👉 1946ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி அமெரிக்காவின் 43வது அதிபர் ஜார்ஜ் வாக்கர் புஷ் (George Walker Bush) பிறந்தார்.


👉 2002ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி இந்திய தொழிலதிபர் திருபாய் அம்பானி மறைந்தார். 

👉 1986ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி முன்னாள் இந்தியத் துணைப் பிரதமர் ஜெகசீவன்ராம் மறைந்தார். 

👉 1854ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி ஓமின் விதியை உருவாக்கிய ஜார்ஜ் ஓம் மறைந்தார்.


முக்கிய தினம் :-


உலக ஜூனோசிஸ் தினம்


🐱 ஜூனோசிஸ் என்பது விலங்குகளுக்கு ஏற்படும் வியாதி. இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. 

🐱 காட்டு விலங்குகள், வீட்டில் வளர்க்கும் பூனை, நாய், எலி மூலமும் மனிதர்களுக்குப் பரவுகின்றன. சில ஆட்கொல்லி நோய்களும் விலங்குகள் மூலம் பரவுகின்றன. 

🐱 விலங்குகள் மூலம் பரவும் இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே ஜூலை 6ஆம் தேதி இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.


பிறந்த நாள் :-


பரிதிமாற் கலைஞர்

✍ தமிழுக்கு தொண்டாற்றிய பரிதிமாற் கலைஞர் 1870ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி மதுரையில் திருப்பரங்குன்றம் அடுத்த விளாச்சேரியில் பிறந்தார். இவரது இயற்பெயர் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி.

✍ இவர் தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவர் ஆவார். இளம் வயது முதலே தமிழ் மொழியின் மீதும், இலக்கணத்தின் மீதும், இலக்கியத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். 

✍ தமிழ் அறிவும், ஆர்வமும் கொண்ட மாணவர்களுக்கு தொல்காப்பியம், நன்னூல், சைவ சமய சாஸ்திர நூல்களைக் கற்பித்தார். தமிழை செம்மொழி என முதன்முதலில் மெய்ப்பித்தவர் இவர்தான்.

✍ இவர் சூரியநாராயண சாஸ்திரியார் என்ற தனது வடமொழிப் பெயரை பரிதிமாற் கலைஞர் என தமிழில் மாற்றிக்கொண்டார். இவர் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். 

✍ திராவிட சாஸ்திரி என சிறப்பிக்கப்பட்ட பரிதிமாற் கலைஞர் தனது 33வது (1903) வயதில் மறைந்தார்.

நிகழ்வுகள்


1044 – புனித ரோமப் பேரரசன் மூன்றாம் என்றி அங்கேரி மீது படையெடுத்தான்.

1189 – முதலாம் ரிச்சார்டு இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.

1348 – கறுப்புச் சாவுக்குக் காரணமான யூதர்களைப் பாதுகாப்பதற்கான ஆணை ஓலையையை திருத்தந்தை ஆறாம் கிளெமெண்டு வெளியிட்டார்.

1411 – தனது மூன்றாவது செல்வம் தேடும் பயணத்தை முடித்துக் கொண்டு நாஞ்சிங் திரும்பிய மிங் சீனத் தளபதி செங் ஹே, தனது பயணத்தின் போது இலங்கையில் மிங்-கோட்டைப் போரில் கைது செய்த இலங்கை மன்னன் அழகக்கோனை யொங்கில் பேரரசரிடம் ஒப்படைத்தார்.

1483 – மூன்றாம் ரிச்சார்டு இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார்.

1484 – போர்த்துக்கீச மாலுமி டியாகோ காவோ கொங்கோ ஆற்றின் வாயிலைக் கண்டார்.

1535 – சேர் தாமஸ் மோர் நாட்டுத் துரோகத்துக்காக இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னரினால் தூக்கிலிடப்பட்டார்.

1557 – இங்கிலாந்தின் முதலாம் மேரியின் கணவர் எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு மன்னர் பிரான்சுடன் போர் புரிவதற்காக டோவர் துறையில் இருந்து புறப்பட்டார். மேரி தனது கணவரைப் பின்னர் பார்க்கவில்லை.

