👉 1829ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி ஐக்கிய அமெரிக்காவில் வில்லியம் ஒஸ்டின் பேர்ட் முதலாவது தட்டச்சு இயந்திரத்திற்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

நினைவு நாள் :-


சுப்பிரமணிய சிவா


👉விடுதலைப் போராட்ட வீரரும், ஆன்மிகவாதியுமான சுப்பிரமணிய சிவா 1884ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் பிறந்தார்.

👉திருவனந்தபுரத்தில் இளைஞர்களை ஒன்றுதிரட்டி 'தர்ம பரிபாலன சமாஜம்' என்ற அமைப்பை உருவாக்கினார். ஆங்கில அரசுக்கு எதிராக செயல்பட்டதால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். ஊர் ஊராக நடந்து சென்று விடுதலைக் கனலை மூட்டினார்.

👉'ஞானபானு' என்ற மாத இதழைத் தொடங்கினார். பிறகு 'பிரபஞ்சமித்திரன்' என்ற வார இதழைத் தொடங்கினார். அதில் நாரதர் என்ற புனைப்பெயரில் கட்டுரைகள் எழுதினார். மோட்ச சாதனை ரகசியம், அருள்மொழிகள், வேதாந்த ரகஸ்யம், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ச வைபவம் உட்பட 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது கவிதைகள் பின்னர் 'ஞானபானு' என்ற பெயரில் தொகுக்கப்பட்டது. வீரமுரசு என்று போற்றப்பட்ட சுப்பிரமணிய சிவா உடல்நிலை பாதிக்கப்பட்டு 41வது வயதில் 1925ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-


பால கங்காதர திலகர்


👉 விடுதலைப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் 1856ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தார்.

👉 இந்தியச் செல்வம் ஆங்கிலேயரால் கொள்ளையடிக்கப்படுவது குறித்த தாதாபாய் நவ்ரோஜியின் நூலும், அதை அடிப்படையாகக் கொண்டு விஷ்ணு சாஸ்திரி ஆற்றிய உரைகளும் ஆங்கில அரசுக்கு எதிராக இவரைச் சிந்திக்கச் செய்தன. சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவேன் என்று முழங்கினார்.

👉 ஸ்ரீஅரவிந்தர் உட்பட ஏராளமானோர் இவரது தலைமையில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய தேசிய காங்கிரஸில் 1889-ல் இணைந்தார். பல விடுதலை போராட்டங்களை முன்னின்று நடத்திய இவர், 1908லிருந்து 1914 வரை சிறையில் இருந்தார்.

👉 முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய இவர் தன்னுடைய 64வது வயதில் (1920) மறைந்தார்.


சந்திரசேகர ஆசாத்


🏁 இந்திய விடுதலைப் போராட்ட புரட்சி வீரர் சந்திரசேகர ஆசாத் 1906ஆம் ஆண்டு ஜீலை 23ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் சந்திரசேகர சீதாராம் திவாரி ஆகும்.

🏁 15 வயதில் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஒப்படைத்த போது, நீதிபதி இவரிடம் முகவரியை கேட்டதற்கு தந்தை பெயர் ஆசாத் (விடுதலை), முகவரி சிறை என்று பதில் கூறினார்.

🏁 கோபம் அடைந்த நீதிபதி அவரை 15 பிரம்படி கொடுத்து சிறையில் அடைக்க சொன்னார். ஆசாத், ஒவ்வொரு அடி விழும்போதும் 'பாரத் மாதா கீ ஜெய்' என முழங்கினார். பிறகு இவர் 'சந்திரசேகர ஆசாத்' என்று அழைக்கப்பட்டார்.

🏁 சுதந்திரத்தை அடைய, இந்துஸ்தான் குடியரசு அமைப்பைத் தொடங்கிய ராம் பிரசாத் பிஸ்மில்லின் அமைப்பில் இணைந்தார். பகத்சிங் உட்பட பல புரட்சியாளர்களுக்கு இவர் வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.

