முக்கிய நிகழ்வுகள் :-


👉 1972ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தானது.

👉 1862ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி படிகங்களின் அமைப்பை கண்டுபிடித்தவரும், எக்ஸ் கதிர் நிறமாலைமானியை உருவாக்கியவருமான சர் வில்லியம் ஹென்றி பிராக் (Sir William Henry Bragg) இங்கிலாந்தில் பிறந்தார்.

👉 1877ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி உலக புகழ்பெற்ற கவிஞரும், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவருமான ஹெர்மன் ஹெசே (Hermann Hesse) ஜெர்மனியில் பிறந்தார்.

👉 2013ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி கணினிச் சுட்டியை (Computer Mouse) கண்டுபிடித்த டக்லஸ் எங்கல்பர்ட் மறைந்தார்.

👉 1923ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற கவிஞர் விஸ்லாவா சிம்பார்ஸ்கா போலாந்தில் பிறந்தார்.


முக்கிய தினம் :-


சர்வதேச விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் தினம்

👉 இண்டர்நேஷனல் ஸ்போர்ட்ஸ் பிரஸ் அசோசியேஷன் என்ற அமைப்பு விளையாட்டு பத்திரிக்கையாளர்களுக்காக 1924ம் ஆண்டு, ஜூலை 2ஆம் தேதி தொடங்கப்பட்டது. அந்த தினமே சர்வதேச விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


பிறந்த நாள் :-


மயில்சாமி அண்ணாதுரை

👉 தமிழகத்தைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் மயில்சாமி அண்ணாதுரை 1958ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி கோவை மாவட்டத்தில் கோதவாடி என்ற கிராமத்தில் பிறந்தார்.

👉 தனது பொறியியல் படிப்பை முடித்தவுடன் இஸ்ரோ நிறுவனத்தில் இளநிலை ஆய்வாளராக 1982-ல் சேர்ந்தார். இவரது திறமையால் செயற்கைக்கோள் முடுக்கியை உருவாக்கும் அணியின் தலைவராக 1985-ல் நியமிக்கப்பட்டார்.

👉 பிறகு செயற்கைக்கோள் விண்கலன் இயக்க மேலாளர் (1988), இன்சாட் துணை இயக்குநர் (1994), மேலும் இன்சாட்-2சி, இன்சாட்-2டி, இன்சாட்-3பி, ஜிசாட்-1 ஆகியவற்றின் திட்ட இயக்குநராகவும் பணியாற்றினார்.

👉 2004-ல் சந்திரயான் திட்ட இயக்குநரானார். அதுமட்டுமல்லாது தொலையுணர்வு செயற்கைக்கோள், மங்கள்யான் போன்றவற்றின் தலைமை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

👉 மேலும் அஸ்ட்ரோசாட், ஆதித்யா-L1 செயற்கைக்கோள்களை வழிநடத்தியுள்ளார். இவர் பத்மஸ்ரீ, சந்திரயான் திட்டத்திற்காக 3 சர்வதேச விருதுகள், 4 விண்வெளி விருதுகள், பல்வேறு அமைப்புகளின் கௌரவ விருதுகளையும் பெற்றுள்ளார்.

👉 மற்ற நாடுகளுக்கு இணையாக இந்தியாவின் தரத்தை உயர்த்திய இவர் 61வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

இன்றைய தின நிகழ்வுகள்


437 – மூன்றாம் வலந்தீனியன் மேற்கு உரோமைப் பேரரசராக முடிசூடினார்.

936 – கிழக்கு பிரான்சியாவின் (இன்றைய செருமனி) மன்னர் என்றி இறந்தார். இவரது மகன் முதலாம் ஒட்டோ புதிய மன்னராக முடிசூடினார்.

1698 – தோமசு சேவரி முதலாவது நீராவிப் பொறிக்கான காப்புரிமம் பெற்றார்.

1776 – அமெரிக்கப் புரட்சி: பெரிய பிரித்தானியாவுடனான தொடர்புகளைத் துண்டிக்கும் தீர்மானத்தை அமெரிக்க சட்டமன்றம் எடுத்தது. ஆனாலும் இறுதி விடுதலைச் சாற்றுரை சூலை 4 இலேயே வெளியிடப்பட்டது.

1822 – அடிமைகளுக்கிடையே கிளர்ச்சியைத் தூண்டிய குற்றங்களுக்காக அமெரிக்காவின் தென் கரொலைனா மாநிலத்தில் 35 அடிமைகள் தூக்கிலிடப்பட்டனர்.

