நிகழ்வுகள் :-


👉 1863ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி மாடல் டி காரை உருவாக்கிய ஹென்றி ஃபோர்டு அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் பிறந்தார்.

👉 1930ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி முதலாவது கால்பந்து உலகக் கோப்பையை உருகுவே வென்றது.


முக்கிய தினம் :-


ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினம்


👉 ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30ஆம் தேதி ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆட்கடத்தல் என்பது மனித உரிமை மீறல் மற்றும் மிகக் கொடுமையானதாகும். உலகளவில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துக்கொண்டே தான் இருக்கின்றன.

👉 இதனைத் தடுத்திட ஐ.நா.வின் பொதுச்சபை கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டு, 2014ஆம் ஆண்டுமுதல் இத்தினத்தை கடைபிடிக்குமாறு அறிவித்தது.


பிறந்த நாள் :-


முத்துலட்சுமி ரெட்டி


👉 இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும், சமூகப் போராளியுமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1886ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி புதுக்கோட்டையில் பிறந்தார்.

👉 அந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளையும் மீறி ஆண்கள் கல்லூரியில் ஒரே பெண்ணாக சென்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்து, மாநிலத்திலேயே முதல் மாணவியாக வெற்றி பெற்றார்.

👉 இந்திய மாதர் சங்கத்தை தொடங்கி வைத்தவர் இவர்தான். மேலும், இவர் சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் ஆவார். மாகாண சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியும் இவர்தான்.

👉 தற்போது உள்ள சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இவரது முயற்சியால் தான் ஆரம்பிக்கப்பட்டது. இவர் பத்மபூஷண் விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார். 

👉 எதையும் தடைகற்களாக எடுத்துக்கொள்ளாமல், படிகற்களாக எடுத்துக்கொண்டு முன்னேறிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தனது 81வது வயதில் (1968) மறைந்தார.


இன்றைய நிகழ்வுகள்


762 – பகுதாது நகரம் நிறுவப்பட்டது.

1502 – கிறித்தோபர் கொலம்பசு தனது நான்காவது கடற்பயணத்தின் போது ஒந்துராசை அடைந்தார்.

1619 – யேம்சுடவுன் நகரில் அமெரிக்காக்களின் முதலாவது பிரதிநிதிகள் சபையின் கூட்டம் நடைபெற்றது.

1626 – இத்தாலியில் நாபொலி நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000 பேர் உயிரிழந்தனர்.

1635 – எண்பதாண்டுப் போர்: ஆரஞ்சு இளவரசர் பிரெடெரிக் என்றி எசுப்பானிய இராணுவத்திடம் இருந்து தாம் இழந்த முக்கிய கோட்டையைக் கைப்பற்ற சமரை ஆரம்பித்தார்.

1656 – சுவீடன் படையினர் மன்னர் பத்தாம் சார்லசு குசுத்தாவ் தலைமையில் வார்சாவில் நடந்த சமரில் போலந்து-லித்துவேனியப் படையினரை வென்றனர்.

1733 – முதலாவது மசோனிக் விடுதி மாசச்சூசெட்சில் அமைக்கப்பட்டது.

1756 – கட்டிடக் கலைஞர் பிரான்செசுக்கோ பார்த்தலோமியோ ராசுத்திரெல்லி சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் தாம் அமைத்த கத்தரீன் அரண்மனையை உருசிய அரசி எலிசபெத்திடம் கையளித்தார்.

1811 – மெக்சிக்கோ விடுதலைப் போரின் தலைவர் மிகுவேல் இடால்கோ காஸ்டில்லா எசுப்பானியரினால் மெக்சிக்கோவில் தூக்கிலிடப்பட்டார்.

1865 – அமெரிக்காவின் பிரதர் ஜொனத்தன் என்ற நீராவிக் கப்பல் கலிபோர்னியாவில் மூழ்கியதில் 225 பயணிகள் உயிரிழந்தனர்.

1866 – அமெரிக்காவின் லூசியானா, நியூ ஓர்லென்ஸ் நகரில் இடம்பெற்ற கலவரங்களில் 48 பேர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.

1871 – நியூயார்க்கில் இசுட்டேட்டன் தீவில் வெசுட்ஃபீல்டு என்ற கப்பல் வெடித்ததில் 85 பேர் உயிரிழந்தனர்.

1912 – சப்பானியப் பேரரசர் மெய்ஜி இறந்தார். அவரது மகன் யொசிகீட்டோ பேரசராக முடிசூடினார்.

1930 – மொண்டேவீடியோ நகரில் நடைபெற்ற முதலாவது உலகக்கோப்பை காற்பந்து போட்டியில் உருகுவை அணி அர்கெந்தீனா அணியை 4-2 கணக்கில் தோற்கடித்து முதலாவது உலகக்கோப்பையை வென்றது.

1932 – கலிபோர்னியாவில் 10வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.

1945 – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய நீர்மூழ்கிக் கப்பல் ஐ-58 அமெரிக்காவின் இந்தியானாபொலிசு என்ற கடற்படைக் கப்பலை மூழ்கடித்ததில் 883 கடற்படையினர் உயிரிழந்தனர்.

1962 – திரான்சு-கனடிய நெடுஞ்சாலை, உலகின் மிக நீண்ட தேசிய நெடுஞ்சாலை, அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

1966 – இங்கிலாந்து அணி மேற்கு செருமனியை 4-2 என்ற கணக்கில் வென்று காற்பந்து உலகக்கோப்பையை வென்றது.

