நிகழ்வுகள் :-


👉 1958ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா ஆரம்பிக்கப்பட்டது.

👉 1904ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி இந்தியாவின் முதன்மையான தொழிலதிபர் ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா பிறந்தார்.


முக்கிய தினம் :-


சர்வதேச புலிகள் தினம்


👉 அழிந்து வரும் புலி இனத்தை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச புலிகள் தினம் ஜூலை 29ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகிலேயே இந்திய வங்கதேச எல்லையில் உள்ள சுந்தரவனக் காடுகளில் தான், புலிகள் அதிகளவில் வாழ்கின்றன.

👉 மனிதர்கள் புலிகளை வேட்டையாடுவதாலும், மேலும் காடுகளில் ஏற்படும் தீ விபத்து, காட்டாற்று வெள்ளம் காரணமாகவும், புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே, புலிகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.


பிறந்த நாள் :-


பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரி


👉 தமிழ் மொழிபெயர்ப்பு முன்னோடியான பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரி 1890ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி திருச்சியில் பிறந்தார்.

👉 இவர் சாகித்ய அகாடமியின் மகாமகிமோ பாத்தியாய என்ற பட்டத்தையும், வித்தியாரத்தினம், வித்யாநிதி, வித்யாபூஷணம் போன்ற ஏராளமான பட்டங்களையும் பெற்றுள்ளார்.

👉 தமிழ் இலக்கணக் கோட்பாடுகளின் வரலாறும் சமஸ்கிருத இலக்கியத்தோடு அவற்றுக்கான தொடர்பும் என்ற ஆய்வுக்காக, (History of Grammatical Theories in Tamil and their relation to grammatical literature in Sanskrit) 1930-ல் தமிழாய்வில் முதல் முனைவர் பட்டம் பெற்றார்.

👉 இவர் விளக்கமுறை இலக்கணம், வரலாற்று இலக்கணம், ஒப்பீட்டு இலக்கணம் என மூவகை இலக்கணத்தையும் எழுதியவர். வாழ்நாள் முழுவதையும் தமிழ்மொழி ஆராய்ச்சிக்காக அர்ப்பணித்த இவர் தனது 87வது வயதில் (1978) மறைந்தார்.


முசோலினி 


👉 உலகை உலுக்கிய சர்வதிகாரிகளின் பட்டியலில் இருக்கும் இத்தாலியின் சர்வதிகாரியான பெனிட்டோ முசோலினி 1883ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி பிறந்தார்.

👉 1939ல் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரும், முசோலினியும் ஒரே அணியில் நின்று நேச நாடுகளை எதிர்த்தனர். உலகைப் பயமுறுத்திய சர்வதிகாரிகளில், ஹிட்லருக்கு அடுத்தபடியாக இருந்தவர் இவர்தான்.

👉 சர்வதிகாரியாக விளங்கிய முசோலினி தனது 61வது வயதில் (1945) புரட்சிக்காரர்களால் கொல்லப்பட்டார்.

இன்றைய நிகழ்வுகள்


கிமு 587 – புது பாபிலோனியப் பேரரசு எருசலேம் நகரை முற்றுகையிட்டு சாலமோனின் கோவிலை இடித்தழித்தது.

238 – பிரட்டோரியக் காவலர்கள் அரண்மனையை முற்றுகையிட்டு உரோமைப் பேரரசர்கள் பப்பியெனசு, பால்பினசு ஆகியோரைக் கைது செய்து, அவர்களை உரோமை வீதிகளில் இழுத்து வந்து கொன்றார்கள். அதே நாளில் 13 வயது மூன்றாம் கோர்டியன் பேரரசனாக அறிவிக்கப்பட்டான்.

1014 – பைசாந்திய-பல்கேரியப் போர்கள்: கிளெய்டியன் சமரில் பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் பசில் பல்கேரிய இராணுவத்தினரைத் தோற்கடித்தான். பல்கேரியப் பேரரசர் சாமுவேல் அக்டோபர் 6 இல் இறந்தார்.

1018 – மூன்றாம் டர்க் கோமகன் புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் என்றி மன்னரின் படைகளை விளார்திங்கன் சமரில் தோற்கடித்தார்.

1030 – தென்மார்க்கிடம் இருந்து தனது முடியாட்சியைக் காப்பாற்றும் முகமாக நோர்வேயின் இரண்டாம் ஓலாப் மன்னர் சமரில் ஈடுபட்டு இறந்தார்.