1823 – பிரேசிலில் போர்த்துக்கேயரின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

1839 – கியூபாக் கரையோரத்தில் இருந்து 20 மைல் தூரத்தில் 53 ஆப்பிரிக்க அடிமைகள் அர்மிஸ்டாட் என்ற அடிமைக் கப்பலைக் கைப்பற்றினர்.

1853 – உருசியா துருக்கியின் மீது படையெடுத்தது. கிரிமியப் போர் ஆரம்பமானது.

1871 – இத்தாலியப் பேரரசர் இரண்டாம் விக்டர் இம்மானுவேல் திருத்தந்தை நாடுகளிடம் இருந்து தான் கைப்பற்றிய ரோம் நகரை அடைந்தார்.

1881 – அமெரிக்க அரசுத்தலைவர் சேம்சு கார்ஃபீல்டு சுடப்பட்டுப் படுகாயமடைந்தார். இவர் செப்டம்பர் 19 இல் மரணமானார்.

1897 – பிரித்தானிய-இத்தாலியப் பொறியாளர் மார்க்கோனி வானொலிக்கான காப்புரிமத்தை இலண்டனில் பெற்றார்.

1921 – முதலாம் உலகப் போர்: அமெரிக்க அரசுத்தலைவர் வாரன் ஜி. ஹார்டிங் செருமனியுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

1934 – செருமனியில் நீள் கத்திகளுடைய இரவுப் படுகொலைகள் முடிவுக்கு வந்தது.

1937 – அமேலியா ஏர்ஃகாட் மற்றும் பிரெட் நூனன் ஆகியோர் வானூர்தியில் உலகைச் சுற்றும் முயற்சியில் அமைதிப் பெருங்கடல் பகுதியில் காணாமல் போயினர்.

1940 – அரண்டோரா இசுட்டார் என்ற பிரித்தானியக் கப்பல் செருமனியின் யூ-47 நீர்மூழ்கியினால் அத்திலாந்திக்குப் பெருங்கடலில் மூழ்கடிக்கப்பட்டதில் 800 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் ஆவர்.

1940 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுபாஸ் சந்திர போஸ் கல்கத்தாவில் கைது செய்யப்பட்டார்.

1962 – முதலாவது வோல் மார்ட் அங்காடி ஆர்கன்சா மாநிலத்தில் திறக்கப்பட்டது.

1966 – பிரெஞ்சு இராணுவத்தினர் பசிபிக் பெருங்கடலில் தமது முதலாவது அணுவாயுதச் சோதனையை நிகழ்த்தினர்.

1976 – வியட்நாம் குடியரசின் வீழ்ச்சியை அடுத்து 1954 முதல் பிரிந்திருந்த கம்யூனிச வடக்கு வியட்நாம் தெற்கு வியட்நாமுடன் வியட்நாம் சோசலிசக் குடியரசு என்ற பெயரில் இணைந்தது.

1986 – சிலியின் இராணுவ ஆட்சியாளர் அகஸ்தோ பினோசெட்டுக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது இருவர் உயிருடன் எரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

1997 – ஆசிய நிதி நெருக்கடி ஆரம்பமானது.

2002 – உலகத்தை பலூனில் தனியே இடைவேளை விடாது பறந்த முதல் மனிதர் என்ற சாதனையை ஸ்டீவ் பொசெட் பெற்றார்.

2004 – ஆசியான் அமைப்பில் பாக்கித்தான் இணைந்தது.

2010 – காங்கோவில் எண்ணெய் நிரப்பிய பாரவுந்து ஒன்று வெடிதத்தில் 230 பேர் உயிரிழந்தனர்.

2013 – உலகளாவிய வானியல் ஒன்றியம் புளூட்டோவின் நான்காம், ஐந்தாம் சந்திரன்களுக்கு கெர்பரோசு, ஸ்டிக்சு எனப் பெயரிட்டது.

2013 – 6.1 அளவு நிலநடுக்கம் இந்தோனேசியாவின் அச்சே பகுதியில் இடம்பெற்றதில் 42 பேர் உயிரிழந்தனர், 420 பேர் காயமடைந்தனர்.

