🌐 1966ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி விக்கிப்பீடியாவை துவக்கிய ஜிம்மி வேல்ஸ் பிறந்தார்.


✍ 1941ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி இந்திய கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் மறைந்தார்.

👉 1927ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி ஒன்டாரியோவிற்கும், நியூயார்க்கிற்கும் இடையே அமைதிப் பாலம் அமைக்கப்பட்டது.

💻 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி திட்டமிட்டபடி முதல் கணிப்பானை (ஹார்வார்ட் மார்க்) ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டது.

📻 1955ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி சோனி நிறுவனம் தனது முதல் திரிதடை வானொலியை ஜப்பானில் விற்க துவங்கியது.


நினைவு நாள் :-


வாணிதாசன்


👉 தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் வாணிதாசன் 1915ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி புதுவையை அடுத்த வில்லியனூரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு, புனைப்பெயர் ரமி என்பதாகும். 

👉 இவருடைய பாடல்கள் 'தமிழ் கவிதைக் களஞ்சியம்' வெளியிட்ட புதுத்தமிழ் கவிமலர்கள் என்ற நூலிலும், ஏனைய நூல்களிலும் இடம்பெற்றுள்ளன. 

👉 இவர் 34 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். தமிழச்சி, கொடிமுல்லை ஆகிய சிறு காப்பியங்களையும், தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் ஆகிய கவிதை நூல்களையும் வழங்கியுள்ளார். எனினும் வாணிதாசன் கவிதைகள் என்னும் தொகுப்பே பெரும் புகழ் பெற்றது.

👉 கவிஞரேறு, பாவலர் மணி, தமிழ்நாட்டுத் தாகூர், புதுமை கவிஞர் என்றெல்லாம் போற்றப்பட்ட வாணிதாசன் தனது 59வது வயதில் 1974ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-


எம்.எஸ்.சுவாமிநாதன் 

🌾 பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் 1925ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி கும்பகோணத்தில் பிறந்தார். இவரின் முழுப்பெயர் மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன். 

🌾 இவருடைய பெற்றோருக்கு இவர் மருத்துவராக வேண்டும் என்ற ஆசை. ஆனால், வங்கத்தில் 1942-ல் ஏற்பட்ட பஞ்சத்தால் இவர் வேளாண் துறையில் ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்தார். 

🌾 இவர் ஐபிஎஸ் அதிகாரியாக 1948-ல் தேர்வானார். ஆனால், பணியில் சேரவில்லை. சிறந்த ஆராய்ச்சியாளரான இவர், நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகள், புத்தகங்களை எழுதியுள்ளார்.

🌾 1960களில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது 'இந்தியர்களால் உணவு உற்பத்தி செய்ய முடியாது. பசியால் கொத்துக் கொத்தாக உயிரிழப்பார்கள்' என்று பல நாடுகள் கூறினர்.

🌾 இதை பொறுத்துக்கொள்ள முடியாத இவர், ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக கோதுமையை இந்தியாவில் அறிமுகம் செய்து, 200 சதவீத லாபத்தை சாதித்துக் காட்டினார். இதை 'கோதுமைப் புரட்சி' என்று பாராட்டினார் பிரதமர் இந்திரா காந்தி.

🌾 ராமன் மகசேசே விருது(1971), உலக உணவு பரிசு(1987), யுனெஸ்கோ மகாத்மா காந்தி விருது (2000), இந்திரா காந்தி தேசிய ஒருமைபாட்டுக்கான விருது(2013), பத்மஸ்ரீ(1967), பத்ம பூஷண்(1972), பத்ம விபூஷண்(1989) உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். 

🌾 வேளாண் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய எம்.எஸ்.சுவாமிநாதன் தனது 92வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.


இன்றைய நிகழ்வுகள்


கிமு 322 – மகா அலெக்சாண்டர் இறந்ததைத் தொடர்ந்து ஏதென்சுக்கும் மக்கெடோனியர்களுக்கும் இடையில் "கிரான்னன்" என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.

461 – உரோமைப் பேரரசர் மசோரியன் கைது செய்யப்பட்டு வட-மேற்கு இத்தாலியில் தலை துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.

626 – அவார், சிலாவிக் இராணுவத்தினர் கான்ஸ்டண்டினோபில் முற்றுகையைக் கைவிட்டுத் திரும்பினர்.

768 – இரண்டாம் இசுட்டீவன் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

936 – முதலாம் ஒட்டோ செருமானிய இராச்சியத்தின் மன்னராக முடி சூடினார்.

1714 – உருசியக் கடற்படையின் முதலாவது முக்கிய வெற்றி கங்கூட் சமரில் எட்டப்பட்டது.

1786 – ஐக்கிய அமெரிக்காவில் முதலாவது நடுவண் தொல்குடி இந்திய சிறப்புப் பகுதி அமைக்கப்பட்டது.[1]

1819 – கொலம்பியாவின் பொயாக்கா என்ற இடத்தில் எசுப்பானியர்களுக்கு எதிரான போரில் சிமோன் பொலிவார் பெரு வெற்றி பெற்றார்.

1890 – சுவீடனில் அன்னா மான்சுடொட்டர் என்பவர் கடைசிப் பெண்ணாக கொலைக் குற்றம் சாட்டப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.

1898 – யாழ்ப்பாணம் மானிப்பாயில் டாக்டர் ஸ்கொட் தலைமையில் மானிப்பாய் மருத்துவமனை புதிய கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.[2]

1906 – கல்கத்தாவில் வங்காளப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தின் போது முதல் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்பட்டு பார்சி பகான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது.

1927 – ஒன்டாரியோவுக்கும் நியூயோர்க்கிற்கும் இடையில் அமைதிப் பாலம் அமைக்கப்பட்டது.