🏁 லாலா லஜ்பத்ராயின் மரணத்துக்கு காரணமாக இருந்த போலீஸ் அதிகாரியை சுட்டதால், 1931-ல் இவரை ஆங்கிலேய காவல்துறையினர் சுற்றி வளைத்த போது பிடிபடக்கூடாது என்று தன்னைத்தானே (24 வயது) சுட்டுக்கொண்டார்.


இன்றைய நிகழ்வுகள் 


811 – பைசாந்தியப் பேரரசர் முதலாம் நிக்கபோரசு பல்கேரியத் தலைநகர் பிளீசுக்காவை முற்றுகையிட்டு சூறையாடினார்.

1632 – புதிய பிரான்சில் குடியேறும் நோக்கில் முன்னூறு பிரெஞ்சுக் குடியேறிகள் பிரான்சின் தியப் நகரில் இருந்து புறப்பட்டனர்.

1793 – புருசியர்கள் இடாய்ச்சுலாந்தின் மாயின்சு நகரை பிரான்சிடம் இருந்து கைப்பற்றினர்.

1813 – மால்ட்டா பிரித்தானியாவின் அரச குடியேற்ற நாடானது. சர் தோமசு மெயிற்லண்ட் அதன் முதலாவது ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

1829 – ஐக்கிய அமெரிக்காவில் வில்லியம் ஆஸ்டின் பேர்ட் என்பவர் "டைப்போகிராஃபர் என்ற முதலாவது தட்டச்சியந்திரத்தைக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

1840 – கனடா மாகாணம் என்ற பெயரில் பிரித்தானிய குடியேற்ற நாடு வட அமெரிக்காவில் அமைக்கப்பட்டது.

1874 – இலங்கையின் சட்டசபையின் தமிழ்ப் பிரதிநிதி முத்து குமாரசுவாமி இங்கிலாந்தில் சேர் பட்டம் அளித்துக் கௌரவிக்கப்பட்டார்.[1]

1881 – சிலிக்கும் அர்கெந்தீனாவுக்கும் இடையில் எல்லை உடன்பாடு புவெனஸ் ஐரிஸ் நகரில் ஏற்படுத்தப்பட்டது.

1885 – அமெரிக்க அரசுத்தலைவர் யுலிசீஸ் கிராண்ட் தொண்டைப் புற்றுநோய் காரணமாக இறந்தார்.

1903 – போர்டு நிறுவனம் தனது முதலாவது தானுந்தை விற்றது.

1914 – ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட்டின் கொலையாளியைக் கண்டுபிடிக்க ஆத்திரியா-அங்கேரி சேர்பியாவுக்கு காலக்கெடு விதித்தது. இதனை அடுத்து சூலை 28, 1914 இல் முதலாம் உலகப் போர் ஆரம்பமானது.

1921 – சீனப் பொதுவுடமைக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

1927 – அனைத்திந்திய வானொலியின் முதலாவது வானொலி நிலையம் பம்பாய் நகரில் தனது ஒலிபரப்பு சேவையை ஆரம்பித்தது.

1929 – இத்தாலியில் பாசிச அரசு வெளிநாட்டுச் சொற்களைப் பயன்படுத்தத் தடை விதித்தது.

1942 – பெரும் இன அழிப்பு: போலந்தில் திரெப்ளிங்கா வதை முகாம் யூதர்களுக்காகத் திறக்கப்பட்டது.

1942 – பல்கேரியக் கவிஞரும், கம்யூனிசத் தலைவருமான நிக்கோலா வப்த்சாரொவ் சுட்டுக் கொல்லப்பட்டு மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.

1952 – 1952 எகிப்தியப் புரட்சி: எகிப்தின் பாரூக் மன்னரின் ஆட்சிக்கு எதிரான இயக்கத்தை ஜமால் அப்துல் நாசிரின் பின்னணியில் இராணுவத் தளபதி முகமது நாகிப் ஆரம்பித்தார்.

1961 – நிக்கராகுவாவில் சண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி அமைக்கப்பட்டது.

