொருட்களை வாங்கும் காயலான் கடை வைத்திருந்த விநாயகமூர்த்தி என்பவர், நேற்று இரவு எட்டு மணி அளவில் கடையை மூடுவதற்கு முன்பாக பழைய பேப்பர் உள்ளிட்ட சில பொருட்களை தீயிட்டு எரித்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக தீயில் எரிந்து கொண்டிருந்த செல்போன் பேட்டரி திடீரென வெடித்து சிதறியது. இதில் முகத்தில் படுகாயம் அடைந்த விநாயகமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காட்பாடி போலீசார் விரைந்து வந்து விநாயகமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.