காவேரிப்பாக்கம்: மின் பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம்
காவேரிப்பாக்கம் மின் பகிர்மான வட்டத்தில் உள்ள 8 துணை மின் நிலையங்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (22ம் தேதி) நடைபெற உள்ளன.

இதன் காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 5 வரை காவேரிப்பாக்கம், திருப்பாற்கடல், அத்திப்பட்டு, உதயம் நகர், ஜெசிகே நகர், கொண்டாபுரம், சுமைதாங்கி, கடப்பேரி, ராமாபுரம், பாக வெளி, பூண்டி, சாத்தம்பக்கம், சக்கரமல்லூர், வேகாமங்கலம், மாமண்டூர், பன்னியூர், பொன்னப்பன் தாங்கல், உப்பரன்தாங்கல், சேரிஐயம்பேட்டை, கட்டளை, மகானிபட்டு, துரைபெரும்பாக்கம், பெரியகிராமம் ஆகிய கிராமங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என சோளிங்கர் செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த பகுதிகளில் வசிக்கும் மின் நுகர்வோர் தங்கள் வீடுகளில் உள்ள மின் சாதனங்களை நிறுத்தி வைத்து, மின் பராமரிப்பு பணிகள் முடிந்த பின் மீண்டும் இணைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.