ராணிப்பேட்டையில் போதையில் ரயிலை நிறுத்த முயன்றவர் மீது ரெயில் மோதி காயம் அடைந்தார். அரக்கோணம் ரயில் நிலையத்தில் 2-வது பிளாட்பாரம் தண்டவாளத்தில் அருண் என்பவர் போதையில் தண்டவாளத்தில் இறங்கி ரயிலை நிறுத்தப் போவதாக ரயிலை நோக்கி ஓடினார். அப்போது அங்கே வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் முன்பக்கம் அருண் மீது மோதியது.

இதில் அருண் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.