நிகழ்வுகள் :-


👉 1844ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி அணு எடைக்கான முதல் பட்டியலை வெளியிட்ட ஜான் டால்ட்டன் மறைந்தார்.

👉 1938ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி ஒரு இந்திய தமிழ்க் கவிஞர் ஞானக்கூத்தன் மறைந்தார்.

1907ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி தமிழக எழுத்தாளர் மௌனி பிறந்தார்.

👉 1953ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி தென்கொரியாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே நடந்த யுத்தம் முடிவுக்கு வந்தது.


நினைவு நாள் :-


ஏ.பி.ஜே.அப்துல்கலாம் 

🌼 இந்திய ஏவுகணை நாயகன் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் 1931ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் பிறந்தார்.

🌼 இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த இவர் 1980ஆம் ஆண்டு SLV-III ராக்கெட்டை பயன்படுத்தி ரோகிணி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இந்தியாவிற்கே பெருமை சேர்த்தார்.

🌼 இவர் பத்மபூஷண்(1981), பத்மவிபூஷண்(1990), பாரத ரத்னா (1997) போன்ற விருதுகளை பெற்றுள்ளார். இவருடைய அக்னி சிறகுகள், இந்தியா 2020, எழுச்சி தீபங்கள் ஆகிய புத்தகங்கள் புகழ் பெற்றவைகள்.

🌼 1999ஆம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றினார். 2002ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11வது குடியரசு தலைவராக ஜூலை 25, 2002ல் பதவியேற்றார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் 2015ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-


தேசிக விநாயகம் பிள்ளை


👉 தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி கவிஞர்களுள் ஒருவரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 1876ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், தேரூரில் பிறந்தார்.

👉 இவர் தமிழில் குழந்தைகளுக்காக முதன்முதலில் தொடர்ச்சியாகப் பாடல்களை எழுதினார். 1940ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை 'கவிமணி' என்ற பட்டத்தை இவருக்கு வழங்கினார். 

👉 மலரும் மாலையும், ஆசிய ஜோதி, உமர்கய்யாம் பாடல்கள், அழகம்மை ஆசிரிய விருத்தம், கதர் பிறந்த கதை, குழந்தைச் செல்வம் ஆகியவை இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை.

👉 இணையற்ற தமிழ் கவிஞரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 78-வது வயதில் (1954) மறைந்தார்.


சோமசுந்தர பாரதியார்

👉 விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தமிழ் அறிஞருமான நாவலர் சோமசுந்தர பாரதியார் 1879ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் சத்தியானந்த சோமசுந்தரன்.

👉 இவர் ஒத்துழையாமை இயக்கம், தீண்டாமை ஒழிப்பில் காந்தியடிகளைப் பின்பற்றியவர். 1905ஆம் ஆண்டு முதல் 1933ஆம் ஆண்டு வரை இவர் வழக்கறிஞராக பணியாற்றினார்.

👉 தமிழ் இலக்கண இலக்கியங்கள், அரசியல், வரலாறு, தமிழர் நாகரிகம், பண்பாடு என நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது தமிழ் தொண்டைப் பாராட்டி ஈழநாட்டு தமிழ்ப்புலவர் மன்றம் 'நாவலர்' என்ற பட்டத்தை வழங்கியது.

👉 தமிழுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் தொண்டாற்றிய நாவலர் சோமசுந்தர பாரதியார் 80-வது வயதில் (1959) மறைந்தார்.

இன்றைய நிகழ்வுகள்


1214 – பிரான்சில் இடம்பெற்ற போரில் பிரெஞ்சு மன்னர் இரண்டாம் பிலிப்பின் படைகள் இங்கிலாந்து மன்னர் ஜோனை வென்றன. ஜோனின் ஆஞ்சிவின் பேரரசு முடிவுக்கு வந்தது.

1299 – எட்வர்ட் கிப்பனின் ஆவணப்படி, உஸ்மான் பே பண்டைய கிரேக்க நகரமான நிக்கோமீடியாவை ஆக்கிரமித்தான். இதுவே உதுமானிய நாட்டின் தொடக்கம் என கூறப்படுகிறது.

1302 – உதுமானியர் பாஃபியசு நகரில் இடம்பெற்ற சமரில் பைசாந்தியர்களை வென்றனர்.

1549 – இயேசு சபை போதகர் பிரான்சிஸ் சவேரியாரின் கப்பல் யப்பானை அடைந்தது.

1663 – அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுக்கு ஆங்கிலேயக் கப்பல்களிலேயே பொருட்கள் அனைத்தும் அனுப்பப்பட வேண்டும் என்ற சட்டமூலம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிணைப்பின் பின்னர் இசுக்கொட்லாந்தும் இச்சட்டத்தில் சேர்க்கப்பட்டது.

