🌐 கி.மு. 356ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றான ஆர்ட்டெமிஸ் கோவில் தீ வைத்து அழிக்கப்பட்டது.

📖 2007ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி ஹாரி பாட்டர் தொடர் நாவலின் கடைசிப் பாகம் வெளிவந்தது.

👉 1954ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

🌹 1899ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி இந்திய ஆன்மிகவாதி சாரதா தேவி மறைந்தார்.


நினைவு நாள் :-


சிவாஜி கணேசன்

👉புகழ்பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் சிவாஜி கணேசன் 1928ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி விழுப்புரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன்.

👉தமிழ் திரையுலகில், பராசக்தி என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமான சிவாஜி கணேசன் அவர்கள், முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த சிவாஜி கணேசன் அவர்கள், 1955 வரை திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பத்மஸ்ரீ விருது, பத்மபூஷன் விருது மற்றும் செவாலியே விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். இவர் தனது 74வது வயதில் 2001ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-


எர்னஸ்ட் ஹெமிங்வே

✍ நோபல் பரிசு பெற்ற சிறந்த எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான எர்னஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway) 1899ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலம் ஓக் பார்க் நகரில் பிறந்தார்.

✍ முதல் உலகப்போரின் போது இத்தாலி ராணுவத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக சேவை செய்ததற்காக இத்தாலியன் வீர சாகச பதக்கம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

✍ இவர் எ ஃபேர்வெல் டு ஆர்ம்ஸ், ஃபார் ஹும் தி பெல் டோல்ஸ் (1940), தி ஓல்ட் மேன் அண்ட் தி ஸீ (1951) போன்ற உலகப் புகழ் பெற்ற நூல்களை எழுதியுள்ளார். எழுதுவது போலவே, பல சாகச செயல்களையும் செய்து வந்தார்.

✍ இலக்கியத்துக்கான நோபல் பரிசு(1954), புலிட்சர் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

✍ தனித்துவமான எழுதும் பாணியில் இலக்கிய உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எர்னஸ்ட் ஹெமிங்வே 62வது வயதில் (1961) மறைந்தார்.


உமாசங்கர் ஜோஷி

🏁 சுதந்திரப் போராட்ட வீரரும், இலக்கியக் களத்தில் முக்கிய படைப்பாளியுமான உமாசங்கர் ஜோஷி (Umashankar Joshi) 1911ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி குஜராத் மாநிலம், சாபர்கண்ட் மாவட்டத்தின் பாம்னா கிராமத்தில் பிறந்தார்.

🏁 காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, 1930ல் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார். 1931ல் வெளிவந்த விஷ்வசாந்தி என்ற காவியம் இவரை இலக்கிய உலகில் முக்கியப் படைப்பாளியாக உயர்த்தியது.

🏁 அதை தொடர்ந்து இவர் இயற்றிய படைப்புகள் குஜராத் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன. ஞானபீட விருது, நர்மத் சுவர்ண சந்திரக் பரிசுகள், சோவியத் நேரு விருது, தில்லி சாகித்ய அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

🏁 இலக்கிய களத்தில் பன்முகப் பரிமாணம் கொண்ட உமாசங்கர் ஜோஷி 77வது வயதில் (1988) மறைந்தார்.

இன்றைய நிகழ்வுகள்


கிமு 356 – ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றான கிரேக்கக் கோயில் ஆர்ட்டெமிஸ் கோயில் தீவைத்துக் கொளுத்தப்பட்டு அழிக்கப்பட்டது.

230 – முதலாம் அர்பனுக்குப் பின்னர் போந்தியன் 18-வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.

365 – கிரேக்கத்தின் கிரேட்டு தீவில் பெரும் நிலநடுக்கம், ஆழிப்பேரலை ஏற்பட்டதில், லிபியா, அலெக்சாந்திரியாவில் பெரும் சேதம் ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

905 – இத்தாலியின் மன்னர் முதலாம் பெரெங்கார் அங்கேரியில் இருந்து தருவிக்கப்பட்ட கூலிப்படைகளுடன் இணைந்து வெரோனா நகரில் பிரான்சியப் படைகளைத் தோற்கடித்தனர். பிரான்சின் மூன்றாம் லூயி கைது செய்யப்பட்டு, குருடாக்கப்பட்டார்.[1]

1545 – ஆங்கிலக் கால்வாயில் வைட்டுத் தீவில் பிரெஞ்சுப் படைகள் முதல் தடவையாகத் தரையிறங்கின.

