👉 1834ஆம் ஆண்டு ஜூன் 09ஆம் தேதி பைபிளை பல இந்திய மொழிகளில் மொழிப்பெயர்த்த வில்லியம் கேரி மறைந்தார்.


👉 1870ஆம் ஆண்டு ஜூன் 09ஆம் தேதி ஆங்கில எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ் மறைந்தார்.


பிறந்த நாள் :-


கிரண் பேடி

👉 இந்தியாவின் முதல் பெண் போலீஸ் அதிகாரி கிரண் பேடி 1949ஆம் ஆண்டு ஜூன் 09ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிறந்தார்.

👉 இவர் 1972-ல் இந்திய காவல்துறையின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். மேலும், மக்கள் மேம்பாடுகளுக்காக இந்தியா விஷன், நவஜோதி ஆகிய அமைப்புகளை நிறுவியுள்ளார்.

👉 1979-ல் காவல்துறை வீரப்பதக்கம், போதைப் பொருள் தடுப்பு பணிகளுக்கான நார்வே நாட்டு விருது(Asia Region Award), பிலிப்பைன்ஸ் நாட்டின் மகசேசே உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

👉 மேலும், இவர் டென்னிஸ் போட்டியில் ஆசிய அளவிலும், தேசிய அளவிலும் ஏராளமான பரிசுகள், பதக்கங்களை வென்றுள்ளார். இவர் ஏராளமான சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்.

👉 பல ஆண்டுகளுக்கு மேல் காவல்துறையில் மகத்தான சேவையாற்றி இன்றும் அதே சுறுசுறுப்புடன் இயங்கி வரும் இவர் இன்று தனது 69வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.


ஜார்ஜ் ஸ்டீபன்சன்

👉 ரயில் பாதைகளின் தந்தை ஜார்ஜ் ஸ்டீபன்சன் 1781ஆம் ஆண்டு ஜூன் 09ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள நார்தம்பர்லேண்டின் பகுதியில் பிறந்தார்.

👉 இவர் சுரங்கங்களில் ஏற்படும் தீ விபத்துகளில் இருந்து தொழிலாளர்களை காக்க பாதுகாப்பு விளக்கை உருவாக்கியுள்ளார்.

👉 மர தண்டவாளத்தில் ஓடும் நீராவி இன்ஜினை சரிசெய்து இரும்பு தண்டவாள ரயில் இன்ஜினை வடிவமைத்தார். 1829-ல் ரயில்வே முதலாளிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் இவர் வடிவமைத்த ராக்கெட் என்ற உலகப் புகழ்பெற்ற இன்ஜின் முதல் பரிசை வென்றது.

👉 இங்கிலாந்தில் செஸ்டர்ஃபீல்டு ரயில் நிலையத்தில் இவரது வெண்கல சிலை மற்றும் ராக்கெட் ரயில் மாதிரி வடிவமும் வைக்கப்பட்டுள்ளது.

👉 அடிப்படை கல்வி கூட பெறாமல் அறிவியல் களத்தில் அரும்பெரும் சாதனை படைத்த ஜார்ஜ் ஸ்டீபன்சன் 67வது வயதில் (1848) மறைந்தார்.


இன்றைய தின நிகழ்வுகள்


கிமு 411 – பண்டைய கிரேக்கத்தில் ஏத்தேனியரின் இராணுவப் புரட்சி வெற்றியளித்தது, சிலவர் ஆட்சி அங்கு நிறுவப்பட்டது.

கிமு 53 – உரோமைப் பேரரசர் நீரோ குளோடியா ஒக்டாவியாவைத் திருமணம் புரிந்தான்.

68 – உரோமைப் பேரரசன் நீரோ தற்கொலை செய்து கொண்டான். ஜூலியோ குளாடிய மரபு முடிவுக்கு வந்து, நான்கு பேரரசர்களின் ஆண்டு என அழைக்கப்பட்ட உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

747 – அப்பாசியரின் புரட்சி: அபூ முசுலிம் கொரசானி உமையாதுகளுக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தான்.

1534 – இழ்சாக் கார்ட்டியே செயின்ட் இலாரன்சு ஆற்றின் வரைபடத்தை வரைந்தார்.

