👉 2013ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி தமிழ் திரைப்பட நடிகரும், இயக்குநருமான மணிவண்ணன் மறைந்தார்.


👉 1950ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி உலகளவில் அதிக இரும்புகளை தயாரிக்கும் மித்தல் இரும்பு நிறுவனத்தின் தலைவரான இலட்சுமி மித்தல் ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்தார்.

👉 1948ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழிசை இயக்கம் ஆகியவற்றின் அமைப்பாளருமான அண்ணாமலை செட்டியார் மறைந்தார்.

👉 1849ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் குடியரசு தலைவர் ஜேம்ஸ் போக் (James K. Polk) மறைந்தார்.


முக்கிய தினம் :-


உலக காற்று தினம்

👉 உலக காற்று தினம் ஆண்டுதோறும் ஜூன் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது காற்றாற்றலைக் கொண்டாடும் தினமாகும்.

👉 இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி வருகின்றது. மேலும் காற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக உலக காற்று தினம் அனுசரிக்கப்படுகிறது.



பிறந்த நாள் :-


அண்ணா ஹசாரே

👉 சமூக ஆர்வலரான கிசான் பாபுராவ் ஹசாரே எனப்படும் அண்ணா ஹசாரே அவர்கள், 1937ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள பிங்கார் என்னும் இடத்தில் பிறந்தார்.

👉 சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி மற்றும் வினோபா பாவேயின் வாழ்க்கை வரலாறுகளை படித்த பிறகு ஏழைகள் மேம்பாட்டை தனது வாழ்நாள் நோக்கமாகக் கொண்டார். இவர் பத்ம பூஷன், பத்மஸ்ரீ, மஹாவீர் விருது, சர்வதேச ஒருமைப்பாட்டு விருது, சிட் கில் நினைவு விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.

👉 காந்தியவாதியான அண்ணா ஹசாரே இன்று தனது 81வது வயதில் முனைப்புடன் அடியெடுத்து வைக்கிறார்.


இன்றைய தின நிகழ்வுகள்


கிமு 763 – மெசொப்பொத்தேமியாவின் வரலாற்றுக் காலக்கோட்டைக் கண்டறிய உதவிய சூரிய கிரகணம் ஒன்றை அசிரியர்கள் பதிந்தார்கள்.

844 – இத்தாலியின் மன்னராக இரண்டாம் லூயிசு உரோம் நகரில் இரண்டாம் செர்கியசினால் முடிசூடி வைக்கப்பட்டார்.

923 – சோயிசன்சு என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரான்சின் முதலாம் இராபர்ட் மன்னர் கொல்லப்பட்டார்,

1184 – பிம்ரைட் என்ற இடத்தில் நடந்த போரில் நோர்வே மன்னர் ஐந்தாம் மாக்னசு கொல்லப்பட்டார்.

1215 – இங்கிலாந்தின் ஜோன் மன்னர் மாக்னா கார்ட்டாவில் தனது இலச்சினையைப் பதிந்தார்.

1219 – வடக்கு சிலுவைப் போர்கள்: லிந்தானீசு சமரை அடுத்து தானிய எசுத்தோனிய இராச்சியம் அமைக்கப்பட்டது.

1246 – ஆஸ்திரியாவின் இரண்டாம் பிரெடெரிக்கின் இறப்புடன் பாபன்பேர்க் அரச வம்சம் அழிந்தது.

1300 – பில்போ நகரம் அமைக்கப்பட்டது.

1389 – கொசோவோவில் நடந்த போரில் உதுமானியர்கள் செர்பியர்களையும் பொசுனியர்களையும் தோற்கடித்தனர்.

1502 – கிறித்தோபர் கொலம்பசு தனது நான்காவது கடற் பயணத்தின் போது மர்தினிக்கு தீவில் கால் வைத்தார்.

1520 – திருத்தந்தை பத்தாம் லியோ மார்ட்டின் லூதரை உறவு ஒன்றிப்பிலிருந்து நீக்கப்போவதாக எச்சரித்தார்.

1667 – முதலாவது மனித குருதி மாற்றீடு மருத்துவர் சான் பாப்டிஸ்ட் டெனிஸ் என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.

1752 – பெஞ்சமின் பிராங்கிளின் மின்னல் ஒரு மின்சாரம் என்பதை நிறுவினார்.

1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: சியார்ச் வாசிங்டன் அமெரிக்க இராணுவத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

1776 – டெலவெயர் பென்சில்வேனியாவில் இருந்து பிரிவதற்கு ஆதரவாக வாக்களித்தது.

