சென்னை:ஆவடி ரயில்வே யார்டில் வரும் 7, 8, 9ம் தேதிகளில் மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளதால், அரக்கோணம் தடத்தில் மூன்று நாட்களுக்கு மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மூன்று நாட்களின் ரயில் சேவைகள் மாற்றம் குறித்து, சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  • சென்னை சென்ட்ரல் - ஆவடி நள்ளிரவு 12:15 மணி ரயில் சேவை, சென்னை கடற்கரை - அரக்கோணம் அதிகாலை 1:20 மணி ரயில் சேவை, மூன்று நாளும் ரத்து செய்யப்பட்டுஉள்ளது.

  • பட்டாபிராம் மிலிட் டரி சைடிங் - வேளச்சேரி இரவு 8:25 மணி ரயில், 9ம் தேதி, ஆவடி - சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

  • மூன்று நாட்களும், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்னை சென்ட்ரல் இரவு 9:50 மணி ரயில், மூன்று நாட்களும் ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும். அரக்கோணம் - வேளச்சேரி அதிகாலை 4:00 மணி ரயில், சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும்

  • பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - ஆவடி நள்ளிரவு 11:55 மணி ரயில், 8ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது

  • சென்னை சென்ட்ரல் - ஆவடி இரவு 11:30, 11:45 மணி ரயில்கள், 8ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளன.

  • வேளச்சேரி - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இரவு 10:30 மணி ரயில், 8ம் தேதி, சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும்

  • பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இரவு 10:45 மணி ரயில், 8ம் தேதி ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.