அரக்கோணம் ரயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட திருத்தணி திரவுபதி அம்மன் கோவில் அருகே அவ்வழியாக வந்த ரெயில் மோதியதில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தார்.

இந்த சம்பவம் நேற்று இரவு நடந்தது. திருத்தணி திரவுபதி அம்மன் கோவில் அருகே அவ்வழியாக வந்த ரெயில் திடீரென தண்டவாளத்தில் நடந்து சென்ற 55 வயது மதிக்கத்தக்க ஆண் மீது மோதியது. இதில் அந்த நபர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.