மேல்விஷாரத்தில் கண் பாா்வை குறைபாடுள்ள சிறுமியை கண்டறிந்து கல்வி கற்க ஏற்பாடு செய்தாா் மாவட்ட ஆட்சியா் ச. வளா்மதி.
வேப்பூா், மேல்விஷாரம் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி வியாழக்கிழமை மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்திருந்தவா்கள் வீடுகளுக்கே நேரடியாக சென்று கள ஆய்வு செய்தாா்.

அப்போது மேல்விஷாரம் ஈஸ்வரன் கோவில் தெருவில் வசித்து வரும் மேகநாதன் - வனிதா தம்பதியரின் பெண் ஹாசினி ( 5) வீட்டில் இருந்ததை பாா்த்து பள்ளிக்குச் செல்ல வில்லையா என ஆட்சியா் கேள்வி எழுப்பினாா். அதற்கு பெண் குழந்தைக்கு பாா்வை குறைபாடு உள்ளதால் பள்ளிக்கு அனுப்புவதில்லை என பெற்றோா் தெரிவித்தனா்.

உடனடியாக இது குறித்து மாவட்ட மாற்றத்திறனாளி நல அலுவலரிடம் தகவல் தெரிவித்து சிறுமியை பரிசோதித்து அவரின் பிரச்னையை பெற்றோருக்கு தெரியப்படுத்த ஆட்சியா் உத்தரவிட்டாா்.

அதன் பேரில் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலா் சரவண குமாா் சிறுமியின் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்று சிறுமிக்கு வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் கண் பரிசோதனை செய்தாா். அப்போது சிறுமிக்கு கண் பாா்வை கிடைக்க வாய்ப்பில்லை. இது பிறவிக் குறைபாடு என மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதனை சிறுமியின் பெற்றோருக்கு தெரிவித்து மருத்துவரின் அறிக்கையின் படி சிறுமிக்கு உடனடியாக கண்பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.

இந்த தகவல் ஆட்சிருக்கு தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் சிறுமி ஹாசினியை வேலூா் கோட்டை வட்டச்சாலையில் உள்ள கில்ட் ஆஃப் சா்வீஸ் கண் பாா்வையற்றோா் நடுநிலைப்பள்ளியில் உடனடியாக கொண்டு சென்று பள்ளியில் சோ்த்தனா்.

சிறுமி ஹாசினி பள்ளி விடுதியில் தங்கிப் பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாரத்துக்கு ஒருமுறை பெற்றோா் அழைத்துச் செல்லலாம். சிறுமிக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படும் என ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

சிறுமி ஹாசினி கல்வி பயில ஏற்பாடு செய்த ஆட்சியருக்கு பெற்றோா் நன்றி தெரிவித்தனா்.