1148 – சிலுவை வீரர்களின் தோல்வியுடன் தமாஸ்கசு மீதான முற்றுகை முடிவுக்கு வந்தது.

1567 – ஆறாம் யேம்சு இசுகாட்லாந்தின் மன்னராக முடிசூடினார்.

1588 – ஆங்கிலோ-எசுப்பானியப் போர்: ஆங்கிலேயக் கடற்படையினர் சேர் பிரான்சிஸ் டிரேக் தலைமையில் பிரான்சில் கிரேவ்லைன்சு என்ற இடத்தில் எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பை முறியடித்தனர்.

1818 – பிரெஞ்சு இயற்பியலாளர் பிரெனெல் புகழ்பெற்ற "ஒளியின் விளிம்பு விளைவு பற்றிய தனது குறிப்புகளை" வெளியிட்டார்.

1848 – இலங்கையில் பிரித்தானியக் குடியேற்றத்துக்கெதிராக மாத்தளையில் இடம்பெற்ற கிளர்ச்சியை அடக்க கிளர்ச்சியாளர்களுடன் இராணுவத்தினர் சண்டையில் ஈடுபட்டனர்.[1]

1848 – அயர்லாந்தின் உருளைக்கிழங்குப் பஞ்சம்: அயர்லாந்தில் டிப்பெரரி என்ற இடத்தில் பிரித்தானிய ஆட்சிக்கெதிரான கிளர்ச்சி அடக்கப்பட்டது.

1900 – இத்தாலியில், முதலாம் உம்பெர்த்தோ மன்னர் கொலை செய்யப்பட்டார்.

1907 – சேர் பேடன் பவல் இங்கிலாந்தில் சாரணர் இயக்க முகாம் ஒன்றைத் திறந்து வைத்தார். இதுவே சாரணர் இயக்கத்தை ஆரம்பிக்க முதற் படியாக இருந்தது.

1921 – இட்லர் செருமன் தேசிய சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1948 – ஒலிம்பிக் விளையாட்டுக்கள்: 14-வது ஒலிம்பிக் விளையாட்டுகள்: இரண்டாம் உலகப் போர் காரணமாக 12 ஆண்டுகளாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் இலண்டனில் ஆரம்பமாயின.

1950 – கொரியப் போர்: நான்கு நாட்களாக நோகன் ரி என்ற இடத்தில் நடந்த அமெரிக்க வான்தாக்குதல்களில் பெருந்தொகையான தென் கொரிய அகதிகள் கொல்லப்பட்டனர்.

1957 – பன்னாட்டு அணுசக்தி முகமையகம் அமைக்கப்படட்து.

1958 – ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

1959 – அவாயில் முதற்தடவையாக அமெரிக்க சட்டமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றன.

1967 – வியட்நாம் போர்: வட வியட்நாம் கரையில் பொரெஸ்டல் என்ற அமெரிக்கக் கப்பலில் தீப்பிடித்ததில் 134 பேர் உயிரிழந்தனர்.

1967 – வெனிசுவேலாவின் 400ம் ஆண்டு நிறைவு நாள் கொண்டாட்டங்களின் நான்காம் நாளில் கரகஸ் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 500 பேர் உயிரிழந்தனர்.

1973 – கிரேக்கத்தில் முடியாட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பொது வாக்கெடுப்பு இடம்பெற்றது.

1980 – ஈரானியப் புரட்சியை அடுத்து ஈரான் புதிய புனித நாட்டுக்கொடியை அறிமுகப்படுத்தியது.

1981 – இலண்டன் புனித பவுல் பேராலயத்தில் நடைபெற்ற வேல்சு இளவரசர் சார்லசு-டயானா திருமணத்தை உலகத் தொலைக்காட்சிகளில் 700 மில்லியன் பேர் பார்வையிட்டனர்.

1987 – ஆங்கிலக் கால்வாயூடாக யூரோ சுரங்கம் அமைப்பதற்கான உடன்படிக்கையில் ஐக்கிய இராச்சியப் பிரதமர் மார்கரட் தாட்சரும், பிரெஞ்சு அரசுத்தலைவர் பிரான்சுவா மித்தரானும் கையெழுத்திட்டனர்.

1987 – இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வாக இலங்கை-இந்திய ஒப்பந்தம் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை அரசுத்தலைவர் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுக்கும் இடையில் கொழும்பில் கையெழுத்திடப்பட்டது. இந்நிகழ்வில் இடம்பெற்ற மரியாதை அணிவகுப்பின் போது ராஜீவ் காந்தி இலங்கை இராணுவத்தினன் ஒருவனால் துப்பாக்கியால் தலையில் குத்தப்பட்டு காயம் அடைந்தார்.