1785 – ஆங்கிலக் கால்வாயை ழீன்-பிரான்சுவா பிலாத்ரே டி ரோசியர், பியேர் ரொமாயின் ஆகியோர் வெப்பக் காற்றுக் குடுவையில் பறக்க முயன்றபோது குடுவை வெடித்ததில் உயிரிழந்தனர். இதுவே முதலாவது வான விபத்து ஆகும்.

1808 – யோசப் பொனபார்ட் எசுப்பானியாவின் மன்னராக முடிசூடினார்.

1836 – ஆர்கன்சா 25வது அமெரிக்க மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

1844 – இயற்கை இறப்பர் பதப்படுத்தும் முறை சார்லசு கூடியர் என்பவரால் காப்புரிமம் பெறப்பட்டது.

1846 – அமெரிக்கா, கனடா ஆகியவற்றின் எல்லைக்கோடு ராக்கி மலைத்தொடர் முதல் உவான் டெ பூக்கா நீரிணை வழியாக வரையப்பட்டது.

1846 – இலங்கையின் அரச ஆசியர் சமூகம் ஜேர்னல் என்ற தனது முதலாவது இதழை வெளியிட்டது.[1]

1878 – குதிரை ஒன்று ஓடுகையில் அதன் நான்கு கால்களும் தரையில் படுவதில்லை என்பதை நிறுவும் புகைப்படங்களை எதுவார்து மைபிரிட்ச் என்பவர் எடுத்தார். இவ்வாய்வே பின்னர் அசையும் திரைப்படம் உருவாக மூலமாக அமைந்தது.

1888 – முடிக்குரிய இளவரசர் வில்லியம் செருமானியப் பேரரசின் கடைசி மன்னராக முடிசூடினார். 1888 இல் முதலாம் வில்லியம், மூன்றாம் பிரெடெரிக் ஆகிய மன்னர்கள் இறந்ததனால், இவ்வாண்டு செருமனியின் மூன்று பேரரசர்களின் ஆட்சி ஆண்டு ஆகும்.

1896 – சப்பானில் சன்ரிக்கு என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கம், மற்றும் சுனாமியால் 22,000 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.

1904 – நியூயோர்க் நகரில் கிழக்கு ஆற்றில் ஜெனரல் சுலோக்கம் என்ற நீராவிப் படகு தீப்பற்றியதில் 1,000 பேர் வரை உயிரிழந்தனர்.

1909 – இங்கிலாந்து, ஆத்திரேலியா, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பிரதிநிதிகள் இலார்ட்சுவில் கூடி, இம்பீரியல் துடுப்பாட்ட மாநாட்டை ஆரம்பித்தனர்.

1937 – கார்ல் வியென் தலைமையில் சென்ற செருமானியக் குழு நங்க பர்வதத்தில் பனிச்சரிவில் சிக்கி தனது 16 உறுப்பினர்களை இழந்தது.

1940 – இரண்டாம் உலகப் போர்: செருமனி பாரிசு நகரைக் கைப்பற்றியதை அடுத்து நேச அணிப் படைகள் பிரான்சில் இருந்து வெளியேற ஆரம்பித்தன.

1944 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியரின் பிடியில் இருந்த சைப்பேனை ஐக்கிய அமெரிக்கா கைப்பற்றியது.

1944 – சசுக்காச்சுவான் பொதுத்தேர்தலில் டொம்மி டக்ளசு தலைமையில் வட அமெரிக்காவின் முதலாவது சோசலிச அரசு பதவியேற்றது.

1954 – ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம் சுவிட்சர்லாந்தின் பேசெல் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.

1977 – எசுப்பானியாவில் முதல் தடவையாக மக்களாட்சி முறைத் தேர்தல் இடம்பெற்றது.

1978 – ஜோர்தான் மன்னர் உசைன், லீசா அலபி என்ர அமெரிக்கப் பெண்ணைத் திருமனம் புரிந்தார். இவர் நூர் மகாராணி என அழைக்கப்பட்டார்.

1984 – யாழ்ப்பாணம் காரைநகரில் இலங்கைக் கடற்படை ஒன்று விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

1991 – பிலிப்பீன்சில் பினாடூபோ எரிமலை வெடித்ததில் 800 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.

1994 – இசுரேலும், வத்திக்கானும் முழுமையான பண்ணுறவாண்மையை ஏற்படுத்திக் கொண்டன.

1996 – ஐரியக் குடியரசுப் படை (ஐஆர்ஏ) மான்செஸ்டர் நகரில் பலம் வாய்ந்த சுமையுந்துக் குண்டை வெடிக்கவைத்ததில் பலர் காயமடைந்தனர்.