1718 – உதுமானியப் பேரரசு, வெனிசுக் குடியரசு, ஆத்திரியா ஆகியவற்றுக்கிடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது.

1774 – உருசியாவும் உதுமானியப் பேரரசும் தமது ஏழாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தன.

1798 – நெப்போலியனின் படைகள் உதுமானிய-மம்லூக் படைகளை கெய்ரோ அருகில் நடந்த போரில் வென்றன.

1831 – பெல்ஜியத்தின் முதலாவது மன்னர் முதலாம் லெப்பால்ட் முடிசூடினார்.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வர்ஜீனியாவில் இடம்பெற்ற முக்கியமான போரில் கூட்டமைப்பு அணி வெற்றி பெற்றது.

1907 – கலிபோர்னியாவில் கொலம்பியா பயணிகள் கப்பல் சான் பெத்ரோ கப்பலுடன் மோதியதில் 88 பேர் உயிரிழந்தனர்.

1919 – வான்கப்பல் ஒன்று சிகாகோவில் கட்டடம் ஒன்றுடன் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர்.

1925 – அமெரிக்காவில் டென்னிசி மாநிலத்தில் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் படிவளர்ச்சிக் கொள்கையை வகுப்பில் கற்பித்தமைக்காக ஆசிரியர் ஒருவருக்கு $100 தண்டம் அறவிடப்பட்டது.

1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் குவாமில் தரையிறங்கி சப்பானியப் படைகளுக்கெதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர் (ஆகத்து 10 இல் இது நிறைவடைந்தது).

1944 – இரண்டாம் உலகப் போர்: சூலை 20 இல் இட்லரை கொலை செய்யத் திட்டமிட்டவர்கள் பெர்லினில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1952 – கலிபோர்னியாவின் தெற்கே 7.3-அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.

1954 – ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் வடக்கு வியட்நாம், தெற்கு வியட்நாம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

1960 – சிறிமாவோ பண்டாரநாயக்கா இலங்கையின் பிரதமராகப் பதவியேற்றார். உலக நாடொன்றின் முதலாவது பெண் அரசுத்தலைவர் ஆவார்.

1961 – மனிதரை விண்ணுக்கு அனுப்பும் நாசாவின் திட்டத்தில் இரண்டாவது பயணம் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 4. கஸ் கிரிசம் என்பவர் விண்வெளிக்குப் பயணம் சென்றார்.

1964 – சிங்கப்பூரில் மலாய் மற்றும் சீனர்களுக்கிடையே கலவரம் மூண்டதில் 23 பேர் உயிரிழந்து பலர் காயமடைந்தனர்.

1969 – நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் நடந்த முதல் மனிதர் என்ற புகழைப் பெற்றார்.

1970 – 11 ஆண்டுகளின் பின்னர் எகிப்தில் அஸ்வான் அணை கட்டி முடிக்கப்பட்டது.

1972 – வட அயர்லாந்து தலைநகர் பெல்பாஸ்ட்டில் ஐரியக் குடியரசுப் படையினர் நடத்திய 22 தொடர் குண்டுவெடிப்புகளில் 9 பேர் கொல்லப்பட்டு 130 பேர் காயமடைந்தனர்.

1976 – அயர்லாந்துக்கான பிரித்தானியத் தூதுவர் ஐரியக் குடியரசுப் படையினரால் கொல்லப்பட்டார்.

1977 – நான்கு நாட்கள் நீடித்த லிபிய-எகிப்தியப் போர் ஆரம்பமானது.

1983 – குடியிருப்புப் பகுதி ஒன்றில் உலகின் மிகக்குறைந்த வெப்பநிலை −89.2 °C (−128.6 °F) அந்தாட்டிக்காவில் வசுத்தோக் நிலையத்தில் பதியப்பட்டது.

1995 – சீனக் குடியரசின் வடக்குப் பக்கக் கடற்பகுதி மீது மக்கள் விடுதலை இராணுவம் எறிகணைகளை வீசியது.

