ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த உடையார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் திவ்யா (வயது 19). இவர் ஆற்காடு தனியார் மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். 

இந்த நிலையில் இவருக்கு தொடர்ந்து அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த திவ்யா நேற்று காலை வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டுள்ளார். 

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார்.

இதுகுறித்து அவரது தந்தை சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாரதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.