1794 – பிரெஞ்சுப் புரட்சி: புரட்சியின் எதிரிகளாகக் கருதப்பட்ட 17,000 பேரத் தூக்கிலிட ஆதரித்தமைக்காக மாக்சிமிலியன் ரோப்ஸ்பியர் கைது செய்யப்பட்டார்.

1816 – நேக்ரோ கோட்டை (இன்றைய புளோரிடாவில்) சமரில் அமெரிக்கக் கடற்படை பீரங்கிக் குண்டு ஒன்றை ஏவியதில் 275 பேர் கொல்லப்பட்டனர். இதுவே அமெரிக்க வரலாற்றில் ஒரேயொரு பீரங்கி வெடிப்பில் அதிகளவு இழப்புகள் நேர்ந்த நிகழ்வாகும்.

1862 – சான் பிரான்சிஸ்கோ வில் இருந்து பனாமா நோக்கிச் சென்று கொண்டிருந்த "கோல்டன் கேட்" என்ற கப்பல் மெக்சிக்கோவில் தீப்பிடித்து மூழ்கியதில் 231 பேர் உயிரிழந்தனர்.

1880 – இரண்டாவது ஆங்கில-ஆப்கானியப் போர்: மாய்வாண்ட் என்ற இடத்தில் ஆப்கானியப் படைகள் முகம்மது அயூப் கான் தலைமையில் பிரித்தானியரை வென்றனர்.

1890 – இடச்சு ஓவியர் வின்சென்ட் வான் கோ தன்னைத்தானே சுட்டு, இரண்டு நாட்களின் பின்னர் இறந்தார்.

1919 – சிகாகோவில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் 38 பேர் உயிரிழந்தனர், 537 பேர் காயமடைந்தனர்.

1921 – இயக்குநீர் இன்சுலின் இரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதாக டொராண்டோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

1929 – போர்க்கைதிகள் தொடர்பான ஜெனீவா உடன்பாட்டில் 53 நாடுகள் கையெழுத்திட்டன.

1942 – இரண்டாம் உலகப் போர்: கூட்டுப் படைகள் எகிப்தில் அச்சு நாடுகளின் இறுதி முன்னகர்வை வெற்றிகரமாகத் தடுத்தன.

1953 – கொரியப் போர் முடிவு: ஐக்கிய அமெரிக்கா, சீனா, மற்றும் வட கொரியா ஆகியவற்றுக்கிடையில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. தென் கொரியா இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டாலும், உடன்பாட்டை மதிப்பதாக வாக்குறுதி தந்தது.

1955 – ஆஸ்திரியாவில் 1945 மே முதல் நிலை கொண்டிருந்த நட்பு நாடுகளின் படைகள் அங்கிருந்து விலகின.

1955 – இலண்டனில் இருந்து இசுதான்புல் சென்று கொண்டிருந்த 'எல் அல்' விமானம் பல்கேரியாவின் வான் பரப்பில் இரண்டு போர் விமானங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதில், அனைத்து 58 பயணிகளும் உயிரிழந்தனர்.

1955 – மலேசியாவின் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக வீ. தி. சம்பந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1964 – வியட்நாம் போர்: அமெரிக்கா மேலும் 5,000 இராணுவ ஆலோசகர்களை தென் வியட்நாமிற்கு அனுப்பியது.

1975 – விடுதலைப்புலிகளின் முதலாவது ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டது. யாழ்ப்பாண மாநகர முதல்வர் அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார்.

1981 – மெக்சிக்கோவில் டிசி-9 ரக விமானம் ஒன்று தரையிறங்குகையில், ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதில்னாதில் பயணம் செய்த 66 பேரில் 32 பேர் உயிரிழந்தனர்.[1]

1983 – கறுப்பு யூலை: கொழும்பு வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற இரண்டாம் கட்ட படுகொலை நிகழ்வில் 18 தமிழ்க் கைதிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

1989 – கொரிய விமானம் திரிப்பொலி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் மோதியதில் விமானத்தில் இருந்த 199 பேரில் 75 பேரும் தரையில் நால்வரும் உயிரிழந்தனர்.

1990 – பெலருஸ் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்தது.

1990 – திரினிடாட் டொபாகோவில் இசுலாமியத் தீவிரவாதிகள் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பிரதமர் மற்றும் அமைச்சர்களை பணயக் கைதிகளாக ஆறு நாட்கள் வைத்திருந்தனர்.

1996 – அமெரிக்கா, அட்லான்டாவில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் போது குண்டு ஒன்று வெடித்தது.

1997 – அல்சீரியாவில் "சி செரூக்" என்ற இடத்தில் 50 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

2002 – உக்ரைனின் லிவீவ் நகரில் வான் களியாட்ட நிகழ்ச்சியின் போது சுகோய் எஸ்.யு-27 போர் விமானம் மக்களின் மீது வீழ்ந்ததில் 85 பேர் உயிரிழந்தனர், 100 பேர் காயமடைந்தனர்.

