👉 1897ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி இந்திய வழக்கறிஞரும், விடுதலைப் போராட்ட வீரருமான ஈ.கிருஷ்ண ஐயர் சென்னை மாகாணம் கல்லிடைக்குறிச்சியில் பிறந்தார்.


👉 ஞானபீட விருது பெற்ற விநாயக கிருஷ்ண கோகாக் 1909ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி பிறந்தார்.

👉 1892ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி தாமஸ் ஆல்வா எடிசன் தனது இருவழி தந்திக்கான காப்புரிமம் பெற்றார்.

👉 1173ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி பைசா நகரின் சாய்ந்த கோபுரத்தின் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.


முக்கிய தினம் :-


நாகசாகி தினம்


👉 அமெரிக்கா 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று ஃபேட் மேன் (Fat Man) என்னும் அணுகுண்டை ஜப்பானில் உள்ள நாகசாகி என்கிற நகரத்தின்மீது வீசியது. இக்குண்டு 3.5 மீட்டர் நீளமும், 1.5 மீட்டர் விட்டமும், 4500 கிலோ எடையும், 1 கிலோ புளுட்டோனியத்தையும் கொண்டது. இக்குண்டு வீசப்பட்ட சில நொடிகளில் 74000 பேர் உயிர் இழந்தனர். அணுகுண்டின் விபரீதத்தை நினைவு கூற இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.



சர்வதேச உலக பூர்வ குடிமக்கள் தினம்


👉 ஐ.நா.பொதுச்சபை 1994ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு தீர்மானத்தில் ஆகஸ்ட் 9ஆம் தேதியை உலக பூர்வ குடிமக்கள் (ஆதிவாசிகள்) தினமாக அறிவித்தது. இத்தினம் 1995ஆம் ஆண்டுமுதல் கடைப்பிடிக்கப்படுகிறது.

👉 உலகமெங்கும் சுமார் 70 நாடுகளில் ஏறக்குறைய ஐந்தாயிரத்திற்கும் அதிகமான ஆதிவாசியினர் வாழ்கின்றனர். இவர்கள் சுமார் 4000 மொழிகளை பயன்படுத்துபவர்களாக உள்ளனர்.

👉 பூர்வ குடிமக்களின் கலாச்சாரம் பாதுகாத்தல், அரசியல், கல்வி, மொழி போன்றவற்றைக் கொடுத்தல், இவர்களுக்கு எதிராக நடக்கும் ஆக்கிரமிப்பை தடுத்தல் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகிறது.


பிறந்த நாள் :-


எஸ்.ஆர்.ரங்கநாதன்

📚 இந்திய நூலக அறிவியலின் தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதன் 1892ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த வேதாந்தபுரம் கிராமத்தில் பிறந்தார்.

📚 இவர் 1924-ல் சென்னை பல்கலைக்கழக நூலகராக நியமிக்கப்பட்டார். பிறகு லண்டன் சென்று, அங்குள்ள சிறந்த நூலகரான டபிள்யூ.சி.பி.சேயர்ஸிடம், நூல்களை வகைப்படுத்தும் கோட்பாட்டை அறிந்தார்.

📚 நூலகம் அறிவுசார் பிரிவினரை ஒன்றிணைத்து, சென்னை நூலகச் சங்கத்தை நிறுவினார். நூலக நிர்வாகம் உள்ளிட்டவை தொடர்பாக 60-க்கும் மேற்பட்ட நூல்கள், 2,000-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளார். 

📚 நூலகத் துறையில் 21 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக செயல்பட்டு பல புரட்சிகளை ஏற்படுத்திய இவர் 1945-ல் ஓய்வுபெற்றார். நூலக அறிவியல் பட்டயப் படிப்பை அறிமுகம் செய்து, தானே கற்பித்தார். இந்திய நூலகச் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டார். டெல்லி, பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கின. பத்மஸ்ரீ விருதும் பெற்றார். 

📚 நூலக அறிவியல், ஆவணப்படுத்துதல், தகவல் அறிவியல் துறைகளின் தந்தை என போற்றப்படும் எஸ்.ஆர்.ரங்கநாதன் 80-வது வயதில் (1972) மறைந்தார். இவரது பெயரில் ஆண்டுதோறும், சிறந்த நூலகர்களுக்கு நல் நூலகர் விருது வழங்கப்படுகிறது.




இன்றைய நிகழ்வுகள்


கிமு 48 – யூலியசு சீசர் உரோமைக் குடியரசின் இராணுவத் தளபதி பொம்பீயை சமரில் தோற்கடித்தான். பொம்பீ எகிப்துக்கு தப்பி ஓடினான்.

378 – உரோமைப் பேரரசர் வேலென்சு தலைமையிலான பெரும் படை எகிப்தில் தோல்வியடைந்தது. மன்னனும் அவனது பாதிப்பங்குப் படையினரும் கொல்லப்பட்டனர்.