1667 – இரண்டாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: மெட்வே மீதான இடச்சுக் கடற்படையின் தாக்குதல் ஆரம்பமானது. அரச கடற்படை வரலாறு காணாத தோல்வி கண்டது.

1762 – பிரித்தானியப் படைகள் அவானா மீதான தாக்குதலை ஆரம்பித்தது. ஏழாண்டுப் போர்க் காலத்தில் நகரைக் கைப்பற்றியது.

1772 – பிரித்தானியப் பாய்க்கப்பல் காசுப்பீ உரோட் தீவில் தீக்கிரையானது.

1815 – வியன்னா மாநாடு முடிவடைந்தது. புதிய ஐரோப்பிய அரசியல் நிலப்படம் மாற்றமடைந்தது.

1815 – லக்சம்பர்க் பிரெஞ்சுப் பேரரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1885 – சீன-பிரெஞ்சுப் போரை முடிவுக்குக் கொண்டுவர தியென்ட்சின் உடன்பாடு எட்டப்பட்டது. சிங் சீனா தொங்கின், அன்னாம் ஆகிய மாகாணங்களை (இன்றைய வியட்நாமில்) பிரான்சுக்குக் கொடுத்தது.

1900 – இந்தியத் தேசியவாதி பிர்சா முண்டா பிரித்தானிய சிறையில் வாந்திபேதியினால் இறந்தார்.

1903 – அநுராதபுரத்தில் இடம்பெற்ற கலவரத்தில் கத்தோலிக்க ஆலயம் ஒன்று பௌத்தர்களினால் சேதமாக்கப்பட்டு மதகுரு தாக்கப்பட்டார். 40 பேர் கைது செய்யப்பட்டனர்.[1]

1923 – பல்கேரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.

1928 – ஆத்திரேலியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் முதற்தடவையாக சார்லசு கிங்சுபோர்ட் சிமித் வானூர்தியில் கடந்தார்.

1935 – வடமேற்கு சீனாவில் சப்பானியரின் ஆக்கிரமிப்பை சீனக் குடியரசு அங்கீகரித்தது.

1936 – யாழ்ப்பாண நகரசபைக் கட்டடத்தை இலங்கை மகாதேசாதிபதி சேர் ரெஜினால்ட் எட்வர்ட் ஸ்ரப்சு திறந்து வைத்தார்.[2]

1944 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் தூலி என்ற இடத்தில் 99 பொது மக்கள் செருமனியப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து 1941 முதல் கைப்பற்றி வைத்திருந்த கரேலியா பகுதியினுள் சோவியத் ஒன்றியம் ஊடுருவியது.

1946 – பூமிபால் அதுல்யாதெச்சு தாய்லாந்தின் மன்னராக முடி சூடினார்.

1953 – அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தை சூறாவளி தாக்கியதில் 94 பேர் உயிரிழந்தனர்.

1959 – முதலாவது அணுக்கரு ஆற்றல் ஏவுகணை நீர்மூழ்கி ஜார்ஜ் வாசிங்டன் வெள்ளோட்டம் விடப்பட்டது.

1962 – தங்கனீக்கா குடியரசாகியது.

1967 – ஆறு நாள் போர்: இசுரேல் சிரியாவிடம் இருந்து கோலோன் குன்றுகளைக் கைப்பற்றியது.

1972 – அமெரிக்காவின் தெற்கு டகோட்டாவில் பெரும் மழை காரணமாக அணை ஒன்று உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 238 பேர் உயிரிழந்தனர்.

1979 – சிட்னியில் லூனா பூங்காவில் சிறிய தொடருந்து ஒன்று தீப்பற்றியதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.

1999 – கொசோவோ போர்: செர்பியா-மொண்டெனேகுரோ நேட்டோவுடன் அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டது.

