ராணிப்பேட்டை பகுதியில் 15-ந் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
ராணிப்பேட்டை துணை மின் நிலையத்தில் வருகிற 15-ந் தேதி (வியாழக்கிழமை) அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. 

இதனால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ராணிப்பேட்டை நகரம், முத்துக்கடை, ஆட்டோ நகர், வீ.சி.மோட்டூர், ஜெயராம் நகர், பழைய ஆற்காடு சாலை, காந்திநகர், மேல் புதுப்பேட்டை, பிஞ்சி, அல்லிக்குளம், சின்ன தகரகுப்பம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும். 

இந்த தகவலை ராணிப்பேட்டை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் ஆர்.குமரேசன் தெரிவித்தார்.