👉 1923ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி இந்திய எழுத்தாளர் ஜி.ஏ.குல்கர்னி பிறந்தார். 

👉 வேலூர் சிப்பாய் எழுச்சி தினம் :1806ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி தமிழ்நாட்டில் வேலூர் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சியில் நூற்றுக்கணக்கான ஆங்கிலப் படையினர் கொல்லப்பட்டனர்.


பிறந்த நாள் :-


சுனில் கவாஸ்கர்

👉 உலக அளவில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் சுனில் கவாஸ்கர் 1949ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.

👉 இவர் 1966,67ல் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார். மேற்கிந்திய தீவு அணிக்கு எதிராக 1975,76ல் நடந்த போட்டியின் 2, 3,வது டெஸ்ட்களில் 156 மற்றும் 102 ரன்கள் எடுத்தார்.

👉 இவர் மொத்தம் 125 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாகவும் இருந்துள்ளார். ரஞ்சிக் கோப்பை, இரானி கோப்பை உட்பட 100 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

👉 பத்மபூஷண், அர்ஜுனா விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை படைத்த இவர் 70வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.


ஆலிஸ் ஆன் முன்ரோ

👉 இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவரும், உலகப் புகழ்பெற்ற படைப்பாளியுமான ஆலிஸ் ஆன் முன்ரோ 1931ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி கனடாவில் பிறந்தார்.

👉 இவரது முதல் நூல்கள் தி டைமன்ஷன்ஸ் ஆஃப் ஏ ஷாடோ (The Dimensions of a Shadow), டான்ஸ் ஆஃப் தி ஹாப்பி ஷேட்ஸ்(Dance of the Happy Shades) முதல் கதை தொகுப்பாகும். தொடர்ந்து பல்வேறு பிரபலமான பத்திரிகைகளில் இவரது நூல்கள் வெளிவந்தன.

👉 இவர் கனடாவின் புனைக்கதைகளுக்கான ஆளுநர் விருதை (Governor General's Award)) மூன்று முறையும், மான் புக்கர் விருது (Man Booker), ஓ ஹென்றி விருது, எட்வர்ட் மெக்டோவெல் பதக்கம், டபிள்யு.ஹெச்.ஸ்மித் இலக்கிய விருது என பல விருதுகளை வென்றுள்ளார்.

👉 புனைக்கதையின் மிகப்பெரிய எழுத்தாளர் என்றும், கனடாவின் செக்கோவ் (Chekhov) என்றும் புகழப்பட்ட ஆலிஸ் ஆன் முன்ரோ இன்று 88வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

நிகழ்வுகள்


988 – டப்லின் நகரம் அமைக்கப்பட்டது.

1086 – டென்மார்க் மன்னர் நான்காம் கனூட் கிளர்ச்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

1212 – லண்டன் நகரின் பெரும் பகுதியை தீ அழித்தது.

1460 – வாரிக் துணைநிலை மன்னர் ரிச்சார்ட் நெவில் இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னரின் படைகளை நோர்த்தாம்ப்டன் நகரில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்து மன்னரைச் சிறைப்பிடித்தார்.

1499 – வாஸ்கோ ட காமாவுடன் பயணம் செய்து இந்தியாவுக்கான பயண வழியைக் கண்டறிந்த பின்னர் போர்த்துக்கீச நாடுகாண் பயணி நிக்கொலோ கோலியோ லிஸ்பன் திரும்பினார்.

1553 – ஜேன் கிரே இங்கிலாந்தின் அரசியாக முடிசூடினார். இவர் 9 நாட்கள் மட்டுமே பதவியில் இருந்தார்.

1584 – ஒல்லாந்து, டெல்ஃப்ட் நகரில் ஒரேஞ்சு மன்னர் முதலாம் வில்லியம் படுகொலை செய்யப்பட்டார்.

1778 – அமெரிக்கப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி மன்னர் பிரித்தானியா மீது போரை அறிவித்தார்.

1796 – ஒவ்வொரு நேர் முழு எண்ணும் அதிகபட்சம் மூன்று முக்கோண எண்களின் கூட்டுத்தொகையாகக் கொடுக்கலாம் என்பதை கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் கண்டுபிடித்தார்.

1806 – வேலூர் சிப்பாய் எழுச்சி: தமிழ்நாட்டில் வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சியில் பல ஆங்கிலேயப் படையினர் கொல்லப்பட்டனர்.