2009 – பாக்கித்தான், பெசாவரில் உணவு விடுதி ஒன்றில் குண்டு வெடித்ததில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

2010 – ஆப்கானித்தான், காந்தகாரில் திருமண வீடொன்றில் சிறுவன் ஒருவன் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 40 பேர் கொல்லப்பட்டனர், 70 பேர் காயமடைந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்


1672 – முதலாம் பீட்டர், உருசியப் பேரரசர் (இ. 1725)

1781 – ஜார்ஜ் ஸ்டீபென்சன், ஆங்கிலேயப் பொறியியலாளர், நீராவிப் பொறியைக் கண்டுபிடித்தவர் (இ. 1848)

1812 – யோகான் கோட்பிரீடு கல்லே, செருமானிய வானியலாளர் (இ. 1910)

1845 – நான்காம் மிண்டோ பிரபு, இந்தியாவின் 36வது பிரித்தானிய ஆளுநர் (இ. 1914)

1898 – பள்ளியகரம் நீ. கந்தசாமிப் புலவர், தமிழகப் புலவர் (இ. 1977)

1917 – எரிக் ஹாப்ஸ்பாம், எகிப்திய-ஆங்கிலேய வரலாற்றாளர் (இ. 2012)

1931 – நந்தினி சத்பதி, ஒடிசாவின் 8வது முதலமைச்சர் (இ. 2006)

1937 – இராமச்சந்திர காந்தி, இந்திய மெய்யியல் அறிஞர் (இ. 2007)

1943 – சி. மௌனகுரு, இலங்கை அரங்க ஆய்வாளர், பயிற்சியாளர், இயக்குநர், கல்வியாளர்

1949 – கிரண் பேடி, இந்தியக் காவல்துறை அதிகாரி, செயற்பாட்டாளர்

1951 – டி. சகுந்தலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2014)

1951 – ஜேம்ஸ் நியூட்டன் ஹவார்ட், அமெரிக்க இசையமைப்பாளர், தயாரிப்பாளர்

1952 – யூசஃப் ரசா கிலானி, பாக்கித்தான் அரசியல்வாதி

1954 – எலிசபெத் மே, அமெரிக்க-கனடிய சுற்றுச்சூழலியலாளர், அரசியல்வாதி

1963 – ஜானி டெப், அமெரிக்க நடிகர்

1975 – ஆன்ட்ரூ சைமன்ஸ், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் (இ. 2022)

1977 – அமீஷா பட்டேல், இந்திய நடிகை

1977 – உஸ்மான் அப்சால், பாக்கித்தானிய-ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர்

1981 – நேடலி போர்ட்மன், இசுரேலிய-அமெரிக்க நடிகை

1981 – அனுஷ்கா சங்கர், ஆங்கிலேய-இந்திய சித்தார் கலைஞர்

1985 – சோனம் கபூர், இந்திய நடிகை

இன்றைய தின இறப்புகள்


68 – நீரோ, உரோமைப் பேரரசர் (பி. 37)

373 – சிரியனான எபிரேம், துருக்கிய இறையியலாளர் (பி. 306)

1716 – பண்டா சிங் பகதூர், இந்தியத் தளபதி (பி. 1670)

1834 – வில்லியம் கேரி, ஆங்கிலேய மதப்பரப்புனர் (பி. 1761)

1870 – சார்லஸ் டிக்கின்ஸ், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1812)

1871 – அன்னா அட்கின்சு, ஆங்கிலேயத் தாவரவியலாளர், ஒளிப்படக் கலைஞர் (பி. 1799)

1897 – ஆல்வன் கிரகாம் கிளார்க், அமெரிக்க வானியலாளர் (பி. 1832)

1900 – பிர்சா முண்டா, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1875)

1959 – அடால்ஃப் வின்டாசு, நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (பி. 1876)

1970 – எம். ஐ. எம். அப்துல் மஜீத், இலங்கை அரசியல்வாதி (பி. 1919)

1981 – குடந்தை ப. சுந்தரேசனார், தமிழகப் பண்ணாராய்ச்சியாளர் (பி. 1914)

1995 – கொகினேனி ரங்க நாயுகுலு, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (பி. 1909)

2011 – மக்புல் ஃபிதா உசைன், இந்திய ஓவியர், இயக்குநர் (பி. 1915)

2013 – கே. டி. பிரான்சிஸ், இலங்கைத் துடுப்பாட்ட நடுவர் (பி. 1939)

இன்றைய தின சிறப்பு நாள் 


சுயாட்சி நாள் (ஓலந்து தீவுகள்)

தேசிய வீரர்கள் நாள் (உகாண்டா)