👉 1819ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி சிறந்த வானியல் ஆராய்ச்சியாளர் மற்றும் கணித வல்லுநருமான ஜான் கோச் ஆடம்ஸ்(John Couch Adams)பிறந்தார்.

👉 1910ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி ஆங்கில எழுத்தாளரான ஓ ஹென்றி மறைந்தார். 

👉 1900ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த கவிஞர், புதின ஆசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளரான ஸ்டீபன் கிரேன் (Stephen Crane) மறைந்தார்.


முக்கிய தினம் :-


உலக சுற்றுச்சூழல் தினம்


👉 சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் 1972-லிருந்து கொண்டாடப்படுகிறது.

👉 உலக நாடுகளுக்கே பெரும் சவாலான பிரச்சனையாக உருவெடுத்துள்ள சுற்றுச்சூழலலைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.


பிறந்த நாள் :-


முகம்மது இஸ்மாயில்


👉 கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (Quaid-e-Millat) என்று போற்றப்படும் இந்திய முஸ்லீம் தலைவர்களுள் ஒருவரான முகம்மது இஸ்மாயில் 1896ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி திருநெல்வேலியில் பிறந்தார்.

👉 இவர் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொள்வதற்காக படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டார். 

👉 மேலும், இவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவராகவும், சட்ட சபை உறுப்பினராகவும் (1946-52), டெல்லி மேலவை உறுப்பினராகவும் (1952-58), நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் (1962,1967,1971) பதவி வகித்துள்ளார்.

👉 மக்களுக்கு வழிகாட்டும் தலைவரான இஸ்மாயில் தனது 75வது வயதில் (1972) மறைந்தார். இவரின் மறைவுக்குப்பின் தமிழக அரசு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு காயிதே மில்லத் நாகைப்பட்டினம் மாவட்டம் (Nagai Quaid-E-Millet) என்று பெயர் சூட்டியது.

இன்றைய தின நிகழ்வுகள்


70 – எருசலேம் முற்றுகை: டைட்டசும் அவனது உரோமைப் படையினரும் எருசலேமின் நடுச் சுவரைத் தகர்த்தனர்.

754 – பிரீசியாவில் ஆங்கிலோ-சாக்சன் மதப்பரப்புனர் பொனிபேசு பாகான்களால் கொல்லப்பட்டார்.

1829 – பிரித்தானியப் போர்க் கப்பல் பிக்கில் கியூபாக் கரையில் அடிமைகளை ஏற்றி வந்த வொலிதோரா என்ற கப்பலைக் கைப்பற்றியது.

1832 – லூயி பிலிப்பின் முடியாட்சியைக் கவிழ்க்க பாரிசு நகரில் கிளர்ச்சி முன்னெடுக்கப்பட்டது.

1849 – டென்மார்க் முடியாட்சி அரசியலை ஏற்றுக் கொண்டது.

1851 – ஹேரியட் பீச்சர் ஸ்டோவ்வின் அடிமை முறைக்கெதிரான அங்கிள் டாம்’ஸ் கேபின் என்ற 10-மாதத் தொடர் வெளிவர ஆரம்பித்தது.

1862 – தெற்கு வியட்நாமின் சில பகுதிகளை பிரான்சிற்கு அளிக்கும் உடன்பாடு சாய்கோன் நகரில் எட்டப்பட்டது.

1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியாவின் பியெட்மொண்ட் நகரில் இடம்பெற்ற போரில் அமெரிக்கப் படைகள் கூட்டமைப்புப் படைகளைத் தோற்கடித்து கிட்டத்தட்ட 1,000 பேரை சிறைப்பிடித்தனர்.

1868 – இலங்கையின் மேற்கு மாகாணத்தில் கொள்ளைக் காய்ச்சல் பரவியது.[1]

1873 – சான்சிபார் சுல்தான் பர்காசு பின் சயீது மிகப்பெரும் அடிமை வணிகச் சந்தையை பிரித்தானியாவுடன் செய்துகொண்ட உடன்பாட்டின் மூலம் மூடினார்.[2]

1900 – இரண்டாம் பூவர் போர்: பிரித்தானியர் தென்னாபிரிக்காவின் பிரிட்டோரியாவைக் கைப்பற்றினர்.

1915 – டென்மார்க்கில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1916 – முதலாம் உலகப் போர்: உதுமானியப் பேரரசுக்கு எதிராக அரபுக் கிளர்ச்சி ஆரம்பமானது.

1942 – இரண்டாம் உலகப் போர்: பல்கேரியா, அங்கேரி, உருமேனியா ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா போரை அறிவித்தது.