1048 – 23 நாட்களே பதவியில் இருந்த பின்னர் திருத்தந்தை இரண்டாம் டமாசசு இறந்தார்.

1173 – பீசா சாயும் கோபுரத்தின் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இது இரு நூற்றாண்டுகளுக்குப் பின்னரே முடிவுற்றது.

1329 – இந்தியாவின் முதலாவது கிறித்தவ மறைமாவட்டம் கேரளத்தில் கொல்லம் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. யோர்தானுசு என்ற பிரான்சியர் முதலாவது பேராயராக நியமிக்கப்பட்டார்.

1655 – ஒலிவர் குரொம்வெல் பிரபு இங்கிலாந்தை ஒன்பது மாகாணங்களாகப் பிரித்தார்.

1814 – கிறீக் அமெரிக்கப் பழங்குடியினர் அலபாமா, ஜோர்ஜியா ஆகியவற்றின் பெரும் பகுதிகளை அமெரிக்காவுக்குக் கையளிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

1830 – பத்தாம் சார்லசு முடிதுறந்ததை அடுத்து லூயி பிலிப் பிரான்சின் மன்னராக முடிசூடினார்.

1842 – ஐக்கிய அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் ராக்கி மலைத்தொடரின் கிழக்கே எல்லை அமைப்பது தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டது.

1892 – தாமசு ஆல்வா எடிசன் தனது இருவழி தந்திக்கான காப்புரிமம் பெற்றார்.

1896 – ஓட்டொ லிலியென்தால் மிதவை வானூர்தி விபத்தில் உயிரிழந்தார்.

1902 – ஏழாம் எட்வர்டு, தென்மார்க்கின் அலெக்சாந்திரா ஆகியோர் ஐக்கிய இராச்சியத்தின் அரசராகவும், அரசியாகவும் முடி சூடினர்.

1902 – யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் ரோமன் கத்தோலிக்க ஆலயம் ஒன்றும் பாடசாலை ஒன்றும் இந்துக்களால் தாக்கி அழிக்கப்பட்டன.[1]

1907 – தெற்கு இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆகத்து 1-இல் ஆரம்பிக்கப்பட்ட சாரணிய இயக்கத்தின் முதல் பாசறை முடிவடைந்தது.

1925 – இந்தியா, லக்னோவில் கக்கோரி என்ற இடத்தில் தொடருந்து ஒன்று இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பினரால் கொள்ளையிடப்பட்டது.

1936 – 11-வது ஒலிம்பிக் போட்டிகளில் ஜெசி ஓவென்ஸ் தனது நான்காவது தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

1942 – இரண்டாம் உலகப் போர்: சாவோ தீவு சமரில், கூட்டுக் கடற்படையினர் சப்பானியப் படைகளால் தோற்கடிக்கப்பட்டனர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: சப்பானில் நாகசாகி நகர் மீது ஐக்கிய அமெரிக்கா கொழுத்த மனிதன் எனப் பெயரிடப்பட்ட அணுகுண்டை வீசியதில் 23,200-28,200 சப்பானிய போர்ப் பணியாளர்கள், 2,000 கொரியத் தொழிலாளிகள், 150 சப்பானியப் போர் வீரர்கள் உட்பட 35,000 பேர் கொல்லப்பட்டனர்.

1945 – சப்பானியரால் ஆக்கிரமிக்கப்பட்ட மஞ்சூரியா மீது சோவியத் செஞ்சேனைப் படைகள் தாக்குதலை ஆரம்பித்தன.

1965 – சிங்கப்பூர் மலேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டு தனி நாடாக்கப்பட்டது.

1974 – வாட்டர்கேட் ஊழல்: அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் பதவி விலகினார். அவரது துணைத் தலைவர் ஜெரால்ட் ஃபோர்ட் அரசுத்தலைவரானார்.

1991 – யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் சூலை 10இல் ஆரம்பித்த ஆனையிறவு இராணுவ முகாமின் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்தது. இச்சமரில் 604 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். எனினும் 2000ம் ஆண்டில் மீளத் தாக்குதல் மேற்கொண்டு தளத்தைக் கைப்பற்றினர்.

1992 – மயிலந்தனைப் படுகொலைகள்: இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம், மயிலந்தனை என்ற கிராமத்தில் 39 தமிழர் இலங்கைப் படைத்துறையினரால் படுகொலை செய்யப்பட்டனர்

1999 – உருசிய அரசுத்தலைவர் போரிஸ் யெல்ட்சின் பிரதமர் செர்கே இசுடெப்பாசினை பதவியில் இருந்து அகற்றி, முழு அமைச்சரவையையும் கலைத்தார்.