1999 – இலங்கையின் வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நீலன் திருச்செல்வம் தற்கொலைக் குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார்.[2]

2005 – ஏரிசு குறுங்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.

2010 – காங்கோவில் கசாய் ஆற்றில் பயணிகள் படகு ஒன்று மூழ்கியதில் 80 பேர் உயிரிழந்தனர்.

2013 – சுவிட்சர்லாந்தில் லோசான் அருகே இரண்டு பயணிகள் தொடருந்துகள் மோதிக் கொண்டதில் 25 பேர் காயமடைந்தனர்.

2015 – மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோசு 10 இயக்குதளத்தை வெளியிட்டது.

இன்றைய பிறப்புகள்


1841 – கெரார்டு ஆன்சன், நோர்வே மருத்துவர் (இ. 1912)

1883 – பெனிட்டோ முசோலினி, இத்தாலியின் 27வது பிரதமர் (இ. 1945)

1890 – பி. சா. சுப்பிரமணிய சாத்திரியார், தமிழக சமக்கிருத, தமிழறிஞர், உரையாசிரியர் (இ. 1978)

1894 – எட்வர்ட் குபேர், புதுச்சேரியின் 1வது முதலமைச்சர் (இ. 1979)

1898 – இசிதர் ஐசக் ரபி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1988)

1904 – ஜெ. ர. தா. டாட்டா, பிரான்சிய-இந்திய தொழிலதிபர் (இ. 1993)

1905 – டாக் ஹமாஷெல்ட், ஐநாவின் 2வது பொதுச் செயலர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சுவீடியர் (இ. 1961)

1920 – வி. சீ. கந்தையா, இலங்கைத் தமிழ் பண்டிதர், புலவர்

1927 – ஆரி முலிச், டச்சு எழுத்தாளர் (இ. 2010)

1936 – சிற்பி பாலசுப்பிரமணியம், தமிழகக் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர்

1958 – கேயில் டைன்சு, ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர்

1959 – சஞ்சய் தத், இந்திய நடிகர்

1980 – ராசி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இன்றைய இறப்புகள்


1099 – இரண்டாம் அர்பன் (திருத்தந்தை) (பி. 1042)

1644 – எட்டாம் அர்பன் (திருத்தந்தை) (பி. 1568)

1856 – ராபர்ட் சூமான், செருமனிய இசையமைப்பாளர் (பி. 1810)

1883 – வில்லியம் வில்பர்ஃபோர்ஸ், ஆங்கிலேய அரசியல்வாதி, கொடையாளி (பி. 1759)

1890 – வின்சென்ட் வான் கோ, டச்சு ஓவியர் (பி. 1853)

1891 – ஈஸ்வர சந்திர வித்யாசாகர், இந்தியக் கல்வியாளர், எழுத்தாளர் (பி. 1820)

1947 – நாராயண ஐயங்கார், தமிழக இதழாசிரியர், ஆய்வாளர், நூலாசிரியர் (பி. 1861)

1962 – ரொனால்டு பிசர், ஆங்கிலேய உயிரியலாளர், கணிதவியலாளர் (பி. 1890)

1974 – கருமுத்து தியாகராசர், இந்தியத் தொழிலதிபர் (பி. 1893)

1979 – எர்பர்ட் மார்குசே, செருமானிய சமூகவியலாளர், மெய்யியலாளர் (பி. 1898)

1994 – டோரதி ஓட்ச்கின், நோபல் பரிசு பெற்ற எகிப்திய-ஆங்கிலேய வேதியியலாளர் (பி. 1910)

1996 – அருணா ஆசஃப் அலி, இந்திய விடுதலை இயக்கத் தன்னார்வலர் (பி. 1909)

1999 – நீலன் திருச்செல்வம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1944)

2000 – இரெனே பாவலோரோ, அர்கெந்தீன இதய அறுவை மருத்துவ வல்லுநர் (பி. 1923)

2009 – காயத்திரி தேவி, ஜெய்ப்பூர் மகாராணி (பி. 1920

2009 – ராசன் பி. தேவ், மலையாள நடிகர் (பி. 1954)

2014 – ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம், இலங்கைத் தமிழ் ஒலிபரப்பாளர்

2014 – ஐசக் இன்பராஜா, ஈழத்து நாடகக் கலைஞர் (பி. 1952)

இன்றைய சிறப்பு நாள்


பன்னாட்டுப் புலி நாள்