1630 – முப்பதாண்டுப் போர்: நான்காயிரம் சுவீடன் படைகள் குசுதாவசு அடால்பசு தலைமையில் செருமனியின் பொமிரானியா நகரை அடைந்தன.

1854 – ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் முதலாவது மாநாடு மிச்சிகனில் நடைபெற்றது.

1885 – பிரெஞ்சு வேதியியலாளர் லூயி பாஸ்ச்சர் தான் கண்டுபிடித்த தடுப்பூசி மருந்தை வெறிநாய்க்கடியினல் நோய் வாய்ப்பட்ட 9 வயது யோசப் மைசிட்டர் என்ற சிறுவனில் வெற்றிகரமாகச் சோதனை செய்தார்.

1892 – தாதாபாய் நௌரோஜி பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முதலாவது இந்தியப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1917 – முதலாம் உலகப் போர்: அரபுக் கிளர்ச்சியின் போது அராபியப் படைகள் லாரன்சு தலைமையில் அக்காபாவை உதுமானியரிடம் இருந்து கைப்பற்றினர்.

1935 – சிங்கப்பூரின் தமிழ் நாளிதழ் தமிழ் முரசு ஆரம்பிக்கப்பட்டது.

1939 – நாட்சி ஜெர்மனியில் இருந்த கடைசி யூத தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.

1941 – செருமானிய இராணுவம் சிமோலியென்சுக்கின் அருகில் சோவியத் இராணுவத்தினரை சிற்றி வளைத்தன.

1944 – அமெரிக்காவில் ஹார்ட்பர்ட் நகரில் கழைக்கூத்து அரங்கில் இடம்பெற்ற பெரும் தீயில் சிக்கிய 168 பேர் உயிரிழந்தனர், 700 பேர் வரை காயமடைந்தனர்..

1947 – சோவியத் ஒன்றியம் ஏகே-47 துப்பாக்கிகளைத் தயாரிக்க ஆரம்பித்தது.

1956 – சிங்களம் இலங்கையின் அதிகாரபூர்வ மொழியானது.

1962 – இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவைக் கொலை செய்த குற்றத்திற்காக சோமாராம தேரர் என்ற பௌத்தத் துறவி தூக்கிலிடப்பட்டார்.

1964 – மலாவி ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1966 – மலாவி குடியரசாகியது. ஹேஸ்டிங்ஸ் கமுசு பண்டா அதன் முதல் அரசுத்தலைவரானார்.

1967 – நைசீரிய உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

1975 – கொமொரோசு பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1988 – வட கடலில் எண்ணெய் அகழ்வு நிலையம் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பில் 167 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

1989 – டெல் அவீவ்–எருசலேம் பேருந்து ஒன்றைக் கைப்பற்றிய பாலத்தீன இசுலாமிய ஜிகாத் உறுப்பினர் ஒருவர் அதனை குன்று ஒன்றின் மீது மோத வைத்ததில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

2006 – 44 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய சீனப் போரின் போது மூடப்பட்ட சிக்கிமையும் திபெத்தையும் இணைக்கும் நாதூ லா கணவாய் பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.

2013 – நைஜீரியாவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 42 பேர் கொல்லப்பட்டனர்.

2013 – போயிங் 777 விமானம் சான் பிரான்சிஸ்கோ பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர், 181 பேர் காயமடைந்தனர்.

2013 – கனடாவின் கியூபெக்கில் எண்ணெய்த் தொடருந்து ஒன்று தடம் புரண்டு வெடித்ததில் 47 பேர் உயிரிழந்தனர், நகரின் மத்திய பகுதியில் 30 கட்டடங்கள் சேதமடைந்தன.