2006 – திருகோணமலைப் பகுதியில் தமிழ் மக்கள் வெருகல் ஊடாக இடம் பெயர்ந்தபோது விமானத் தாக்குதலுக்குள்ளாகியும் எறிகணைத் தாக்குதலாலும் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இன்றைய பிறப்புகள்


1776 – அமேடியோ அவகாதரோ, இத்தாலிய இயற்பியலாளர், வேதியியலாளர் (இ. 1856)

1819 – வில்லியம் டி. ஜி. மோர்ட்டோன், அமெரிக்கப் பல் மருத்துவர் (இ. 1868)

1845 – ஆந்திரே பெசெத், கனடியப் புனிதர் (இ. 1937)

1861 – டோரத்தியா கிளம்ப்கே இராபட்சு, அமெரிக்க வானியலாளர் (இ. 1942)

1896 – ஜீன் பியாஜே, சுவிட்சர்லாந்து மெய்யியலாளர், உளவியலாளர் (இ. 1980)

1897 – ஈ. கிருஷ்ண ஐயர், இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1968)

1904 – சரளாதேவி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், பெண்ணியலாளர் (இ. 1986)

1909 – வி. கே. கோகாக், இந்தியக் கல்வியாளர், எழுத்தாளர் (இ. 1992)

1911 – வில்லியம் ஆல்பிரெட் பவுலர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வானியலாளர் (இ. 1996)

1915 – மரேத்தா வெசுட்டு, அமெரிக்க வானியலாளர், நிலவியலாளர் (இ. 1998)

1921 – சிசு நாகேந்திரன், இலங்கை-ஆத்திரேலியத் தமிழ் நாடகக் கலைஞர், ஆய்வாளர் (இ. 2020)

1921 – எஸ். ஏ. ரகீம், இலங்கை அரசியல்வாதி (இ. 1989)

1922 – பிலிப் லர்கின், ஆங்கிலேயக் கவிஞர், புதின எழுத்தாளர் (இ. 1985)

1923 – அல்லாடி ராமகிருஷ்ணன், இந்திய இயற்பியலாளர் (இ. 2008)

1930 – கு. திருப்பதி, தமிழக அரசியல்வாதி (இ. 2015)

1933 – எம். டி. வாசுதேவன் நாயர், மலையாள எழுத்தாளர்

1934 – லூயிஸ் வீரபிள்ளை, இரியூனியன் அரசியல்வாதி (இ. 2002)

1941 – க. ப. அறவாணன், தமிழக எழுத்தாளர்

1953 – ழோன் திரோல், நோபல் பரிசு பெற்ற பிரான்சியப் பொருளியலாளர்

1961 – ஜோன் கீ, நியூசிலாந்தின் 38வது பிரதமர்

1963 – விட்னி ஊசுட்டன், அமெரிக்க நடிகை, பாடகி (இ. 2012)

1968 – எரிக் பானா, ஆத்திரேலிய நடிகர்

1975 – மகேஷ் பாபு, இந்திய நடிகர்

1985 – அனா கென்ட்ரிக், அமெரிக்க நடிகை

1991 – ஹன்சிகா மோட்வானி, இந்திய நடிகை

இன்றைய இறப்புகள்


1516 – இரானிமசு போசு, இடச்சு ஓவியர் (பி. ~1450)

1919 – ஏர்ன்ஸ்ட் ஹேக்கல், செருமானிய உயிரியலாளர் (பி. 1834[])

1942 – இதித் ஸ்டைன், செருமானியப் புனிதர் (பி. 1891)

1948 – எல்லப்பிரகத சுப்பாராவ், இந்திய அறிவியலாளர் (பி. 1895)

1949 – எட்வர்ட் லீ தார்ண்டைக், அமெரிக்க உளவியலாளர் (பி. 1874)

1962 – ஹேர்மன் ஹெசே, நோபல் பரிசு பெற்ற செருமானிய-சுவிசு எழுத்தாளர், கவிஞர் (பி. 1877)

1989 – கே. குணரத்தினம், இலங்கைத் திரைப்படத் தயாரிப்பாளர், தொழிலதிபர் (பி. 1917)

2008 – பெர்னி மாக், அமெரிக்க நடிகர் (பி. 1957)

2008 – மஹ்மூட் தர்வீஷ், பாலத்தீன எழுத்தாளர் (பி. 1941)

2016 – பஞ்சு அருணாசலம், தமிழ்த் திரைப்பட இயக்குநர், பாடலாசிரியர், கவிஞர் (பி. 1941)

2016 – கலிகோ புல், இந்திய-அருணாச்சலப் பிரதேச அரசியல்வாதி (பி. 1969)

இன்றைய சிறப்பு நாள்


பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்

தேசிய நாள் (சிங்கப்பூர்)

தேசிய பெண்கள் நாள் (தென்னாபிரிக்கா)