2016 – பக்தாதில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 341 பேர் உயிரிழந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்


1489 – தாமஸ் க்ரான்மர், ஆங்கிலேயப் பேராயர், புனிதர் (இ. 1556)

1862 – வில்லியம் ஹென்றி பிராக், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. 1942)

1877 – ஹேர்மன் ஹெசே, நோபல் பரிசு பெற்ற செருமன்-சுவிசு எழுத்தாளர் (இ. 1962)

1903 – க. கணபதிப்பிள்ளை, இலங்கைத் தமிழறிஞர், பேராசிரியர் (இ. 1968)

1903 – அலெக் டக்ளஸ் – ஹோம், பிரித்தானியாவின் 66வது பிரதமர் (இ. 1995)

1906 – அன்சு பேத்து, நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2005)

1910 – டி. வி. தாமஸ், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 1977)

1923 – விஸ்லவா சிம்போர்ஸ்கா, நோபல் பரிசு பெற்ற போலந்துக் கவிஞர் (இ. 2012)

1925 – பத்திரிசு லுமும்பா, கொங்கோவின் 1வது அரசுத்தலைவர் (இ. 1961)

1929 – இமெல்டா மார்க்கோஸ், பிலிப்பீன்சின் 10வது முதல் பெண்மணி

1930 – ஒ. வே. விஜயன், மலையாள எழுத்தாளர் (இ. 2005)

1938 – சி. கே. என். பட்டேல், இந்திய-அமெரிக்கப் பொறியியலாளர், இயற்பியலாளர்

1940 – எம். ஏ. குலசீலநாதன், ஈழத்து கருநாடக, மெல்லிசைப் பாடகர், வானொலிக் கலைஞர் (இ. 2004)

1941 – சி. ஜெயபாரதி, மலேசியத் தமிழறிஞர் (இ. 2015)

1942 – வீ. மாரியப்பன், மலேசிய எழுத்தாளர்

1946 – சே. மாணிக்கம், தமிழக எழுத்தாளர்

1946 – ரிச்சார்ட் ஆக்செல், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர்

1947 – வீ. கு. சந்திரசேகரன், மலேசிய எழுத்தாளர்

1949 – இராசமனோகரி புலேந்திரன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 2014)

1957 – பிரெட் ஹார்ட், கனடிய மற்போர் வீரர்

1958 – மயில்சாமி அண்ணாதுரை, தமிழகப் பொறியலாளர், விண்வெளி ஆய்வாளர்

1965 – கௌதமி, தென்னிந்திய நடிகை

1986 – லின்சி லோகன், அமெரிக்க நடிகை

1990 – மார்கோட் ரொப்பி, ஆத்திரேலிய நடிகை

இன்றைய தின இறப்புகள்


1566 – நோஸ்ராடாமஸ், பிரான்சிய சோதிடர், நூலாசிரியர் (பி. 1503)

1591 – வின்செஞ்சோ கலிலீ, இத்தாலிய இசைக்கலைஞர், இசையமைப்பாளர் (பி. 1520)

1621 – தாமசு ஃஆரியட், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1560)

1757 – சிராச் உத் தவ்லா, வங்காளத்தின் கடைசி நவாப் (பி. 1733)

1778 – இழான் இழாக்கு உரூசோ, சுவிட்சர்லாந்து மெய்யியலாளர், இசையமைப்பாளர் (பி. 1712)

1843 – சாமுவேல் ஹானிமன், செருமன் மருத்துவர் (பி. 1755)

1949 – கியார்கி திமித்ரோவ், பல்கேரிய அரசியல்வாதி (பி. 1882)

1961 – ஏர்னெஸ்ட் ஹெமிங்வே, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (பி. 1899)

1963 – சேத் பார்னசு நிக்கல்சன், அமெரிக்க வானியலாளர் (பி. 1891)

1977 – விளாடிமிர் நபோக்கோவ், உருசிய எழுத்தாளர் (பி. 1899)

1988 – வைபர்த் தவுகிளாசு, கனடிய வானியலாளர் (பி. 1894)

1992 – காமரோன் தே லா ஈஸ்லா, எசுப்பானியப் பாடகர் (பி. 1950)

1997 – ஜேம்ஸ் ஸ்டுவர்ட், அமெரிக்க நடிகர் (பி. 1908)

2013 – டக்லஸ் எங்கல்பர்ட், கணினிச் சுட்டியைக் கண்டுபிடித்தவர் (பி. 1925)

2016 – எலீ வீசல், இனவழிப்பில் இருந்து தப்பியவர், செயற்பாட்டாளர் (பி. 1928)