பிறப்புகள்


1781 – இசுடாம்போர்டு இராஃபிள்சு, ஆங்கிலேய அரசியல்வாதி, சிங்கப்பூரை நிறுவியவர் (இ. 1826)

1832 – முதலாம் மாக்சிமிலியன், மெக்சிக்கோ பேரரசர் (இ. 1867)

1837 – ராம்கிருட்டிண கோபால் பண்டார்கர், இந்தியக் கீழ்த்திசை மொழிப்புலமையாளர் (இ. 1925)

1870 – பரிதிமாற் கலைஞர், தமிழறிஞர் (இ. 1903)

1901 – சியாமா பிரசாத் முகர்ஜி, மேற்கு வங்க அரசியல்வாதி (இ. 1953)

1907 – பிரிடா காலோ, மெக்சிக்கோ ஓவியர், கல்வியியலாளர் (இ. 1954)

1914 – எர்னஸ்ட் கர்கென்டல், அமெரிக்க வேதியியலாளர், உலோகவியலாளர் (இ.2005)

1921 – நான்சி ரேகன், அமெரிக்க நடிகை, அமெரிக்காவின் 42வது முதல் பெண்மணி (இ. 2016)

1930 – எம். பாலமுரளிகிருஷ்ணா, கருநாடக இசைப் பாடகர் (இ. 2016)

1932 – பூ. கணேசலிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி

1935 – டென்சின் கியாட்சோ (14வது தலாய் லாமா)

1935 – ஆர். சண்முகம் மலேசிய எழுத்தாளர்

1937 – மைக்கேல் சாட்டா, சாம்பியாவின் 5வது சனாதிபதி (இ. 2014)

1940 – நுர்சுல்தான் நசர்பாயெவ், கசக்ஸ்தானின் 1வது சனாதிபதி

1946 – ஜார்ஜ் வாக்கர் புஷ், அமெரிக்காவின் 43வது அரசுத்தலைவர்

1946 – சில்வெஸ்டர் ஸ்டாலோன், அமெரிக்க நடிகர்

1975 – 50 சென்ட், அமெரிக்க ராப் இசைக்கலைஞர்

1979 – கெவின் ஹார்ட், அமெரிக்க நடிகர்

1980 – இவா கிரீன், பிரெஞ்சு நடிகை

1980 – முகேசு முகமது, தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்

1981 – நிகிதா துக்ரல், இந்திய நடிகை

1985 – ரன்வீர் சிங், இந்திய நடிகர்

இறப்புகள்


1476 – இரெகியோமோண்டேனசு, செருமானியக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1436)

1535 – தாமஸ் மோர், ஆங்கிலேய அரசியல்வாதி (பி. 1478)

1553 – ஆறாம் எட்வர்டு, இங்கிலாந்து, அயர்லாந்து மன்னர் (பி. 1537)

1614 – மான் சிங், ராஜ்புத் அரசர் (பி. 1550)

1827 – தோமஸ் முன்ரோ, சென்னை மாகான ஆளுநர் (பி. 1761)

1854 – ஜார்ஜ் ஓம், செருமானிய இயற்பியலாளர், கணிதவியலாளர் (பி. 1789)

1893 – மாப்பசான், பிரான்சிய எழுத்தாளர், கவிஞர் (பி. 1850)

1902 – மரியா கொரெற்றி, இத்தாலியப் புனிதர் (பி. 1890)

1962 – வில்லியம் பால்க்னர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (பி. 1897)

1968 – மயிலை சிவ முத்துக்குமாரசுவாமி, தமிழறிஞர், தமிழாசிரியர் (பி. 1892)

1971 – லூயிசு ஆம்சுட்ராங், அமெரிக்கப் பாடகர் (பி. 1901)

1985 – மௌனி, தமிழக எழுத்தாளர் (பி. 1907)

1986 – ஜெகசீவன்ராம், இந்திய அரசியல்வாதி (பி. 1908)

2002 – திருபாய் அம்பானி, இந்தியத் தொழிலதிபர் (பி. 1932)

2005 – கிளாட் சிமோன், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளர் (பி. 1913)

2011 – கார்த்திகேசு சிவத்தம்பி, ஈழத்துத் தமிழறிஞர் (பி. 1932)

சிறப்பு நாள்


விடுதலை நாள் (கொமொரோசு, பிரான்சிடம் இருந்து 1975)

விடுதலை நாள் (மலாவி, பிரித்தானியாவிடம் இருந்து 1964)

ஆசிரியர் நாள் (பெரு)