👮 உலக வரலாற்றில் பெரும் வெற்றிகளைப் பெற்ற இராணுவத் தலைவர்களில் ஒருவரான கிரேக்க மன்னன் மாவீரர் அலெக்சாண்டர் கி.மு 356ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி பிறந்தார்.

📻 வானொலியை கண்டுபிடித்த மார்க்கோனி 1937ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி மறைந்தார்.

✍ தற்காப்புக்கலை நிபுணரும், ஹாலிவுட் நடிகருமான புரூஸ் லீ 1973ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி மறைந்தார். 

💪 1940ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி டென்மார்க் பன்னாட்டு அமைப்பில் இருந்து விலகியது.

✍ 1953ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி யூனிசெப் (United Nations Children's Fund) அமைப்பை நிரந்தரமாக்கும் முடிவு ஐ.நா.வில் எடுக்கப்பட்டது.

முக்கிய தினம் :-


சர்வதேச சதுரங்க தினம்


♗ உலக சதுரங்க கூட்டமைப்பு 1924ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி பாரிஸ் நகரில் நிறுவப்பட்டது. இது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனம்.

♘ இதன் குறிக்கோள் நாம் அனைவரும் ஒரே மக்கள் என்பதாகும். தற்போது இந்நிறுவனத்தில் 150க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இக்கூட்டமைப்பு ஜூலை 20ஆம் தேதியை சர்வதேச சதுரங்க தினமாக 1966ஆம் ஆண்டில் அறிவித்தது.


நிலவில் மனிதன் கால் பதித்த தினம்


👣 அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து நாசா விண்வெளி மையத்தின் சார்பில் 1969ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி அப்பலோ 11 என்ற விண்கலம் நிலவுக்கு பயணமானது. இதில் நீல் ஆம்ஸ்ட்ராங், பைலட் மைக்கேல் காலியன்ஸ் மற்றும் பைலட் எட்வின் ஆல்ட்ரின் ஆகிய மூன்று விண்வெளி வீரர்கள் பயணித்தனர்.

👣 இந்த விண்கலம் ஜூலை 20 அன்று நிலவில் இறங்கியது. அதில் நீல் ஆம்ஸ்ட்ராங், விண்கலத்தில் இருந்து இறங்கி நிலவில் முதலில் காலடி வைத்தார். நிலவில் கால் பதித்த முதல் மனிதர் என்ற சாதனையும் படைத்தார்.


பிறந்த நாள் :-


கிரிகோர் மெண்டல்


👥 மரபியலின் தந்தை கிரிகோர் யோஹன் மெண்டல் 1822ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி ஆஸ்திரியப் பேரரசின் ஹெய்ன்சன் டார்ஃப் நகரில் (இன்றைய செக் குடியரசு) பிறந்தார்.

👥 சிறுவயதிலிருந்தே இவருக்கு மரபுப் பண்புகள் ஆராய்ச்சிகளில் ஆர்வம் அதிகமாக இருந்தது. எனவே தனது தோட்டத்தில் பட்டாணிச் செடிகளை வளர்த்து ஆராய்ச்சி செய்து வந்தார்.

👥 மரபுப் பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு கடத்தப்படுவதைக் கண்டறிந்தார். இவையே மெண்டலின் விதிகள் எனப்படுகின்றன.

👥 உயிர் அறிவியலின் அடிப்படையைக் கண்டறிந்த மெண்டல் 62வது வயதில் (1884) மறைந்தார்.

இன்றைய நிகழ்வுகள் 

70 – எருசலேம் முற்றுகை: பேரரசர் வெசுப்பாசியானின் மகன் டைட்டசு, கோவில் மலையின் வடக்கே அந்தோனியா கோட்டை மீது தாக்குதலைத் தொடுத்தான்.

1402 – அங்காரா சமரில் பேரரசர் தைமூர் உதுமானியப் பேரரசர் சுல்தான் முதலாம் பயெசிதைத் தோற்கடித்தார்.

1592 – கொரியா மீதான முதலாவது சப்பானிய ஆக்கிரமிப்பின் போது, சப்பானியப் படையினர் பியொங்யாங் நகரைக் கைப்பற்றினர்.

1799 – டெக்கில் முதலாம் கியோர்கிசு எத்தியோப்பியாவின் பேரரசராக முடிசூடினார்.

1807 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் உலகின் முதலாவது உள் எரி பொறிக்கான காப்புரிமையை யோசெப் நிசிபோர் நியெப்சிற்கு வழங்கினார்.

1810 – பொகோட்டாவின் குடிமக்கள் எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தனர்.

