👉 1911ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது.


முக்கிய தினம் :-


சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்

🚭 உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே 31ஆம் தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. 

🚭 புகையிலையில் நிக்கோடின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இதில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய காரணிகள் உள்ளன. புகையிலையின் தீங்கை மக்களிடம் கொண்டு செல்வதும், புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும் அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே இத்தினத்தின் நோக்கமாகும்.


நினைவு நாள் :-



👉 1976ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி மூலக்கூறு உயிரியலின் சிற்பி ஜாக்குவஸ் லூசியன் மோனாட்(Jacques Lucien Monod) மறைந்தார்.


பிறந்த நாள் :-


வால்ட் விட்மன்

✍ அடிமை வியாபாரத்தை எதிர்த்தவரான வசனநடை கவிதையின் தந்தை வால்ட் விட்மன் (Walt Whitman) 1819ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் ஹன்டிங்டனில் பிறந்தார்.

✍ இவர் சாங் ஆஃப் மைசெல்ஃப் என்ற கவிதை நூலையும், பிராங்க்ளின் இவான்ஸ் என்ற நாவலையும் எழுதியுள்ளார். அடிமைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்து Free Soil (சுதந்திர பூமி) என்ற பத்திரிக்கையை தொடங்கினார்.

✍ கருப்பின மக்களை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்க ஆபிரஹாம் லிங்கன் எடுத்த நடவடிக்கைகளை தொடர்ந்து, அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கியது.

✍ போர் வெற்றி பெற்ற 5-ம் நாளில் ஆபிரஹாம் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மனவேதனையில் விட்மன் எழுதிய ஓ கேப்டன், மை கேப்டன் என்ற இரங்கற்பா, படிப்போரை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.

✍ பல போராட்டங்களை கடந்து தனக்கான அங்கீகாரத்தை பெற்ற புரட்சிக்கவிஞர் வால்ட் விட்மன் 72வது வயதில் (1892) மறைந்தார்.

இன்றைய தின நிகழ்வுகள்


455 – உரோமைப் பேரரசர் பெட்ரோனியசு மாக்சிமசு உரோமை விட்டு வெளியேறுகையில் கும்பல் ஒன்றினால் கற்களால் எறிந்து கொல்லப்பட்டார்.

1223 – செங்கிஸ் கானின் மங்கோலியப் படை சுபுதையின் தலைமையில் கிப்சாக்கியரை சமரில் தோற்கடித்தது.

1293 – சிங்காசாரி மன்னர் கேர்த்தனிகாரா யுவான்களுக்குத் திறை செலுத்த மறுத்ததால், மங்கோலியர்கள் சாவகம் மீது போர் தொடுத்தனர். இப்போரில் மங்கோலியர் தோல்வியுற்றனர்.[1][2]

1669 – சாமுவேல் பெப்பீசு கடைசிப் பதிவைத் தனது நாட்குறிப்பில் எழுதினார்.

1790 – ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவது பதிப்புரிமைச் சட்டத்தை அமுலாக்கியது.

1859 – வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் பிக் பென் மணிக்கூண்டுக் கோபுரம் இயங்க ஆரம்பித்தது.

1889 – அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் ஜோன்ஸ்டவுன் நகரில் அணைக்கட்டு ஒன்று உடைந்ததில் 2,200 பேர் உயிரிழந்தனர்.

1902 – இரண்டாம் பூவர் போர் முடிவுற்றது. தென்னாபிரிக்கா பிரித்தானியாவின் முழுமையான ஆட்சியின் கீழ் வந்தது.

1910 – தென்னாபிரிக்க ஒன்றியம் அமைக்கப்பட்டது.

1911 – டைட்டானிக் கப்பல் வட அயர்லாந்து, பெல்பாஸ்ட்டில் வெள்ளோட்டம் விடப்பட்டது.

1911 – மெக்சிக்கோ புரட்சி: மெக்சிக்கோவின் அரசுத்தலைவர் பொர்பீரியோ தீயாசு நாட்டை விட்டு வெளியேறினார்.

1921 – அமெரிக்காவில் ஓக்லஹோமா, துல்சா என்ற இடத்தில் இடம்பெற்ற இனக்கலவரங்களின் போது 39 கறுப்பினத்தவர் கொல்லப்பட்டனர்.

1935 – பாக்கித்தானின் குவெட்டா நகரில் 7.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 40,000 பேர் உயிரிழந்தனர்.

1941 – ஆங்கில-ஈராக்கியப் போர்: ஐக்கிய இராச்சியம் ஈராக்கை மீளக் கைப்பற்றியது.

1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆத்திரேலியாவின் சிட்னி நகரைத் தாக்கின.

1961 – தென்னாபிரிக்கா பொதுநலவாய அமைப்பில் இருந்து விலகியது. தென்னாபிரிக்கக் குடியரசு அமைக்கப்பட்டது.

1962 – மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.

1970 – பெருவில் இடம்பெற்ற 7.9 அளவு நிலநடுக்கத்தில் யூங்கே என்ற நகர் முழுமையாகப் புதையுண்டதில் 70,000 பேர் வரையில் உயிரிழந்தனர். 50,000 பேர் காயமடைந்தனர்.

1973 – கெமர் ரூச் மீதான குண்டுத் தாக்குதல்களுக்கான அமெரிக்க நிதியுதவிகளைக் குறைக்க அமெரிக்க மேலவை வாக்களித்தது.