1962 – லாவோஸ் அரசியலில் வெளிநாடுகள் தலையிடாதிருக்க பன்னாட்டு ஒப்பந்தம் லாவோஸ் உட்பட 15 நாடுகளுக்கிடையில் ஜெனீவாவில் கையெழுத்திப்பட்டது.

1967 – அமெரிக்காவின் வரலாற்றில் மிகப் பெரும் கலவரம் ஆபிரிக்க அமெரிக்கர்கள் செறிந்து வாழும் டிட்ராயிட் நகரில் இடம்பெற்றது. 43 பேர் கொல்லப்பட்டு 342 பேர் காயமடைந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமான கட்டிடங்கள் எரிக்கப்பட்டன.

1968 – இசுரேலிய போயிங் 707 விமானம் 48 பேருடன் மூன்று பாலத்தீனத் தீவிரவாதிகளினால் கடத்தப்பட்டது. 40 நாட்களின் பின்னர் 16 அரபுப் போர்க் கைதிகளின் விடுவிப்புடன் கடத்தல் முடிவுக்கு வந்தது.

1970 – ஓமானில் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, சுல்தான் சயீது பின் தைமூர் அவரது மகன் காபூசு இப்னு சஈத் ஆலு சஈத்தால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1974 – கிரேக்க இராணுவ ஆட்சி கலைந்தது. கிரேக்கத்தின் முன்னாள் பிரதமர் கான்ஸ்தந்தீனசு கரமான்லிசு புதிய அரசை அமைக்க அழைக்கப்பட்டார்.

1980 – வியட்நாமைச் சேர்ந்த பாம் துவான் சோவியத்தின் சோயுஸ் 37 விண்கலத்தில் விண்ணுக்கு சென்ற முதலாவது ஆசியர் என்ற பெருமையைப் பெற்றார்.

1981 – இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

1983 – திருநெல்வேலி தாக்குதல், 1983: விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தில் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தியதில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். புலிகளின் மூத்த உறுப்பினர் செல்லக்கிளி இத்தாக்குதலில் கொல்லப்பட்டார்.

1983 – கறுப்பு யூலை: இலங்கையில் இரண்டு வாரங்களில் 3000 தமிழர்கள் சிங்கள பௌத்த இனவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆரம்பமானது.

1988 – பர்மாவில் இடம்பெற்ற மக்களாட்சிக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை அடுத்து 1962ம் ஆண்டில் இருந்து ஆட்சி நடத்திய இராணுவத் தளபதி நெ வின் பதவியைத் துறந்தார்.

1992 – அப்காசியா ஜோர்ஜியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1992 – தற்பால்சேர்க்கையாளர்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் தீர்மானத்தை யோசப் ரட்சிங்கர் தலைமையிலான சிறப்புக் குழு வத்திக்கானில் முடிவெடுத்தது.

1995 – ஏல்-பாப் என்ற வால்வெள்ளி சூரியனுக்கு வெகு தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட ஓராண்டிற்குப் பின்னர் வானில் தெரிந்தது.

1999 – தோக்கியோ நகரில் யப்பானிய விமானம் ஒன்று 517 பேருடன் கடத்தப்பட்டது. விமான ஓட்டி கொல்லப்பட்டார்.

1999 – சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம் என்ற செய்மதி ஏவப்பட்டது.

1999 – மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை: ஊதிய உயர்வு கேட்டு தமிழ்நாடு, திருநெல்வேலியில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய பேரணியின் போது காவல்துறை நடத்திய தடியடியில் பதினேழு பேர் உயிரிழந்தனர்.

2005 – எகிப்தில் இடம்பெற்ற மூன்று குண்டுவெடிப்புகளில் 88 பேர் கொல்லப்பட்டனர்.

2015 – கெப்லர்-452பி என்ற புறக்கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக நாசா அறிவித்தது.

