ராணிப்பேட்டை அருகே உள்ள காரை கூட்ரோடு பகுதியில் உள்ள அரசினர் குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருந்த மாணவன் மாயமாகியுள்ளார்.
இந்த இல்லத்தில் தங்கி, ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பள்ளிக்கு சென்றுள்ளான். ஆனால் மீண்டும் இல்லத்திற்கு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் ஊழியர்கள் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து சிறார்கள் இல்லத்தின் கண்காணிப்பாளர் கண்ணன் ராதா, ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர்.

மாணவன் மாயமாகிய சம்பவம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவன் உடனடியாக கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.