🏁 1886ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி பெண்ணுரிமைக்காக பாடுபட்ட சமூக சீர்திருத்த சிந்தனையாளர் ஆர்.எஸ்.சுபலட்சுமி சென்னையில் மயிலாப்பூரில் பிறந்தார்.


🌕 1877ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி செவ்வாய் கோளின் ஃபோபோஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

🌖 1868ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி பிரெஞ்சு வானியல் நிபுணர் பியேர் ஜான்சன் சூரிய கிரகணத்தை ஆய்வு செய்யும் போது ஹீலியம் என்ற தனிமத்தை கண்டுபிடித்தார்.

🎼 1928ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி சென்னை மியூசிக் அகாடமி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.

📕 1958ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி விளாடிமீர் நபகோவ் எழுதிய லொலிட்டா (Lolita) என்ற புதினம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.



நினைவு நாள் :-


நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

🏁 இந்திய சுதந்திரத்தை தன்னுடைய உயிர் மூச்சாகக் கொண்டு அயராது பாடுபட்ட புரட்சி வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1897ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி ஒரிஸா மாநிலம் கட்டாக்கில் பிறந்தார்.

🏁 ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு குருவைத் தேடி அலைந்து கொண்டிருந்தவர், குரு கிடைக்காததால் கல்லூரியில் சேர்ந்தார். அங்கே ஆசிரியருடன் சண்டை ஏற்பட்டு கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார்.

🏁 பின்பு சி.ஆர்.தாஸ் உதவியுடன் கல்லூரியில் சேர்ந்து ஐ.சி.எஸ். (Indian Civil Services) பட்டம் பெற்று, லண்டனில் வேலை பார்த்து கொண்டிருந்தார். நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வேலை பார்க்கக்கூடாது என்ற எண்ணத்தில் அந்தப் பதவியை துறந்தார். அந்த வேலையை விட்டுவிட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

🏁 இவர் 1941ஆம் ஆண்டு சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை உருவாக்கி ஆசாத் ஹிந்த் என்ற ரேடியோ மையத்தை நிறுவி, நாட்டுக்கெனத் தனிக்கொடியை அமைத்து, ஜன கண மன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.

🏁 இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, பெண்களுக்கென தனிப்பிரிவு ஏற்படுத்தி அதற்கு ஜான்சி ராணிப் படை என்று பெயரிட்டார். இந்திய புரட்சி நாயகர் சுபாஷ் சந்திர போஸ் 48வது வயதில் 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-


முதலாம் பாஜிராவ்


♚ இந்திய பேரரசர் முதலாம் பாஜிராவ் ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி 1700 ஆம் ஆண்டு பிறந்தார்.

♚ இவர் 20 ஆண்டுகள் நீடித்திருந்த தன்னுடைய சுருக்கமான இராணுவ வாழ்க்கையில், பாஜிவ் ராவ் ஒரு போர் கூட இழந்தது இல்லை.

♚ பாஜிராவ் 28 ஏப்ரல் 1740 அன்று, திடீரென காய்ச்சல் ஏற்பட்டு, பக்கவாதம் வந்தால் தன்னுடைய 39 வயதில் இறந்தார்.


இன்றைய நிகழ்வுகள்


684 – மார்ச் ராகித் சமரில் உமையா கலீபகப் பிரிவினைவாதிகள் இப்னு அல்-சுபைர் ஆதரவாளர்களைத் தோற்கடித்து, உமையாதுகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவைக் கைப்பற்றினர்.

1487 – காசுட்டீலிய, அராகன் படைகள் மாலகா நகரை முற்றிறுகையிட்டுக் கைப்பற்றின.

1572 – புரட்டத்தாந்து, கத்தோலிக்கத் திருச்சபைகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக நான்காம் என்றி மன்னருக்கும் மார்கரெட்டுக்கும் பாரிசில் திருமணம் நடைபெற்றது.

1587 – அமெரிக்காக்களில் முதலாவது ஆங்கிலேயக் குழந்தை பிறந்தது.

1590 – அமெரிக்காவின் ரோனோக் குடியேற்றத்தின் ஆளுநர் ஜோன் வைட் இங்கிலாந்தில் இருந்து திரும்பி வந்த போது அக்குடியேற்றப் பகுதியில் மக்கள் எவரும் காணப்படவில்லை. பின்னர் அக்டோபர் 24 இல் இங்கிலாந்து திரும்பினார்.

1634 – பிரான்சின் லவ்டுன் நகரில் மாந்திரீகக் குற்றங்களுக்காக உரைன் கிராண்டியர் என்பவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.

1783 – பெரிய பிரித்தானியா எங்கும் பெரும் எரிவெள்ளி அவதானிக்கப்பட்டது.

1868 – இலங்கையின் கிழக்குப் பகுதிகளில் முழுமையான சூரிய கிரகணம் அவதானிக்கப்பட்டது.[1]

1868 – பிரெஞ்சு வானியலாளர் பியேர் ஜான்சென் சூரிய கிரகணத்தை ஆராயும்போது ஈலியம் என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தார்.

1891 – மர்தினிக்கு தீவில் நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் 700 பேர் உயிரிழந்தனர்.

1914 – உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு பேரரசர் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரின் பெயரை பெத்ரோகிராது என மாற்றினார்.

1917 – கிரேக்கத்தில் தெசலோனிக்கி என்னும் நகரில் இடம்பெற்ற தீவிபத்தில் நகரின் பெரும் பகுதி அழிந்தது. 70,000 பேர் வீடுகளை இழந்தனர்.

