👉 1891ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி கன்னடத்தில் புகழ்பெற்ற வரலாற்றுப் புதினங்களை எழுதிய மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (Masthi Venkatesha Iyengar) கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் பிறந்தார். இவர் 1986ஆம் ஆண்டு தனது பிறந்தநாள் அன்றே மறைந்தார்.


தமிழ் ஈழ மாணவர் எழுச்சி தினம் :👉 ஈழ தமிழர்களின் மனதில் போராட்ட குணத்தை ஊட்டிய தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் நினைவாக ஜூன் 6ஆம் தேதி தமிழ் ஈழ மாணவர் எழுச்சி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

👉 2004ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி இந்தியாவில் தமிழ், செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.


நினைவு நாள் :-


மு.சி.பூர்ணலிங்கம்

தமிழ் நூல்களை மொழிபெயர்த்து வெளிநாட்டினருக்கும் மொழியின் அருமையை உணர்த்திய தமிழ் அறிஞர் மு.சி.பூர்ணலிங்கம் 1866ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முந்நீர்ப்பள்ளம் என்ற ஊரில் பிறந்தார்.

இவர் தமிழில் 18 நூல்களும், ஆங்கிலத்தில் 32 நூல்களும் மற்றும் சட்ட நூல்களையும் எழுதியுள்ளார். மேலும், சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், குழந்தை இலக்கியம், ஆய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகளையும் எழுதியுள்ளார்.

தமிழ் இந்தியா என்ற ஆங்கில நூலில் தமிழ் மொழியின் சிறப்பை வரலாற்று ஆதாரங்களோடு கூறியுள்ளார். சமயச் சான்றோர் வரலாறு மற்றும் அவர்களது தத்துவங்களை பத்துத் தமிழ் முனிவர்கள் என்ற நூலில் விளக்கியுள்ளார்.

தமிழுக்குப் பெரும் தொண்டாற்றிய மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளை தனது 81வது வயதில் 1947ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-


அலெக்ஸாண்டர் புஷ்கின்

👉 கவிதை யுகத்தின் சிறந்த படைப்பாளியான அலெக்ஸாண்டர் செர்ஜியேவிச் புஷ்கின் (Alexander Sergeyevich Pushkin) 1799ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் பிறந்தார்.

👉 இவர் போரிஸ் குட்னவ் (Boris Godunov), தி ஸ்டோன் கெஸ்ட்(The Stone Guest), மொஸார்ட் அண்ட் ஸலியெரி (Mozart and Salieri) என்ற பிரபலமான நாடகங்களையும், ரஸ்லன் அண்ட் லுட்மிலா (Ruslan and Lyudmila) என்ற கவிதையையும் எழுதியுள்ளார்.

👉 இவர் உரைநடை, கவிதை, நாவல், சிறுகதை, நாடகம், விமர்சன கட்டுரைகள், கடிதங்கள் என இலக்கியத்தின் அனைத்து களங்களிலும் முத்திரை பதித்துள்ளார்.

👉 நவீன ரஷ்ய இலக்கியத்தின் தந்தை செர்ஜியேவிச் புஷ்கின் 37வது வயதில் (1837) மறைந்தார். செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் இவர் கடைசியாக வாழ்ந்த வீடு தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.


இன்றைய தின நிகழ்வுகள்


913 – பைசாந்தியப் பேரரசர் மூன்றாம் அலெக்சாந்தர் போலோ விளையாடும் போது இறந்தார்.

1523 – குசுத்தாவ் வாசா சுவீடனின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டென்மார்க்கு, சுவீடன், நோர்வே இணைந்த கல்மார் ஒன்றியம் முடிவுக்கு வந்தது. இது சுவீடனின் தேசிய நாளாகக் கொண்டாடப்படுகிறது.

1644 – சிங் மஞ்சு படைகள் பெய்ஜிங் நகரைக் கைப்பற்றின. மிங் வம்சம் வீழ்ச்சியடைந்தது.

1674 – சிவாஜி மராட்டியப் பேரரசராக முடிசூடினார்.[1]

1711 – யாழ்ப்பாணத்தில் இந்து மதச் சடங்குகளுக்கு ஒல்லாந்து அரசினால் தடை விதிக்கப்பட்டது.[2]

1762 – ஏழாண்டுப் போர்: பிரித்தானியப் படைகள் கியூபாவின் அவானா நகரை முற்றுகையிட்டுக் கைப்பற்றின.

1761 – சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வீனஸ் கோளின் நகர்வு பூமியின் பல இடங்களிலும் அவதானிக்கப்பட்டது.