1944 – இரண்டாம் உலகப் போர்: நார்மாண்டி படையிறக்கம் ஆரம்பம்: ஆயிரத்திற்கும் அதிகமான பிரித்தானியக் குண்டுவீச்சு விமானங்கள் செருமனியின் அத்திலாந்திக் சுவர் மீது 5,000 தொன் குண்டுகளை வீசின.

1945 – செருமனி கூட்டுப் படைகளின் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

1946 – சிக்காகோவில் உணவுசாலை ஒன்று தீப்பிடித்ததில் 61 பேர் உயிரிழந்தனர்.

1956 – இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

1958 – தமிழருக்கு எதிரான வன்முறைகள் 1958: இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 10 உறுப்பினர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.[3]

1959 – லீ குவான் யூ தலைமையில் சிங்கப்பூரின் முதலாவது அரசு பதவியேற்றது.

1963 – அயொத்தொல்லா ரூகொல்லா கொமெய்னியை ஈரான் அரசுத்தலைவர் முகம்மத் ரிசா ஷா பஹ்லவி கைது செய்ததை அடுத்து ஈரானில் கலவரம் வெடித்தது.

1967 – ஆறு நாள் போர் ஆரம்பம்: இசுரேலிய வான்படையினர் எகிப்தின் மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.

1968 – ஐக்கிய அமெரிக்காவின் அரசுத் தலைவருக்கான வேட்பாளர் இராபர்ட் எஃப் கென்னடி பாலத்தீனர் ஒருவனால் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் சுடப்பட்டார். இவர் அடுத்த நாள் உயிரிழந்தார்.

1969 – அனைத்துலக கம்யூனிஸ்டுகளின் மாநாடு மொஸ்கோவில் ஆரம்பமானது.

1974 – ஈழப்போர்: சிவகுமாரன் உரும்பிராயில் காவற்துறையினர் சுற்றி வளைத்த போது சயனைட் அருந்தி மரணமடைந்தார். இவரே ஈழப்போரில் முதன் முதலில் சயனைட் அருந்தி வீரச்சாவையடைந்தவர்.

1979 – இலங்கையின் சுயாதீன தொலைக்காட்சி அரசுடைமை ஆக்கப்பட்டது.

1981 – லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஐந்து பேர் மிக அரிதான நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டமை அறிவிக்கப்பட்டது. இதுவே எயிட்சுக்கான முதலாவது அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வு ஆகும்.

1983 – உருசியாவின் அலெக்சாந்தர் சுவோரவ் என்ற பயணிகள் கப்பல் உலியானவ்சுக் நகரத் தொடருந்துப் பாலம் ஒன்றில் மோதியதில் நூற்றிற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.[4]

1984 – புளூஸ்டார் நடவடிக்கை: இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் உத்தரவின் படி, சீக்கியர்களின் பொற்கோயில் மீது இராணுவத்தினர் தாக்குதலை ஆரம்பித்தனர்.

1995 – போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள் முதன் முதலாக உருவாக்கப்பட்டது.

1997 – காங்கோ குடியரசில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

2000 – காங்கோவில் உகாண்டா, ருவாண்டா படையினரிடையே ஆறு-நாள் போர் ஆரம்பமானது. கிசாங்கனி நகரின் பெரும் பகுதி அழிந்தது.

2003 – பாக்கித்தான், இந்தியா ஆகிய நாடுகளில் பெரும் வெப்பக்காற்று வீசியதில், வெப்பநிலை 50 °C ஐ எட்டியது.

2004 – பிரான்சில் முதன் முதலாக ஒருபால் திருமணம் இரு ஆண்களுக்கிடையே இடம்பெற்றது.

2006 – செர்பியா செர்பியா-மொண்டெனேகுரோவிடம் இருந்து விடுதலை பெற்றது.

2009 – பெருவில் 65 நாட்கள் கலவரங்களின் பின்னர் பாதுகாப்புப் படையினருக்கும் பழங்குடியினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 31 பேர் கொல்லப்பட்டனர்.

2013 – அமெரிக்கா, பிலடெல்பியாவில் கட்டடம் ஒன்று உடைந்ததில் ஆறு பேர் உயிரிழந்தனர், 14 பேர் காயமடைந்தனர்.

2015 – மலேசியாவின் சபா மாநிலத்தில் 6.0 அளவு நிலநடுக்கத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.

2017 – மொண்டெனேகுரோ நேட்டோ அமைப்பில் 29-வது உறுப்பினராக இணைந்து கொண்டது.