1920 – பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் கொண்டு வரப்பட்டது.

1928 – சென்னை மியூசிக் அகாதமி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.

1938 – அமெரிக்காவின் நியூயார்க்கையும் கனடாவின் ஒன்றாரியோவையும் இணைக்கும் சென் லாரன்சு ஆற்றின் மேலாக ஆயிரம் தீவுகள் பாலம் அமெரிக்க அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட்டினால் திறந்து வைக்கப்பட்டது.

1940 – இரண்டாம் உலகப் போர்: பிரிட்டன் சண்டையின் ஒரு பகுதியாக பெரும் வான் தாக்குதல்கள் இடம்பெற்றன.

1945 – சுகர்ணோ இந்தோனேசியாவின் முதலாவது அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.

1950 – பெல்ஜியம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் யூலியன் லாகூட் வலதுசாரிகளால் படுகொலை செய்யப்பட்டார்.

1958 – விளாதிமிர் நபோக்கொவின் சர்ச்சைக்குரிய லொலிதா என்ற புதினம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.

1965 – வியட்நாம் போர்: அமெரிக்கக் கடற்படை வியட்கொங் படைகளின் தளம் ஒன்றை தாக்கி அழித்தது.

1971 – வியட்நாம் போர்: ஆத்திரேலியா, நியூசிலாந்து ஆகியன தமது படைகளை வியட்நாமில் இருந்து திரும்ப அழைக்க முடிவு செய்தன.

1977 – ஸ்டீவ் பைக்கோ தென்னாப்பிரிக்கக் காவல்துறையினரால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இவர் பின்னர் கடுங்காயங்களால் இறந்ததை அடுத்து தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கைகள் வெளிக்கொணரப்பட்டன.

1983 – அமெரிக்காவில் டெக்சஸ் கரையில் அலீசியா சூறாவளி தாக்கியதில், 21 பேர் உயிரிழந்தனர்.

2008 – பாக்கித்தானில் அரசுத்தலைவர் பெர்வேஸ் முஷாரஃப் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதை அடுத்து அவர் பதவியைத் துறந்தார்.

இன்றைய பிறப்புகள்


1700 – பாஜிராவ், மராட்டியப் பேரரசர் (இ. 1740)

1750 – அந்தோனியோ சாலியரி, இத்தாலிய இசையமைப்பாளர் (இ. 1825)

1870 – இலாவர் கோர்னிலோவ், உருசிய இராணுவத் தளபதி, நாடுகாண் பயணி (இ. 1918)

1875 – பிரிதிவி வீர விக்ரம் ஷா, நேப்பாளப் பேரரசர் (இ. 1911)

1886 – ஆர். எஸ். சுபலட்சுமி, சமூக சீர்திருத்தவாதி (இ. 1969)

1900 – விஜயலட்சுமி பண்டிட், இந்திய அரசியல்வாதி (இ. 1990)

1904 – டி. எஸ். சௌந்தரம், இந்திய மருத்துவர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1984)

1933 – ரோமன் போலான்ஸ்கி, பிரான்சிய-போலந்து இயக்குநர், நடிகர்

1934 – குல்சார், இந்திய இயக்குநர், கவிஞர்

1934 – தி. ந. இராமச்சந்திரன், தமிழகத் தமிழறிஞர் (இ. 2021)

1938 – பி. எம். எக்டே, இந்திய மருத்துவர், நூலாசிரியர்

1945 – எஸ். எல். வி. மூர்த்தி, ஒரு தமிழக எழுத்தாளர்

1954 – வி. கே. சசிகலா, தமிழக அரசியல்வாதி

1962 – பெலீப்பே கால்டெரோன், மெக்சிக்கோவின் 56வது அரசுத்தலைவர்

1967 – தலேர் மெகந்தி, இந்தியப் பாடகர், தயாரிப்பாளர்

1969 – எட்வர்டு நார்டன், அமெரிக்க நடிகர்

1975 – சிவனேசத்துரை சந்திரகாந்தன், இலங்கை, கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர், அரசியல்வாதி

1987 – பாபி, வங்காளதேசத் திரைப்பட நடிகை

இன்றைய இறப்புகள்


440 – மூன்றாம் சிக்ஸ்துஸ் (திருத்தந்தை)

1227 – செங்கிஸ் கான், மங்கோலியப் பேரரசர் (பி. 1162)

1850 – பல்சாக், பிரான்சிய எழுத்தாளர் (பி. 1799)

1945 – சுபாஷ் சந்திர போஸ், இந்திய அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1897)

1979 – வசந்தராவ் நாயக், இந்திய அரசியல்வாதி (பி. 1913)

1990 – பி. எப். ஸ்கின்னர், அமெரிக்க உளவியலாளர், மெய்யியலாளர் (பி. 1904)

1992 – கிறிஸ்டோபர் மக்கென்ட்லஸ், அமெரிக்க சாகசக்காரர் (பி. 1968)

2009 – கிம் டாய் ஜுங், தென் கொரியாவின் 15வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1925)

2011 – ஜான்சன், மலையாள இசையமைப்பாளர் (பி. 1953)

2012 – ரா. கி. ரங்கராஜன், இந்திய ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1927)

2015 – சுவ்ரா முகர்ஜி, இந்திய எழுத்தாளர், ஓவியர் (பி. 1940)

2018 – கோபி அன்னான், ஐக்கிய நாடுகள் அவையின் 7-வது பொதுச் செயலர் (பி. 1938)

இன்றைய சிறப்பு நாள்


மர நாள் (பாக்கித்தான்)