இன்றைய பிறப்புகள்


1656 – குரு அர் கிருசன், சீக்கிய குரு (இ. 1664)

1856 – பால கங்காதர திலகர், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1920)

1890 – பெரி. சுந்தரம், இலங்கை மலையகத் தமிழ் அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (இ. 1957)

1892 – முதலாம் ஹைலி செலாசி, எத்தியோப்பியப் பேரரசர் (இ. 1975)

1898 – தாராசங்கர் பந்தோபாத்தியாய், வங்காள எழுத்தாளர் (இ. 1971)

1906 – சந்திரசேகர ஆசாத், இந்திய செயற்பாட்டாளர் (இ. 1931)

1928 – வேரா உரூபின், அமெரிக்க வானியலாளர்

1933 – டி. கே. எஸ். நடராஜன், தமிழகத் திரைப்பட நடிகர், நாட்டுப்புறப் பாடகர் (இ. 2021)

1934 – நிர்மலா ஜோஷி, இந்தியக் கத்தோலிக்க அருட்சகோதரி (இ. 2015)

1936 – அந்தோணி கென்னடி, அமெரிக்க வழக்கறிஞர்

1947 – எல். சுப்பிரமணியம், தமிழக வயலின் கலைஞர்

1951 – அஜித் ஜெயின், இந்தியத் தொழிலதிபர்

1953 – கிரகாம் கூச், ஆங்கிலேயத் துடுப்பாளர்

1953 – நஜீப் துன் ரசாக், மலேசியாவின் 6வது பிரதமர்

1957 – தியோ வான் கோ, டச்சு நடிகர், இயக்குநர் (இ. 2004)

1967 – பிலிப் சீமோர் ஹாப்மன், அமெரிக்க நடிகர் (இ. 2014)

1973 – ஹிமேஷ் ரேஷாமியா, இந்தியப் பாடகர், நடிகர்

1975 – சூர்யா, தமிழக நடிகர்

1976 – பவதாரிணி, தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர், பாடகி

1976 – ஜூடிட் போல்கர், அங்கேரிய சதுரங்க வீரர்

1982 – பவுல் வெஸ்லி, அமெரிக்க நடிகர்

1989 – டேனியல் ராட்க்ளிஃப், ஆங்கிலேய நடிகர்

இன்றைய இறப்புகள்


1577 – ஸ்கிபியோன் ரெபிபா, இத்தாலிய கத்தோலிக்க திருச்சபை கர்தினால் (பி. 1504)

1885 – யுலிசீஸ் கிராண்ட், அமெரிக்காவின் 18வது அரசுத்தலைவர் (பி. 1822)

1925 – சுப்பிரமணிய சிவா, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1884)

1927 – ரெசினால்டு டையர், பிரித்தானிய இராணுவத் தளபதி (பி. 1864)

1942 – வால்டெமர் பவுல்சன், டென்மார்க் பொறியியலாளர் (பி. 1869)

1989 – தேவிஸ் குருகே, இலங்கை வானொலியின் முதலாவது சிங்கள அறிப்பாளர்

1957 – பெ. வரதராஜுலு நாயுடு, இந்திய அரசியல்வாதி (பி. 1887)

1974 – ஹரி கிருஷ்ண கோனார், இந்திய மேற்கு வங்க அரசியல்வாதி (பி. 1915)

1976 – மார்ட்டின் விக்கிரமசிங்க, சிங்கள எழுத்தாளர் (பி. 1890)

1989 – தேவிஸ் குருகே, இலங்கை வானொலி அறிவிப்பாளர்

2004 – மெஹ்மூத், இந்தி சிரிப்பு நடிகர் (பி. 1932)

2012 – சாலி றைட், அமெரிக்க இயற்பியலாளர், விண்வெளி வீராங்கனை (பி. 1951)

2012 – இலட்சுமி சாகல், இந்திய அரசியல்வாதி (பி. 1914)

2013 – மஞ்சுளா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1953)

2014 – சி. நயினார் முகம்மது, தமிழகத் தமிழறிஞர், எழுத்தாளர்

2016 – சையது ஐதர் ராசா, இந்திய-பிரான்சிய ஓவியர் (பி. 1922)

இன்றைய சிறப்பு நாள் 


குழந்தைகள் நாள் (இந்தோனேசியா)

புரட்சி நாள் (எகிப்து, 1952)