ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா கரிவேடு கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (83). இவர் நேற்று வீட்டில் மின்சார ஸ்விட்ச் போட்டபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சாமிநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.