அரக்கோணம் வின்டர்பேட்டை பகுதியில் கடந்த 15 நாட்களாகும் மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் குடிநீர் வழங்காததை கண்டித்து நேற்று மாலை வின்டர்பேட்டை பேங்க் பகுதியின் அருகே அரக்கோணம் - காஞ்சீபுரம் நெடுஞ்சாலையில் அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அரக்கோணம் டவுன் போலீசார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

இதனால் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.