ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கிருஷ்ணன்(45) என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த ரத்தினகிரி காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு பெய்த பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் என்பவர் கிருஷ்ணனை கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. வழக்கு பதிவு செய்த போலீசார் கிருபாகரனை வலை வீசி தேடி வருகின்றனர்.