1808 – பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியனின் சகோதரன் யோசப் பொனபார்ட் எசுப்பானியாவின் மன்னராக முடிசூடினார்.

1809 – சுவீடன் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது. 20 ஆண்டுகள் முழுமையான முடியாட்சியின் பின்னர் அரசியல் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டது. பதின்மூன்றாம் சார்லசு புதிய மன்னராகப் பதவியேற்றார்.

1832 – பாரிசில் மாணவர் எழுச்சி முறியடிக்கப்பட்டது.

1844 – கிறித்தவ இளையோர் அமைப்பு (YMCA) லண்டனில் அமைக்கப்பட்டது.

1859 – ஆத்திரேலியா: குயின்ஸ்லாந்து என்ற பெயரில் புதிய குடியேற்ற நாடு நியூ சவுத் வேல்ஸ் இலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.

1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க ஒன்றியப் படைகள் டென்னிசி, மெம்பிசு நகரை கூட்டமைப்பினரிடம் இருந்து கைப்பற்றின.

1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் டென்னசியில் மெம்ஃபிசு நகரை கூட்டமைப்புப் படைகளிடம் இருந்து கைப்பற்றின.

1882 – அரபிக் கடலில் இடம்பெற்ற புயலால் பம்பாயில் 100,000 பேர்களுக்கு மேல் கொல்லப்பட்டனர்.ஆனாலும் இந்தச் செய்தி பொய்யானது என பின்னர் நிரூபிக்கப்பட்டது.

1889 – அமெரிக்கா, சியாட்டில் நகரில் ஏற்பட்ட தீயில் நகர மையம் முழுவதும் அழிந்தது.

1912 – அலாஸ்காவில் நொவரப்டா எரிமலை வெடித்தது.

1930 – இலங்கையில் வீரகேசரி நாளிதழ் தொடங்கப்பட்டது.

1932 – அமெரிக்காவில் எரிவாயுவிற்கு முதன் முதலாக கலனிற்கு ஒரு சதம் என்ற அளவில் வரி அறவிடப்பட்டது.

1942 – இரண்டாம் உலகப் போர்: மிட்வே சமரில் அமெரிக்கக் கடற்படை மிக்குமா என்ற சப்பானியப் போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.

1944 – இரண்டாம் உலகப் போர்: ஓவர்லார்ட் நடவடிக்கை எனப் பெயரிடப்பட்ட நோமண்டி சண்டை ஆரம்பமானது. 155,000 கூட்டுப் படையினர் பிரான்சின் நோர்மண்டிக் கடற்கரைகளில் தரையிறங்கி, அத்திலாந்திக் சுவரைத் தகர்த்து முன்னேறினர்.

1958 – தமிழருக்கு எதிரான இனவன்முறை, 1958: இலங்கையில் மேலும் 5,029 தமிழ் அகதிகள் கொழும்பில் இருந்து கப்பல் மூலம் யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டனர்.[3]

1968 – அமெரிக்க அரசியல்வாதி இராபர்ட் எஃப் கென்னடி லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உணவு விடுதி ஒன்றில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1971 – சோவியத் ஒன்றியத்தின் சோயூசு 11 விண்கலம் ஏவப்பட்டது.

1971 – கலிபோர்னியாவில் அமெரிக்க வான்படையின் எப்-4 பன்டெம் II போர் வானூர்தி பயணிகள் வானூர்தியுடன் வானில் மோதியதில் 50 பேர் உயிரிழந்தனர்.

1971 – சோயுஸ் 11 விண்ணுக்கு ஏவப்பட்டது.

1974 – சுவீடனில் நாடாளுமன்ற முடியாட்சி அமைக்கப்பட்டது.

1981 – பீகார் தொடருந்து விபத்து: இந்தியாவில் தொடருந்து ஒன்று பாக்மதி ஆறு பாலம் ஒன்றில் தடம் புரண்டு வீழ்ந்ததில் 268 பேர் உயிரிழந்தனர், 300 பேர் காணாமல் போயினர்.

1982 – லெபனான் போர் ஆரம்பமானது. இசுரேலியப் படையினர் தெற்கு லெபனானை ஊடுருவினர்.

1984 – இந்திய இராணுவத்தினர் அம்ரித்சரில் உள்ள பொற்கோயிலில் தாக்குதல் நடத்தியதில் 576 பேர் கொல்லப்பட்டு 335 பேர் காயமுற்றனர்.

