ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி நேற்று வாலாஜா ஒன்றிய பகுதியில் உள்ள கிராமங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்

வாலாஜா அடுத்த வன்னிவேடு மோட்டூர் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட போது திடீரென அங்குள்ள ரேசன் கடைக்கு சென்று, ரேசன் கடையில் பொருட்கள் இருப்பு விவரம் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பொருட்களின் எடையை பார்வையிட்டார். பொதுமக்களிடம் ரேசன் கடையில் வேறு பொருள்கள் வாங்க கட்டாயப்ப டுத்துகிறார்களா எனவும் கேட்டறிந்தார்.

பின்னர் ரேசன் கடையில் பொருட்களின் எடை மற்றும் இருப்பு குறைவு ஆகியவற்றிற்காக ரேசன் கடை ஊழியருக்கு ரூ.500அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து அங்குள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று பார்வையிட்டு, மாணவ, மாணவிகள் வருகை பதிவேடு, கற்றல் திறன், உணவின் தரம், மையத்தின் சுகாதாரம் ஆகியவற்றை கேட்டறிந்து, அறிவுரைகள் வழங்கினார்.