1933 – ஈராக்கில் சிமேல் கிராமத்தில் 3,000 அசிரியர்கள் ஈராக்கிய அரசால் படுகொலை செய்யப்பட்டனர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கக் கடற்படையினர் சொலமன் தீவுகளின் குவாடல்கனால் தீவில் தரையிறங்கினர்.

1944 – ஆர்வர்டு மார்க் I என்ற முதலாவது நிரல் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட கணிப்பானை ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டது.

1945 – இரண்டாம் உலகப் போர்: இரோசிமா மீது அணுகுண்டு வீசப்பட்டதை அமெரிக்க அரசுத்தலைவர் ஹரி ட்ரூமன் அறிவித்தார்.

1955 – சோனி தனது முதலாவது டிரான்சிஸ்டர் வானொலிகளை சப்பானில் விற்பனைக்கு விட்டது.

1960 – ஐவரி கோஸ்ட் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1962 – தாலிடோமைடு என்ற மருந்தைப் பரிந்துரைக்க மறுத்த கனடிய-அமெரிக்க மருந்தியலாளர் பிரான்செசு கெல்சிக்கு அமெரிக்க அரசுத்தலைவரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

1964 – வியட்நாம் போர்: அமெரிக்கப் படைகள் மீது வட வியட்நாமியப் படைகளின் தாக்குதல்களைக் கையாளுவதற்கு அமெரிக்க அரசுத்தலைவர் லின்டன் ஜான்சனுக்கு முழுமையான அதிகாரம் வழங்கும் தீர்மானத்தை அமெரிக்க சட்டமன்றம் அங்கீகரித்தது.

1970 – இசுரேலுக்கும் எகிப்துக்கும் இடையே 1967 இல் ஆரம்பமான தேய்வழிவுப் போர் முடிவுற்றது.

1976 – வைக்கிங் 2 விண்கலம் செவ்வாயின் சுற்று வட்டத்துள் சென்றது.

1987 – லினி காக்சு பெரிங் நீரிணையைக் கடந்து, அமெரிக்காவில் இருந்து சோவியத் ஒன்றியம் வரை நீந்திய முதல் மனிதர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.

1989 – எத்தியோப்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் மிக்கி லேலண்டு உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.

1990 – வளைகுடாப் போரின் ஒரு பகுதியாக முதலாவது தொகுதி அமெரிக்கப் படையினர் சவூதி அரேபியா வந்து சேர்ந்தனர்.

1995 – கொழும்பில் மத்திய மாகாண முதலமைச்சரின் அலுவலகத்திற்கு வெளியே குண்டு வெடித்ததில் 24 பேர் கொல்லப்பட்டனர், 55 பேர் காயமடைந்தனர்.[3]

1998 – தான்சானியாவிலும் கென்யாவிலும் அமெரிக்கத் தூதரகங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 212 பேர் கொல்லப்பட்டு 4,500க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

1999 – செச்சினிய-ஆதரவு இசுலாமிய தீவிரவாதிகள் தாகெஸ்தானுள் ஊடுருவினர்.

2006 – இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் சிவப்பிரகாசம் மரியதாஸ் என்பவர் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்டார்.

2008 – தெற்கு ஒசேத்தியா தொடர்பான உருசிய-ஜோர்ஜியப் போர் ஆரம்பமானது.

2017 – இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடுத்த 5 நாட்களில் சுமார் 60 குழந்தைகள் ஆக்சிசன் தரப்படாமல் இறந்தனர்.

இன்றைய பிறப்புகள்


1642 – உமறுப் புலவர், தமிழகப் புலவர்

1702 – முகம்மது ஷா, இந்தியாவின் முகலாயப் பேரரசர் (இ. 1748)

1876 – மாட்ட ஹரி, டச்சு நடன மாது, உளவாளி (இ. 1917)

1912 – பி. எல். பட்நகர், இந்தியக் கணிதவியலாளர் (இ. 1976)

1925 – மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன், இந்திய உயிரியலாளர்

1928 – யேம்சு ராண்டி, கனடிய-அமெரிக்க நடிகர்

1933 – எலினோர் ஒசுட்ரொம், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 2012)

1946 – ஜான் மேத்தர், அமெரிக்க விண்மீனியல் அறிஞர்

1948 – கிறெக் சப்பல், ஆத்திரேலியத் துடுப்பாளர்

1950 – ஒசி அபேகுணசேகரா, இலங்கை அரசியல்வாதி (இ. 1994)

1958 – மகேசு தத்தானி, இந்திய எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், நடிகர்

1963 – நிக் கிலெஸ்பி, அமெரிக்க ஊடகவியலாளர், எழுத்தாளர்

1966 – ஜிம்மி வேல்ஸ், விக்கிப்பீடியா நிறுவனர்

1975 – சார்லீசு தெரன், தென்னாப்பிரிக்க-அமெரிக்க நடிகை

1978 – அலெக்சாண்டர் அஜா, பிரெஞ்சு இயக்குநர்

இன்றைய இறப்புகள்


1941 – இரவீந்திரநாத் தாகூர், நோபல் பரிசு பெற்ற இந்தியக் கவிஞர் (பி. 1861)

1974 – வாணிதாசன், புதுவைத் தமிழறிஞர், கவிஞர் (பி. 1915)

1996 – கிருஷாந்தி குமாரசுவாமி, இலங்கை இராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டவர் (பி. 1977)

2013 – ச. சபாநாயகம், ஈழத்து மரபுவழி ஓவியர்

2014 – சுருளி மனோகர், தென்னிந்திய நகைச்சுவை நடிகர்

2018 – மு. கருணாநிதி, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் (பி. 1924)

இன்றைய சிறப்பு நாள்


குடியரசு நாள் (ஐவரி கோஸ்ட்)