1993 – மங்கோலியாவில் முதலாவது நேரடியான அரசுத்தலைவர் தேர்தல் நடைபெற்றது.

2002 – 10 மீட்டர் விட்டமுள்ள புவியருகு விண்பொருள் ஒன்று நடுநிலக் கடலில் கிரேக்கத்திற்கும் லிபியாவிற்கும் இடையில் வீழ்ந்து வெடித்தது.

2004 – இந்தியாவில் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

இன்றைய தின பிறப்புகள்


1436 – இரெகியோமோண்டேனசு, செருமானியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1476)

1599 – டியேகோ வெலாஸ்க்குவெஸ், எசுப்பானிய ஓவியர் (இ. 1660)

1799 – அலெக்சாந்தர் பூஷ்கின், உருசிய எழுத்தாளர், கவிஞர் (இ. 1837)

1850 – கார்ல் பெர்டினாண்ட் பிரவுன், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1918)

1875 – தாமசு மாண், நோபல் பரிசு பெற்ற செருமானிய எழுத்தாளர் (இ. 1955)

1877 – உள்ளூர் எஸ். பரமேசுவர அய்யர், மலையாளக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1949)

1890 – கோபிநாத் பர்தலை, அசாம் மாநிலத்தின் 1வது முதலமைச்சர் (இ. 1950)

1891 – மாஸ்தி வெங்கடேச ஐயங்கார், இந்திய எழுத்தாளர் (இ. 1986)

1901 – சுகர்ணோ, இந்தோவேசியாவின் 1வது அரசுத்தலைவர் (இ. 1970)

1905 – என். எம். பெரேரா, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 1979)

1908 – பி. எஸ். பி. பொன்னுசாமி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1998)

1908 – சா. கணேசன், தமிழக இலக்கியவாதி; காந்தியவாதி, சிற்பக்கலைஞர், கல்வெட்டாய்வாளர், அரசியல்வாதி (இ. 1982)

1926 – அருள் செல்வநாயகம், ஈழத்து எழுத்தாளர் (இ. 1973)

1929 – சுனில் தத், இந்திய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல்வாதி (இ. 2005)

1933 – ஹைன்றிக் ரோரர், நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் (இ. 2013)

1936 – டி. ராமா நாயுடு, இந்திய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 2015)

1949 – ஜி. ராமகிருஷ்ணன், தமிழக இடதுசாரி அரசியல்வாதி

1968 – அலீம் தர், பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரர், நடுவர்

1986 – பாவனா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

1988 – அஜின்கியா ரகானே, இந்தியத் துடுப்பாட்டக்காரர்.

இன்றைய தின இறப்புகள்


1832 – ஜெரமி பெந்தாம், ஆங்கிலேய மெய்யியலாளர் (பி. 1748)

1916 – யுவான் ஷிக்காய், சீனக் குடியரசின் 2வது அரசுத்தலைவர் (பி. 1859)

1920 – வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார், தமிழகப் புரவலர், தமிழறிஞர் (பி. 1870)

1947 – மு. சி. பூரணலிங்கம் பிள்ளை, தமிழகத் தமிழறிஞர் (பி. 1866)

1948 – லூயி லூமியேர், பிரான்சிய இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1864)

1961 – கார்ல் யுங்கு, சுவிட்சர்லாந்து உளவியலாளர், மருத்துவர் (பி. 1875)

1968 – இராபர்ட் எஃப் கென்னடி, அமெரிக்க அரசியல்வாதி (பி. 1925)

1990 – ஆலங்குடி சோமு, தமிழகத் திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் (பி. 1932)

2007 – வீ. கே. சமரநாயக்க, இலங்கை அறிவியலாளர், கல்வியாளர் (பி. 1939)

2008 – ஜோர்ஜ் சந்திரசேகரன், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1940)

2009 – ராஜமார்த்தாண்டன், தமிழகக் கவிஞர், எழுத்தாளர்

2015 – ஆர்த்தி அகர்வால், இந்தியத் திரைப்பட நடிகை (பி. 1984)

2016 – எஸ். ஏ. ஐ. மத்தியு, இலங்கைத் தமிழ்ப் பன்னூலாசிரியர் (பி. 1939)

2021 – எஸ். இளையராஜா, தமிழக ஓவியர்

இன்றைய தின சிறப்பு நாள்


ஆசிரியர் நாள் (பொலிவியா)

உருசிய மொழி நாள் (ஐநா)

தமிழீழ மாணவர் எழுச்சி நாள்