அரக்கோணத்தை அடுத்த பருத்திப்புத்தூரை சேர்ந்தவர் கோபி (வயது 50), பெண்டர் வேலை செய்து வந்தார். இவர் நேற்று அரக்கோணத்தை அடுத்த கும்பினிப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெயிண்டு அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். 

மாடிப் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென வலிப்பு ஏற்பட்டு மாடியில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து அங்கிருந்தவர்கள் அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.