2017 – பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதாகக் குற்றம் சாட்டி ஆறு அரபு நாடுகள்—பகுரைன், எகிப்து, லிபியா, சவூதி அரேபியா, யெமன், ஐக்கிய அரபு அமீரகம்—கத்தார் உடனான உறவைத் துண்டித்தன.

இன்றைய தின பிறப்புகள்


1646 – எலினா கார்னரோ பிசுகோபியா, இத்தாலியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1684)

1723 – ஆடம் சிமித், இசுக்கொட்டியப் பொருளியலாளர், மெய்யியலாளர் (இ. 1790)

1771 – ஆணோவரின் முதலாம் எர்ணசுட்டு அகசுத்து (இ. 1851)

1819 – ஜான் கவுச் ஆடம்சு, ஆங்கிலேயக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1892)

1862 – ஆல்வார் குல்ஸ்ட்ரான்ட், நோபல் பரிசு பெற்ற சுவீடன் கண் மருத்துவர் (இ. 1930)

1882 – சைமன் கிரகரி பெரேரா, இலங்கை இயேசு சபை கத்தோலிக்க மதகுரு, வரலாற்றாளர் (இ. 1950)

1883 – ஜான் மேனார்ட் கெயின்ஸ், ஆங்கிலேயப் பொருளியலாளர், மெய்யியலாளர் (இ. 1946)

1887 – ஜார்ஜ் ஜோசப், கேரள இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1938)

1896 – முகம்மது இசுமாயில், இந்திய முசுலிம் அரசியல் தலைவர் (இ. 1972)

1898 – பெடரிக்கோ கார்சியா லோர்க்கா, எசுப்பானியக் கவிஞர், திரைப்பட இயக்குநர் (இ. 1936)

1900 – டென்னிஸ் கபார், நோபல் பரிசு பெற்ற அங்கேரிய-ஆங்கிலேய இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 1979)

1914 – தஞ்சை இராமையாதாஸ், தமிழகக் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் (இ. 1965)

1925 – வ. அ. இராசரத்தினம், ஈழத்து எழுத்தாளர் (இ. 2001)

1929 – வ. ந. நவரத்தினம், இலங்கை அரசியல்வாதி (இ. 1991)

1936 – பூ. ம. செல்லத்துரை, இலங்கை எழுத்தாளர், பத்திரிகையாளர் (இ. 2016)

1944 – விட்பீல்டு டிஃபீ, அமெரிக்கக் கணுக்கவியலாளர்

1961 – ரமேஷ் கிருஷ்ணன், இந்திய டென்னிசு வீரர்

1965 – மயில்சாமி, தென்னிந்திய நடிகர், நகைச்சுவையாளர், தொலைக்காட்சித் தொகுப்பாளர்

1972 – யோகி ஆதித்தியநாத், இந்திய மதகுரு, அரசியல்வாதி

1974 – ரம்பா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இன்றைய தின இறப்புகள்


1900 – ஸ்டீபன் கிரேன், அமெரிக்கக் கவிஞர், புதின எழுத்தாளர் (பி. 1871)

1910 – ஓ ஹென்றி, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1862)

1958 – ரெங்கநாதன் சீனிவாசன், மொரிசியசு அரசியல்வாதி (பி. 1910)

1973 – மாதவ சதாசிவ கோல்வால்கர், இந்திய இந்துத்துவவாதி, ஆர்.எஸ்.எஸ் இயக்கத் தலைவர் (பி. 1906)

1974 – சிவகுமாரன், சயனைட் அருந்தி உயிர் நீத்த முதலாவது ஈழப் போராளி (பி. 1950)

1994 – கிருஷ்ண சைதன்யா, மலையாள இலக்கியவாதி, மதிப்புரைஞர் (பி. 1918)

1999 – அப்துல் அசீஸ், இலங்கை அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (பி. 1921)

2002 – மு. சிவசிதம்பரம், இலங்கை அரசியல்வாதி

2004 – ரானல்ட் ரேகன், அமெரிக்காவின் 40வது அரசுத்தலைவர், நடிகர் (பி. 1911)

2004 – கே. கணேஷ், இலங்கை மலையக எழுத்தாளர் (பி. 1920)

2012 – ரே பிராட்பரி, அமெரிக்க அறிபுனை எழுத்தாளர் (பி. 1920)

இன்றைய தின சிறப்பு நாள்


மர நாள், (நியூசிலாந்து)

தந்தையர் தினம் (தென்மார்க்கு)

இந்தியர் குடியேறிய நாள் (சுரிநாம்)

விடுதலை நாள் (சீசெல்சு)

ஆசிரியர் நாள் (உருமேனியா)

உலக சுற்றுச்சூழல் நாள்