1869 – சுவீடனில் காவ்லி நகர் தீயில் அழிந்தது. நகரின் 80% குடிமக்கள் வீடுகளை இழந்தனர்.

1882 – பெருவுடனான போரில் சிலி பெரும் இழப்பைச் சந்தித்தது.

1890 – வயோமிங் ஐக்கிய அமெரிக்காவின் 44வது மாநிலமாகச் சேர்க்கப்பட்டது.

1909 – செருமனியின் எம்டன் நாசகாரிக் கப்பல் சேவைக்கு விடப்பட்டது.

1913 – கலிபோர்னியாவின் சாவுப் பள்ளத்தாக்கில் வெப்பநிலை 134 °ப (57 °செ) ஆகப் பதியப்பட்டது. உலகில் பதியப்பட்ட அதியுயர் வெப்பநிலை இதுவாகும்.

1921 – வட அயர்லாந்து, பெல்பாஸ்ட் நகரில் துப்பாக்கிச் சூடு, மற்றும் வன்முறைகளில் 16 பேர் கொல்லப்பட்டன, 161 வீடுகள் சேதமடைந்தன.

1925 – சோவியத் ஒன்றியத்தின் செய்தி நிறுவனம் டாஸ் ஆரம்பிக்கப்பட்டது.

1925 – இந்திய ஆன்மிகத் தலைவர் மெகர் பாபா இறக்கும் வரையான (44-ஆண்டுகள்) மௌன விரதத்தை ஆரம்பித்தார். இந்நாள் அமைதி நாளாக அவரின் பக்தர்களால் நினைவுகூரப்படுகிறது.

1938 – ஓவார்டு இயூசு 91-மணி நேரத்தில் உலகைச் சுற்றிவரும் விமானப் பயணத்தை ஆரம்பித்தார். இது புதிய உலக சாதனை ஆகும்.

1941 – இரண்டாம் உலகப் போர்: போலந்தின் ஜெட்வாப்னி நகரில் நூற்றுக்கணக்கான யூதர்கள் நாட்சி ஜெர்மனியரினால் படுகொலை செய்யப்பட்டனர்.

1942 – நெதர்லாந்தும் சோவியத் ஒன்றியமும் தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்டன.

1943 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு சிசிலியில் ஆரம்பமானது.Samuel Eliot Morison (2002). Sicily-Salerno-Anzio. University of Illinois press.

1947 – முகம்மது அலி ஜின்னா பாக்கித்தானின் முதலாவது ஆளுநராக பிரித்தானியப் பிரதமர் கிளமெண்ட் அட்லீயினால் பரிந்துரைக்கப்பட்டார்.

1951 – கொரியப் போர்: அமைதிப் பேச்சுக்கள் கேசாங் நகரில் ஆரம்பமாயின.

1962 – உலகின் முதல் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் டெல்ஸ்டார் விண்ணில் ஏவப்பட்டது.

1966 – மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் சிகாகோ விடுதலை இயக்கம் 60,000 பேர் கலந்து கொண்ட பெரும் பேரணியை நடத்தியது.

1973 – வங்காள தேசத்தை அங்கீகரிக்கும் தீர்மானம் பாக்கித்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

1973 – பகாமாசு பொதுநலவாயத்தின் கீழ் முழுமையான விடுதலை அடைந்தது.

1976 – அங்கோலாவில் நான்கு கூலிப் படையினர் (ஒரு அமெரிக்கர், மூன்று பிரித்தானியர்) தூக்கிலிடப்பட்டனர்.

1978 – மூரித்தானியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அரசுத்தலைவர் மொக்தார் டாடா பதவியிழந்தார்.

1985 – கிரீன்பீஸ் கப்பல் ரெயின்போ வாரியர் ஓக்லாந்து துறைமுகத்தில் பிரெஞ்சு முகவர்களினால் குண்டு வைத்துத் மூழ்கடிக்கப்பட்டது.

1985 – சோவியத் உசுபெக்கித்தானில் ஏரோபுளொட் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 200 பேரும் உயிரிழந்தனர்.

1991 – தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் முடிவுக்கு வந்ததை அடுத்து தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையில் மீண்டும் சேர்க்கப்பட்டது.

1991 – போரிஸ் யெல்ட்சின் உருசியாவின் முதலாவது அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

1991 – யாழ்ப்பாணம் ஆனையிறவு இராணுவத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் போர் தொடுத்தனர்.

1992 – போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல குற்றங்களுக்காக முன்னாள் பனாமாத் தலைவர் மனுவேல் நொரியேகா புளோரிடாவில் 40 ஆண்டு கால சிறைத்தண்டனை பெற்றார்.