1831 – செனெக்கா, சானீ அமெரிக்கப் பழங்குடிகள் மேற்கு ஒகையோவில் உள்ள தமது நிலங்களை மிசிசிப்பி ஆற்றின் மேற்குப் பகுதியின் 60,000 ஏக்கர் நிலங்களைப் பெற்றுக் கொண்டு விட்டுக் கொடுத்தனர்.[1]

1871 – பிரித்தானியக் கொலம்பியா கனடாவுடன் இணைந்தது.

1903 – போர்டு நிறுவனம் தனது முதலாவது தானுந்தை ஏற்றுமதி செய்தது.

1917 – முதலாம் உலகப் போர்: யுகோசுலாவிய இராச்சியத்தை உருவாக்கும் உடன்பாடு செர்பிய இராச்சியத்திற்கும் யுகோசுலாவ் குழுவிற்கும் இடையில் எட்டப்பட்டது.

1920 – பாரிசு அமைதி உடன்பாட்டிற்கமைய, கிரேக்க இராணுவம் சிலிவ்ரி நகரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 1923 இல் அந்நகரைத் துருக்கியிடம் இழந்தது.

1922 – உலக நாடுகள் சங்கம் ஆப்பிரிக்காவில் டோகோலாந்தை பிரான்சுக்கும், தங்கனீக்காவை ஐக்கிய இராச்சியத்துக்கும் வழங்கியது.

1932 – புருசிய இராணுவப் புரட்சியை அடுத்து செருமானிய அரசுத்தலைவர் புருசிய அரசைக் கலைத்தார்.

1935 – மிலனில் இருந்து பிராங்க்ஃபுர்ட் சென்ற விமானம் சுவிட்சர்லாந்து மலையில் மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர்.

1940 – டென்மார்க் உலக நாடுகள் அமைப்பில் இருந்து விலகியது.

1944 – இரண்டாம் உலகப் போர்: செருமனிய இராணுவத் தளபதி ஒருவனால் இட்லர் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியில் இருந்து அவர் தப்பினார்.

1949 – 19 மாதப் போரின் முடிவில் இசுரேலும் சிரியாவும் போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டன.

1951 – யோர்தான் மன்னர் முதலாம் அப்துல்லா எருசலேமில் வெள்ளிக்கிழமைத் தொழுகையின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

1954 – மேற்கு செருமனியின் உளவுத்துறைத் தலைவர் ஒட்டோ ஜோன் கிழக்கு செருமனிக்குத் தப்பிச் சென்றார்.

1960 – சிறிமாவோ பண்டாரநாயக்கா இலங்கையின் பிரதமராகத் தெரிவானார். இவரே உலகில் தெரிவுசெய்யப்பட்ட முதலாவது பெண் அரசுத்தலைவர் ஆவார்.

1962 – கொலம்பியாவில் நிலநடுக்கத்தில் 40 பேர் உயிரிழந்தனர்.

1964 – வியட்நாம் போர்: வியட்கொங் படைகள் "காய் பே" நகரைத் தாக்கி 11 தென் வியட்நாமியப் படையினரையும் 40 பொதுமக்களையும் கொன்றனர்.

1969 – அப்பல்லோ திட்டம்: நாசாவின் அப்பல்லோ 11 சந்திரனில் இறங்கியது. நீல் ஆம்ஸ்ட்றோங், எட்வின் ஆல்ட்ரின் ஆகியோர் முதல் மனிதர்களாக சந்திரனில் காலடி வைத்தனர்.

1969 – உதைப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் ஒண்டுராசுக்கும் எல் சல்வதோருக்கும் இடையே இடம்பெற்ற கலவரங்களை அடுத்து ஆரம்பித்த 6-நாள் போர் முடிவுக்கு வந்தது.

1974 – சைப்பிரசில் அரசுத்தலைவர் மூன்றாம் மக்காரியோசுக்கு எதிராக கிரேக்க ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சியை அடுத்து துருக்கியப் படைகள் அங்கு முற்றுகையிட்டன.

1976 – அமெரிக்காவின் வைக்கிங் 1 விண்கலம் செவ்வாயில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

1977 – அமெரிக்கா, பென்சில்வேனியா, யேம்சுடவுன் நகரில் இடம்பெற்ற பெர்ம் வெள்ளத்தில் 84 பேர் உயிரிழந்தனர்.

1979 – இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

1980 – இசுரேலின் தலைநகராக எருசலேம் நகரை ஐநா உறுப்பு நாடுகள் அங்கீகரிக்க முடியாதவாறு ஐநா பாதுகாப்பு அவை 14-0 என்ற வாக்குகளால் தடையுத்தரவைப் பிறப்பித்தது.

1982 – ஐரியக் குடியரசுப் படையினரால் இலண்டனில் நடத்தப்பட்ட இரு வெடிகுண்டுத் தாக்குதல்களில் 8 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 47 பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.

