ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் தேன்மொழி (19). இவர் வாலாஜா அரசு கல்லூரியில் பி.ஏ. (சமூக சேவை) இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

தேன்மொழி கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் ஹாலில் உள்ள கொக்கியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த ஆற்காடு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேன்மொழியின் உடலை கைப்பற்றி ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேன்மொழி தற்கொலை செய்து கொண்டதற்கு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.