2001 – சப்பான், ஒக்கூராவில் பாதசாரிகளின் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். 120 பேர் காயமடைந்தனர்.

2008 – ராம் பரன் யாதவ் நேப்பாளத்தின் முதலாவது குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2011 – நாசாவின் விண்ணோடத் திட்டம் அட்லாண்டிசு தரையிறங்கியதுடன் நிறைவு பெற்றது.

இன்றைய பிறப்புகள்


1515 – பிலிப்பு நேரி, இத்தாலியக் கத்தோலிக்கப் புனிதர் (இ. 1595)

1620 – ழீன் பிக்கார்டு, பிரான்சிய வானியலாளர் (இ. 1682)

1654 – பேத்ரோ கலூங்சோத், பிலிப்பீனிய கத்தோலிக்கர், மறைபணியாளர் (இ. 1672)

1899 – ஏர்னெஸ்ட் ஹெமிங்வே, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (இ. 1961)

1911 – மார்ஷல் மெக்லுன், கனடிய மெய்யியலாளர் (இ. 1980)

1911 – எஃப். எக்ஸ். சி. நடராசா, ஈழத்து எழுத்தாளர்

1917 – க. சண்முகம்பிள்ளை, ஈழத்து மிருதங்கக் கலைஞர் (இ. 2010)

1929 – செமியோன் ரூதின், சோவியத் மொழியியலாளர், இந்தியவியலாளர், தமிழறிஞர் (இ. 1973)

1930 – ஆனந்த் பக்சி, இந்தியக் கவிஞர் (இ. 2002)

1934 – சந்து போர்டே, இந்தியத் துடுப்பாளர்

1940 – சங்கர்சிங் வகேலா, இந்திய, குஜராத் அரசியல்வாதி

1944 – ஜோன் அட்டா மில்ஸ், கானாவின் 3வது அரசுத்தலைவர் (இ. 2012)

1947 – சேட்டன் சவ்ஹான், இந்தியத் துடுப்பாளர்

1951 – ராபின் வில்லியம்ஸ், அமெரிக நடிகர் (இ. 2014)

1957 – இசுடீவன் இலோவென், சுவீடனின் 33வது பிரதமர்

1960 – அமர் சிங் சம்கிலா, இந்தியப் பாடகர் (இ. 1988)

1971 – ஆர். கண்ணன், இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர்

1975 – ரவீந்திர புஸ்பகுமார், இலங்கைத் துடுப்பாளர்

1978 – ஜஸ்டின் பர்தா, அமெரிக்க நடிகர்

1978 – ஜோஷ் ஹர்த்நேட், அமெரிக்க நடிகர்

1978 – டாமியன் மார்லி, யமெய்க்கா பாடகர்

1984 – பரத், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

இன்றைய இறப்புகள்


1796 – ராபர்ட் பர்ன்ஸ், இசுக்கொட்டியக் கவிஞர் (பி. 1759)

1889 – வேதநாயகம் பிள்ளை, தமிழக எழுத்தாளர் (பி. 1826)

1899 – இராபர்ட் கிரீன் இங்கர்சால், அமெரிக்க அரசியல்வாதி (பி. 1833)

1920 – பியம்மேத்தா வில்சன், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1864)

1929 – ஓ. தணிகாசலம் செட்டியார், நீதிக்கட்சித் தலைவர், வழக்குரைஞர் (பி. 1874)

1967 – ஆல்பர்ட் லுத்துலி, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க அரசியல்வாதி (பி. 1898)

1984 – டி. வி. இராமசுப்பையர், தமிழக ஊடகவியலாளர், தினமலர் நிறுவனர் (பி. 1908)

1998 – அலன் ஷெப்பர்ட், அமெரிக்க விண்வெளி வீரர் (பி. 1923)

2001 – சிவாஜி கணேசன், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1927)

2006 – எல். எம். நர்துக்கி, இத்தாலிய-அமொிக்க இயற்பியலாளா் (பி. 1942)

2007 – சு. ஜெயலட்சுமி, தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1920)

2009 – கங்குபாய், இந்துத்தானிப் பாடகி (பி. 1913)

இன்றைய சிறப்பு நாள்


விடுதலை நாள் (குவாம், 1944)

இன நல்லிணக்க நாள் (சிங்கப்பூர்)