1985 – நெதர்லாந்து அண்டிலிசுவில் இருந்து வெளியேறும் தீர்மானத்தை அரூபா அரசு கொண்டுவந்தது.

1989 – பர்மாவின் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூச்சி இராணுவ ஆட்சியாளர்களால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

1992 – செக்கோசிலோவாக்கியாவின் பிரதமர் வாக்லாவ் அவொல் பதவி விலகினார்.

1997 – இலங்கையின் மூதூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஈ. எச். மகரூப் மற்றும் ஐவர் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.[2]

2005 – கனடாவில் ஒருபால் திருமணம் சட்டபூர்வமாக்கப்பட்டது.

2012 – அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் திரையரங்கு ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்க்சி சூட்டு நிகழ்வில் 12 பேர் கொல்லப்பட்டனர், 70 பேர் காயமடைந்தனர்.

2013 – கொலம்பியாவின் ஆயுதமேந்திய புரட்சிப் படைப் போராளிகளின் தாக்குதலில் 17 அரசுப் படையினர் கொல்லப்பட்டனர்.

2015 – ஐம்பதாண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்காவும் கியூபாவும் முழுமையான தூதரக உறைவை ஏற்படுத்திக் கொண்டன.

இன்றைய பிறப்புகள்


கிமு 356 – பேரரசர் அலெக்சாந்தர், மக்கெதோனிய மன்னர் (இ. கிமு 323)

647 – முதலாம் யசீத், அராபியக் கலீபு (இ. 683)

1804 – இரிச்சர்டு ஓவன், ஆங்கிலேய உயிரியலாளர் (இ. 1892)

1822 – கிரிகோர் மெண்டல், ஆத்திரிய-செருமானிய உயிரியலாளர் (இ. 1884)

1855 – பியேர் என்றி பியூசெயூக்சு, பிரான்சிய வானியலாளர் (இ. 1928)

1870 – அலெக்சேய் பாவ்லோவிச் கான்சுகி, உருசிய வானியலாளர் (இ. 1908)

1890 – யூலி விண்டர் கான்சன், தென்மார்க்கு-சுவிட்சர்லாந்து வானியலாளர் (இ. 1960)

1901 – ஜெரோம் எமிலியானுஸ்பிள்ளை, ரோமன்-கத்தோலிக்க யாழ்ப்பாண ஆயர் (பி. 1962)

1919 – எட்மண்ட் இல்லரி, நியூசிலாந்து மலையேறி (இ. 2008)

1923 – மு. சிவசிதம்பரம், ஈழத் தமிழ் அரசியல்வாதி (இ. 2002)

1925 – பிரன்சு ஃபனோன், பிரெஞ்சு-அல்சீரிய மெய்யியலாளர் (இ. 1961)

1938 – ப. வேலு, மலேசியாவில் எழுத்தாளர்

1943 – முத்து சிவலிங்கம், இலங்கை அரசியல்வாதி

1968 – எஸ். ஜே. சூர்யா, தமிழகத் திரைப்பட இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர்

இன்றைய இறப்புகள் 


1296 – ஜலாலுதீன் ஃபைருஸ் கில்ஜி, தில்லி சுல்தான்

1866 – பேர்னாட் ரீமன், செருமன் கணிதவியலாளர் (பி. 1826)

1903 – பதின்மூன்றாம் லியோ (திருத்தந்தை) (பி. 1810)

1920 – சாரதா தேவி, ஆன்மிகவாதியும், இராமகிருஷ்ணரின் மனைவி (பி. 1853)

1937 – மார்க்கோனி, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய இயற்பியலாளர் (பி. 1874)

1951 – ஜோர்தானின் முதலாம் அப்துல்லா (பி. 1882)

1965 – பதுகேஷ்வர் தத், இந்திய செயற்பாட்டாளர் (பி. 1910)

1972 – கீதா தத், இந்திய நடிகை, பாடகி (பி. 1930)

1973 – புரூசு லீ, அமெரிக்க நடிகர் (பி. 1940)

1997 – எம். ஈ. எச். மகரூப், இலங்கை அரசியலாவதி (பி. 1939)

2014 – தண்டபாணி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

2020 – கர்ணன், தமிழக எழுத்தாளர் (பி. 1938)

இன்றைய சிறப்பு நாள்


பன்னாட்டு நட்பு நாள் (அர்கெந்தீனா, பிரேசில்)

விடுதலை நாள் (கொலம்பியா, 1810வில் எசுப்பானியாவிடம் இருந்து)

மர நடுகை நாள் (மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு)

அனைத்துலக சதுரங்க நாள்