ராணிப்பேட்டை, சிப்காட், ஒழுகூர், வாலாஜா ஆகிய துணை மின்நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், வரும் 14ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று செயற்பொறியாளர் (பொறுப்பு) ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இதன்படி, ராணிப்பேட்டை நகரம், நவல்பூர், காரை, புளியங்கண்ணு, பாரதிநகர், பெரியா நகர், சிப்காட், சிட்கோ, பெல், புளியந்தாங்கல், அக்ராவரம், வானாபாடி, செட்டித்தாங்கல், தண்டலம், அம்மூர், வேலம், அண்ணாநகர், எடப்பாளையம், வாலாஜா நகரம், தேவதானம், குடிமல்லூர், வி.சி. மோட்டூர், வன்னிவேடு, அம்மனந்தாங்கல், பெல்லிப்பா நகர், டி.கே. தாங்கல், சென்னசமுத்திரம், பூண்டி, சாத்தம்பாக்கம், பாகவெளி, முசிறி, வள்ளுவம்பாக்கம், அனந்தலை, வளவனூர், எசையனூர், ஒழுகூர், வாங்கூர், கரடிகுப்பம், ஜி.சி.குப்பம், தலங்கை, செங்காடு, செங்காடு மோட்டூர் மற்றும் அதனை சார்ந்த சுற்றுப்பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

இந்த பணிகள் முடிந்தவுடன் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.