1969 – வியட்நாம் போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் தென் வியட்நாம் சென்று அங்கு அரசுத்தலைவர் நியூவென் வான் தியூவை சந்தித்தார்.

1971 – அப்பல்லோ திட்டம்: அப்பல்லோ 15 விண்கலத்தில் சென்ற டேவிட் ஸ்காட், யேம்சு எர்வினனாகியோர் பால்க்கன் என்ற தரையுலவியுடன் நிலாவில் இறங்கினர்.

1971 – சப்பானில் இரண்டு விமானங்கள் வானில் மோதியதில் 162 பேர் உயிரிழந்தனர்.

1980 – பிரான்சு, ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றிடம் இருந்து வனுவாட்டு விடுதலை பெற்றது.

1981 – கம்யூனிசப் போலந்தில் உணவுப் பற்றாக்குறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 50,000 பேர் லோட்சு நகரில் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டனர்.

1995 – ஈழப்போர்: இலங்கை, வாழைச்சேனையில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் கிழக்கிலங்கை இராணுவத் தளபதி நளின் அங்கம்மன கொல்லப்பட்டார்.[1]

1997 – ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் "திரெட்போ" என்ற இடம்பெற்ற மண்சரிவில் 18 பேர் உயிரிழந்தனர்.

2012 – ஆந்திரப் பிரதேசம், நெல்லூரில் தமிழ்நாடு விரைவுவண்டி தீப்பிடித்ததில் 32 பயணிகள் உயிரிழந்தனர், 27 பேர் காயமடைந்தனர்.

2012 – தில்லியில் மின்வெட்டு ஏற்பட்டதில் 300 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

2014 – மகாராட்டிரத்தில் இடம்பெற்ற மண்சரிவில் 20 பேர் உயிரிழந்தனர்.

இன்றைய பிறப்புகள் 


1818 – எமிலி புராண்ட்டி, ஆங்கிலேய எழுத்தாளர், கவிஞர் (இ. 1848)

1863 – ஹென்றி ஃபோர்ட், அமெரிக்க பொறியியலாளர், தொழிலதிபர், போர்ட் தானுந்து நிறுவனம் நிறுவனர் (இ. 1947)

1886 – முத்துலட்சுமி ரெட்டி, இந்தியாவின் பெண் மருத்துவர், சமூகப் போராளி (இ. 1968)

1898 – ஹென்றி மூர், ஆங்கிலேய சிற்பி (இ. 1986)

1909 – கோ. வேங்கடாசலபதி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1969)

1917 – கே. குணரத்தினம், இலங்கைத் திரைப்படத் தயாரிப்பாளர், தொழிலதிபர் (இ. 1989)

1918 – எமிலி புராண்ட்டி, ஆங்கிலேயக் கவிஞர், புதின எழுத்தாளர் (இ. 1848)

1924 – மா. நன்னன், தமிழறிஞர், எழுத்தாளர்

1927 – மாதவசிங் சோலான்கி, குசராத்தின் 7வது முதலமைச்சர்

1945 – பத்திரிக்கு மொதியானோ, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளர்

1947 – பிரான்சுவாசு பாரி-சினோசி, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய மருத்துவர்

1947 – ஆர்னோல்டு சுவார்செனேகர், ஆத்திரிய-அமெரிக்க நடிகர், அரசியல்வாதி, கலிபோர்னியாவின் 38வது ஆளுநர்

1958 – பட்டுக்கோட்டை பிரபாகர், தமிழக எழுத்தாளர், பதிப்பாளர்

1962 – யாக்கூபு மேமன், இந்தியத் தீவிரவாதி (இ. 2015)

1963 – லிசா குட்ரோ, அமெரிக்க நடிகை

1969 – சைமன் பேக்கர், ஆத்திரேலிய நடிகர்

1970 – கிறிஸ்டோபர் நோலன், ஆங்கிலேய-அமெரிக்க இயக்குநர்

1971 – பேரறிவாளன், ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்

1973 – சோனு நிகம், இந்தியப் பின்னணிப் பாடகர், நடிகர்

1982 – ஜேம்ஸ் அண்டர்சன், ஆங்கிலேயத் துடுப்பாளர்

இன்றைய இறப்புகள்


1898 – ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க், செருமனியின் 1வது அரசுத்தலைவர் (பி. 1815)

1914 – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர், தமிழகத் தமிழறிஞர் (பி. 1862)

1942 – லியோபோல்டு மேன்டிக், கப்புச்சின் சபையை சேர்ந்த கத்தோலிக்க அருட்பணியாளர், புனிதர் (பி. 1866)

1961 – குஞ்சிதம் குருசாமி, திராவிட இயக்க செயற்பாட்டாளர் (பி. 1909)

1969 – இ. சி. இரகுநாதையர், இலங்கையில் வாக்கிய பஞ்சாங்கம் கணித்து வெளியிட்டவர்

1977 – ஏ. எல். சீனிவாசன், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் (பி. 1923)

2003 – கே. பி. சிவானந்தம், வீணையிசைக் கலைஞர் (பி. 1917)

2004 – இரேந்திரநாத் முகர்சி, இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1907)

2007 – இங்மார் பேர்ஜ்மன், சுவீடிய இயக்குநர் (பி. 1918)

2015 – யாக்கூபு மேமன், இந்தியத் தீவிரவாதி (பி. 1962)

இன்றைய சிறப்பு நாள்


மாவீரர் நாள் (தெற்கு சூடான்)

விடுதலை நாள் (வனுவாட்டு ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1980)