2014 – பாக்கித்தான் வடக்கு வசீரித்த்தானில் தீவிரவாதிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது.

இன்றைய தின பிறப்புகள்


1594 – நிக்கோலா போசின், பிரான்சிய ஓவியர் (இ. 1665)

1754 – யுவான் ஒசே எலுயார், எசுப்பானிய வேதியியகாளர், கனிமவியலாளர் (இ. 1796)

1843 – எட்வர்டு கிரெய்கு, நோர்வே இசைக்கலைஞர். இசையமைப்பாளர் (இ. 1907)

1848 – பருமலா திருமேனி, இந்திய ஆயர், புனிதர் (இ. 1902)

1863 – கிருஷ்ண சுவாமி அய்யர், இந்திய வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் (இ. 1911)

1902 – எரிக் எரிக்சன், செருமானிய-அமெரிக்க உளவியல் நிபுணர் (இ. 1994)

1921 – எம். எச். மொகம்மது, இலங்கை அரசியல்வாதி (இ. 2016)

1926 – அல்பிரட் துரையப்பா, இலங்கை அரசியல்வாதி, வழக்கறிஞர் (இ. 1975)

1933 – வீரசிங்கம் ஆனந்தசங்கரி, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி

1934 – ஜவஹர் சு. சுந்தரம், தமிழக எழுத்தாளர்

1935 – மணவை முஸ்தபா, தமிழகத் தமிழறிஞர் (இ. 2017)

1937 – ப. தங்கம், தமிழக ஓவியர்

1938 – பா. சத்தியசீலன், ஈழத்துக் கவிஞர் (இ. 2001)

1939 – உதுமாலெவ்வை ஆதம் பாவா, இலங்கை எழுத்தாளர்

1941 – ஆகென் கிலிநெர்டு, செருமனிய இயற்பியலாளர்

1941 – டி. ஆர். பாலு, இந்திய அரசியல்வாதி

1941 – ஆகென் கிலிநெர்டு, செருமனிய இயற்பியலாளர்

1942 – ப. மு. அன்வர், மலேசியத் தமிழ்க் கவிஞர்

1944 – மலேசியா வாசுதேவன், திரைப்படப் பாடகர், நடிகர் (இ. 2011)

1944 – க. நெடுஞ்செழியன், தமிழக எழுத்தாளர்

1953 – உமர் தம்பி, தமிழ்க் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை வழங்கியவர் (இ. 2006)

1950 – இலட்சுமி மித்தல், இந்திய-ஆங்கிலேயத் தொழிலதிபர்

1953 – சீ சின்பிங், சீன அரசுத்தலைவர்

1959 – பசேலியோஸ் கிளேமிஸ் பாவா, கேரள பேராயர்

1969 – ஐஸ் கியூப், அமெரிக்க ராப் கலைஞர், நடிகர்

1973 – நீல் பாட்ரிக் ஹாரிஸ், அமெரிக்க நடிகர், பாடகர்

1984 – நகுல், தமிழ் நடிகர், பின்னணிப் பாடகர்

இன்றைய தின இறப்புகள்


1948 – ராஜா சர் அண்ணாமலை செட்டியார், தமிழிசை ஆய்வாளர் (பி. 1881)

1849 – ஜேம்ஸ் போக், அமெரிக்காவின் 11வது அரசுத்தலைவர் (பி. 1795)

1952 – விளாதிமிர் அலெக்சாந்திரோவிச் அல்பித்சுகி, உருசிய வானியலாளர் (பி. 1891)

1971 – சத்தியன், தென்னிந்திய, மலையாளத் திரைப்பட நடிகர் (பி. 1912)

1975 – ஆலங்குடி இராமச்சந்திரன், தமிழக கடம் கலைஞர் (பி. 1912)

1975 – கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி, இந்திய வரலாற்றாளர், திராவிடவியலாளர் (பி. 1892)

2006 – டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை, தமிழக அரசியல்வாதி (பி. 1918)

2008 – தங்கம்மா அப்பாக்குட்டி, இலங்கை ஆன்மிகவாதி (பி. 1925)

2013 – மணிவண்ணன், தமிழகத் திரைப்பட நடிகர், செயற்பாட்டாளர் (பி. 1954)

2016 – ஏ. சி. திருலோகச்சந்தர், தமிழகத் திரைப்பட இயக்குநர் (பி. 1930)

2016 – சோமவன்ச அமரசிங்க, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (பி. 1943)

2016 – அலவி மௌலானா, இலங்கை அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (பி. 1932)

இன்றைய தின சிறப்பு நாள் 


மர நாள் (கோஸ்ட்டா ரிக்கா)

உலகக் காற்று நாள்