1997 – நியண்டர்தால் மனிதனின் எலும்புக்கூட்டில் இருந்து பெறப்பட்ட டி. என். ஏ. ஆய்வுகளில் இருந்து கூர்ப்பின் "நவீன மனிதரின் ஆப்பிரிக்கத் தோற்றக் கோட்பாட்டுக்கு" ஆதரவான முடிவுகள் இலண்டனில் பெறப்பட்டன.

2006 – இந்தியாவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்சாட்-4 செயற்கைக் கோளை ஏற்றிச் சென்ற ஜி.எஸ்.எல்.வி. விண்கலம் இயந்திரக் கோளாறினால் கடலில் வீழ்ந்தது.

2011 – உருசியப் பயணிகள் கப்பல் பல்கேரியா வோல்கா ஆறு தத்தாரித்தானில் வோல்கா ஆற்றில் மூழ்கியதில் 122 பேர் உயிரிழந்தனர்.

2017 – ஈராக்கின் மோசுல் நகரம் இசுலாமிய அரசுப் போராளிகளிடம் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டது.

பிறப்புகள்


1509 – ஜான் கால்வின், பிரான்சிய இறையியலாளர் (இ. 1564)

1682 – பர்த்தலோமேயு சீகன்பால்க், செருமானிய மதப்பரப்புனர், மொழியியலாளர் (இ. 1719)

1832 – ஆல்வன் கிரகாம் கிளார்க், அமெரிக்க வானியலாளர் (இ. 1897)

1856 – நிக்கோலா தெஸ்லா, செர்பிய-அமெரிக்க இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 1943)

1871 – மார்செல் புரூஸ்ட், பிரான்சிய எழுத்தாளர் (இ. 1922)

1919 – கரிச்சான் குஞ்சு, தமிழக எழுத்தாளர் (இ. 1992)

1920 – ஓவன் சேம்பர்லேன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2006)

1925 – மகாதீர் பின் முகமது, மலேசியாவின் 4வது பிரதமர்

1930 – இந்திரா பார்த்தசாரதி, தமிழக எழுத்தாளர்

1931 – ஆலிசு மன்ரோ, நோபல் பரிசு பெற்ற கனடிய எழுத்தாளர்

1939 – சரத் அமுனுகம, இலங்கை அரசியல்வாதி.

1940 – மேக்நாத் தேசாய், இந்திய-ஆங்கிலேய பொருளியலாளர், அரசியல்வாதி

1944 – கே. எஸ். பாலச்சந்திரன், ஈழத்து-கனடிய நடிகர், நாடகக் கலைஞர் (இ. 2014)

1945 – வெர்ஜினியா வேடு, ஆங்கிலேய டென்னிசு ஆட்டக்காரர்

1947 – கோட்டா சீனிவாச ராவ், தென்னிந்திய நடிகர், பாடகர்

1949 – சுனில் காவஸ்கர், இந்தியத் துடுப்பாளர்

1950 – புரோகோபிசு பாவ்லோபூலோசு, கிரேக்க அரசியல்வாதி

1951 – ராஜ்நாத் சிங், இந்திய அரசியல்வாதி

1958 – எல். கைலாசம், தமிழக புதின எழுத்தாளர்

1959 – எலன் குராஸ், அமெரிக்க இயக்குநர், ஒளிப்பதிவாளர்

1960 – சேத் கோடின், அமெரிக்க எழுத்தாளர்

1968 – அசின் விராத்து, பர்மிய பௌத்த துறவி

1980 – ஜெசிக்கா சிம்சன், அமெரிக்க நடிகை, பாடகி

இறப்புகள்


1851 – லூயி தாகர், பிரெஞ்சு இயற்பியலாளர், கண்டுபிடிப்பாளர் (பி. 1787)

1953 – சோமசுந்தரப் புலவர், ஈழத்துப் புலவர் (பி. 1878)

1990 – காந்தரூபன், விடுதலைப் புலிகளின் கரும்புலி (பி. 1971)

2000 – நாவேந்தன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1932)

2006 – ஷமீல் பசாயெவ், செச்சினியப் போராளித் தலைவர் (பி. 1965)

2014 – சோரா சேகல், இந்திய ந்டிகை (பி. 1912)

2015 – உமர் சரீப், எகிப்திய நடிகர் (பி. 1932)

சிறப்பு நாள்


விடுதலை நாள் (பகாமாசு, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1973)