1973 – சென்னையில் இருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்சு விமானம் 440 பாலம் விமான நிலையத்தை அண்மித்த போது தீப்பற்றி எரிந்ததில் அதில் பயணம் செய்த 65 பேரில் 48 பேர் உயிரிழந்தனர்.

1981 – யாழ் நகரின் பல கட்டடங்கள், வாகனங்கள் நள்ளிரவில் இலங்கைக் காவல்துறையினரால் எரித்து அழிக்கப்பட்டன. யாழ் பொது நூலகம் அடுத்த நாள் தென்னிலங்கைக் குண்டர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.

1985 – வட அமெரிக்காவில் ஒகையோ, பென்சில்வேனியா, நியூயார்க், ஒன்றாரியோ ஆகிய இடங்களில் வீசிய சுழற்காற்றினால் 76 பேர் உயிரிழந்தனர்.

1991 – அங்கோலாவில் பல-கட்சி மக்களாட்சி முறைக்கான உடன்பாடு ஐநாவின் ஆதரவில் எட்டப்பட்டது.

1997 – கனடாவில் நியூ பிரன்ஸ்விக்கையும் பிரின்ஸ் எட்வர்ட் தீவையும் இணைக்கும் கூட்டமைப்புப் பாலம் திறக்கப்பட்டது.

2004 – ஈழப்போர்: ஈழத்துப் பத்திரிகையாளர் ஐயாத்துரை நடேசன் மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

2005 – ஈழப்போர்: இலங்கையின் புலனாய்வுத்துறை உயர் அதிகாரி மேஐர் நிசாம் முத்தாலிப் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

2013 – சிறுகோள் “1998 கியூ.ஈ.2” அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு பூமிக்கு மிகக் கிட்டவாக வந்தது.

2017 – காபூல் நகரில் மேற்கொள்ளப்பட்ட வாகனக் குண்டுத் தாக்குதலில் 90 பேர் கொல்லப்பட்டனர், 463 பேர் காயமடைந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்


1725 – அகில்யாபாய் ஓல்கர், மராட்டியப் பேரரசின் கீழிருந்த மல்வா இராச்சியத்தின் அரசி (இ. 1795)

1819 – வால்ட் விட்மன், அமெரிக்கக் கவிஞர், ஊடகவியலாளர் (இ. 1892)

1852 – ஜூலியஸ் ரிச்சர்டு பெட்ரி, செருமானிய நுண்ணுயிரியலாளர் (இ. 1921)

1912 – சியான்-ஷீங் வு, சீன-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1997)

1912 – மார்ட்டின் சுவார்சுசைல்டு, செருமானிய-அமெரிக்க வானியற்பியலாளர் (இ. 1997)

1919 – எம். ஐ. எம். அப்துல் மஜீத், இலங்கை அரசியல்வாதி (இ. 1970)

1930 – கிளின்ட் ஈஸ்ட்வுட், அமெரிக்க நடிகர், இயக்குநர்

1931 – நீலாவணன், ஈழத்துக் கவிஞர் (இ. 1975)

1941 – வில்லியம் நோர்டவுசு, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்

1945 – லோரண்ட் பாக்போ, ஐவரி கோஸ்ட்டின் 4வது அரசுத்தலைவர்

1948 – சிவெத்லானா அலெக்சியேவிச், நோபல் பரிசு பெற்ற பெலருசிய எழுத்தாளர்

1966 – ரொசான் மகாநாம, இலங்கைத் துடுப்பாளர்

1976 – கோலின் பார்ரெல், ஐரிய நடிகர்

இன்றைய தின இறப்புகள்


1809 – ஜோசப் ஹேடன், ஆத்திரிய இசையமைப்பாளர் (பி. 1732)

1832 – எவரிஸ்ட் கால்வா, பிரான்சியக் கணிதவியலாளர் (பி. 1811)

1910 – எலிசபெத் பிளாக்வெல், ஆங்கிலேய-அமெரிக்க மருத்துவர் (பி. 1821)

1960 – டி. பி. ஜாயா, இலங்கை அரசியல்வாதி, கல்வியாளர் (பி. 1890)

1964 – பி. ஆர். மாணிக்கம், தமிழகக் கட்டிடக் கலைஞர் (பி. 1909)

1973 – மோகன் குமாரமங்கலம், இந்திய அரசியல்வாதி (பி. 1916)

1976 – ஜாக்குவஸ் மோனாட், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய உயிரியலாளர் (பி. 1910)

1981 – பார்பரா வார்ட், ஆங்கிலேயப் பொருளியலாலர், ஊடகவியலாளர் (பி. 1914)

1987 – ஜான் ஆபிரகாம், இந்தியத் திரைப்பட இயக்குநர் (பி. 1937)

2000 – அ. ஜெ. வில்சன், இலங்கை வரலாற்றாளர், எழுத்தாளர் (பி. 1928)

2004 – ஐயாத்துரை நடேசன், இலங்கை ஊடகவியலாளர் (பி. 1954)

2007 – எசு. எம். கமால், தமிழக வரலாற்று ஆய்வாளர், நூலாசிரியர், பதிப்பாளர் (பி. 1928)

2009 – கமலா தாஸ், மலையாள எழுத்தாளர் (பி. 1934)

இன்றைய தின சிறப்பு நாள்


உலக புகையிலை எதிர்ப்பு நாள்