2015 – இந்திய பஞ்சாப் பகுதியில் குருதாசுபூர் காவல் நிலையம் தாக்கப்பட்டதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.

இன்றைய பிறப்புகள்


1759 – பியேர் உலூயிசு மவுபெர்திசு, பிரான்சியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (பி. 1698)

1801 – ஜார்ஜ் பிடெல் ஏரி, ஆங்கிலேயக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1892)

1850 – ஜார்ஜ் எட்வர்டு டேவிஸ், ஆங்கிலேய வேதிப் பொறியியலாளர் (இ. 1907)

1853 – விளாதிமிர் கொரலென்கோ, உக்ரைனிய எழுத்தாளர், ஊடகவியலாளர் (இ. 1921)

1876 – தேசிக விநாயகம்பிள்ளை, தமிழகக் கவிஞர் (இ. 1954)

1879 – சோமசுந்தர பாரதியார், தமிழகத் தமிழறிஞர் (இ. 1959)

1881 – ஆன்சு பிசர், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (இ. 1945)

1897 – ச. வெள்ளைச்சாமி, கொடைவள்ளல், சமூக சேவகர் (இ. 1983)

1907 – மௌனி, தமிழக எழுத்தாளர் (இ. 1985)

1911 – சங்கம் லக்ஷ்மி பாய், இந்திய சமூக ஆர்வலர், அரசியல்வாதி (இ. 1979)

1921 – காரி டேவிஸ், அமெரிக்க விமானி, செயற்பாட்டாளர் (இ. 2013)

1926 – நுவான் சியா, கம்போடிய அரசியல்வாதி, கெமர் ரூச்சின் தலைமைக் கருத்தாளர் (இ. 2019)

1927 – செல்லையா இராசதுரை, இலங்கை அரசியல்வாதி

1940 – பாரதி முகர்ஜி, இந்திய-அமெரிக்க எழுத்தாளர் (இ. 2017)

1940 – கா. அ. ஜெயசீலன், மலையாளக் கவிஞர்

1942 – திருச்சி சங்கரன், தமிழக மிருதங்கக் கலைஞர்

1955 – அலன் போடர், ஆத்திரேலியத் துடுப்பாளர்

1960 – உத்தவ் தாக்கரே, இந்திய அரசியல்வாதியும், சிவ சேனாவின் தலைவர்

1963 – சித்ரா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி

1965 – சசிகலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

1967 – ராகுல் போஸ், இந்திய நடிகர்

1972 – மாயா ருடால்ப், அமெரிக்க நடிகை

1977 – ஜானத்தன் ரீஸ் மயர்ஸ், ஐரிய நடிகர்

1987 – அருள்நிதி, தமிழ்த் திரைப்பட நடிகர்

1990 – கிருத்தி சனோன், இந்திய நடிகை

இன்றைய இறப்புகள் 


1844 – ஜான் டால்ட்டன், ஆங்கிலேய இயற்பியலாளர், வேதியியலாளர் (பி. 1776)

1929 – ரவுல் பிக்டே, சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் (பி. 1846)

1953 – சோமசுந்தரப் புலவர், ஈழத்துப் புலவர் (பி. 1878)

1960 – யூலி விண்டர் கான்சன், தென்மார்க்கு-சுவிட்சர்லாந்து வானியலாளர் (பி. 1890)

1963 – கர்ரெட் மார்கன், ஆப்பிரிக்க-அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் (பி. 1877)

1963 – ச. து. சு. யோகி, தமிழகத் தமிழறிஞர், திரைப்படப் பாடலாசிரியர், இயக்குநர் (பி. 1904)

1970 – பட்டம் தாணு பிள்ளை, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், \காந்தியவாதி (பி. 1885)

1975 – அல்பிரட் துரையப்பா, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1926)

1980 – முகம்மத் ரிசா ஷா பஹ்லவி, ஈரானிய மன்னர் (பி. 1919)

1981 – பால் பிராண்டன், பிரித்தானிய மெய்யியலாளர், இறை உணர்வாளர் (பி. 1898)

1987 – சலீம் அலி, இந்தியப் பறவையியல் வல்லுநர் (பி. 1896)

1988 – மீ. கல்யாணசுந்தரம், தமிழக அரசியல்வாதி (பி. 1909)

1992 – அம்ஜத் கான், இந்தித் திரைப்பட நடிகர் (பி. 1940)

1994 – கெவின் கார்ட்டர், தென்னாப்பிரிக்க ஊடகவியலாளர் (பி. 1960)

2015 – ஆ. ப. ஜெ. அப்துல் கலாம், தமிழக அறிவியலாளர், இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவர் (பி. 1931)

2016 – ஞானக்கூத்தன், தமிழகக் கவிஞர் (பி. 1938)

2017 – தரம்சிங், கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் (பி. 1936)

இன்றைய சிறப்பு நாள்


விடுதலைப் போர் வெற்றி நாள் (வட கொரியா)