உலக குடும்ப மருத்துவர் தினம்

ஒவ்வொரு ஆண்டும் மே 19ஆம் தேதி உலக குடும்ப மருத்துவர் தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகளுக்கு குடும்ப மருத்துவர்கள் வழங்கி வரும் பங்கையும், சேவையையும் முதன்மைப்படுத்த தேசிய கல்லூரிகள் கழகங்களின் உலக அமைப்பு (உலகக் குடும்ப மருத்துவர் அமைப்பு - WONCA) 2010ல் முதன்முதலாக இந்நாளை அறிவித்தது.

குடும்ப மருத்துவர்கள், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுவான மருத்துவராக நீண்ட காலமாக இருப்பதால், அவர்கள் நோய்வாய்ப்படும் போதும் அவர்களால் முடியாத பட்சத்திலும் வீட்டிற்கே வந்து மருத்துவம் பார்ப்பார். எனவே, குடும்ப மருத்துவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை பாராட்டும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.


நினைவு நாள் :-

ஜானகி இராமச்சந்திரன்


1996ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி தமிழ்நாட்டின் முதல் பெண் முதல்வரான ஜானகி இராமச்சந்திரன் மறைந்தார். 

1985ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி விடுதலைப் போராட்ட வீரரும், பி.எஸ். என்று மக்களால் அழைக்கப்பட்ட பி.சுந்தரய்யா மறைந்தார்.

1904ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி இந்தியத் தொழில் துறையின் தந்தை என்று அறியப்படும் ஜம்ஷெட்ஜி நுஸர்வான்ஜி டாடா மறைந்தார்.


பிறந்த நாள் :-


நீலம் சஞ்சீவ ரெட்டி

இந்தியாவின் ஆறாவது குடியரசு தலைவரான நீலம் சஞ்சீவி ரெட்டி அவர்கள், 1913ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அனந்தபூர் என்ற மாவட்டதிலுள்ள இல்லூர் என்ற கிராமத்தில் பிறந்தார்.

1929ல் அனந்தபூருக்கு வந்த மகாத்மா காந்தியின் வருகை இவருடைய வாழ்க்கையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகு அவருடைய கொள்கைகள் மீது ஈடுபாடு கொண்டார்.

இவர் ஆந்திரப் பிரதேச மாகாண காங்கிரஸ் கமிட்டி செயலாளராக நியமிக்கப்பட்டு, பத்து ஆண்டுகள் பொறுப்பில் இருந்தார். சென்னை காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர், செயலாளர், இந்திய சட்டமன்ற உறுப்பினர் என பல பதவிகளை வகித்த இவர், 1951ல் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றியும் பெற்றார். பிறகு, ராஜ்ய சபா உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1956 முதல் 1960 வரை சிறப்பாக பணியாற்றினார். பிறகு 1962ல் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, தன்னுடைய பணியை தொடர்ந்தார்.

தன்னுடைய திறமையான மற்றும் நேர்மையான பணியாற்றலால் 1977ஆம் ஆண்டு இந்தியாவின் ஆறாவது குடியரசு தலைவராக (1977-1982) தேர்ந்தெடுக்கப்பட்டார். தன்னுடைய இளம் வயதிலேயே தீவிர சுதந்திரப் பற்றுக்கொண்ட இவர் தன்னுடைய 83வது வயதில் (1996) மறைந்தார்.

இன்றைய தின நிகழ்வுகள்


715 – இரண்டாம் கிரெகரி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1051 – பிரான்சின் முதலாம் என்றி மன்னர் கீவ் நகரின் ஆன் என்பவரைத் திருமணம் புரிந்தார்.

1268 – பைபார்களின் முற்றுகையை அடுத்து அந்தியோக்கியா வீழ்ந்தது.

1499 – அராகனின் 13-வயது கேத்தரினுக்கும், வேல்சு இலவரசர் 12 அவ்யது ஆர்தருக்கும் திருமணம் நடைபெற்ரது.

1535 – பிரெஞ்சு நடுகாண் பயணி இழ்சாக் கார்ட்டியே வட அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது பயணத்தை 110 பேருடன் மூன்று கப்பல்களில் ஆரம்பித்தார்.

1536 – இங்கிலாந்தின் எட்டாம் என்றியின் இரண்டாம் மனைவி ஆன் பொலின் வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டாள்;

1542 – புரோம் இராச்சியம் தவுங்கூ வம்சத்திடம் (இன்றைய மியான்மரில்) வீழ்ந்தது.

1568 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் மகாராணி ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியைக் கைது செய்ய உத்தவிட்டார்.

1649 – இங்கிலாந்தை பொதுநலவாய நாடாக அங்கீகரிக்கும் சட்டமூலம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு இங்கிலாந்து குடியரசாக இருந்தது.

1655 – ஆங்கிலோ-எசுப்பானியப் போர்: ஜமேக்கா மீதான முற்றுகை ஆரம்பமானது.

1743 – சான்-பியேர் கிறிஸ்தீன் செல்சியசு வெப்பநிலை அலகைக் கண்டுபிடித்தார்.

1780 – நியூ இங்கிலாந்து, மற்றும் கனடாவின் சில பகுதிகளில் அசாதாரணமான இருட்டு பகல் நேரத்தில் அவதானிக்கப்பட்டது.

1802 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் செவாலியே விருதை அறிமுகப்படுத்தினார்.

1828 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜான் குவின்சி ஆடம்ஸ் கம்பளி உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் பொருட்டு தீர்வை சட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

1834 – இலங்கையில் பாடசாலைகள் ஆணைக்குழு அமைக்கப்பட்டது.[1]

1848 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: கலிபோர்னியா, நெவாடா, யூட்டா மற்றும் பல பகுதிகளை ஐக்கிய அமெரிக்காவுக்கு $15 மில்லியன்களுக்க்குக் கொடுக்க மெக்சிக்கோ முன்வந்ததை அடுத்து போர் முடிவுக்கு வந்தது.

1919 – முஸ்தாபா கெமால் அத்தாதுர்க் அனத்தோலியக் கருங்கடல் கரையில் தரையிறங்கினார். துருக்கிய விடுதலைக்கான போர் ஆரம்பமானது.

1934 – பல்கேரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து கீமோன் ஜோர்ஜியெவ் பிரதமராகப் பதவியேற்றார்.

1950 – இசுரேலியக் கப்பல்களுக்கும் வணிகத்திற்கும் சுயஸ் கால்வாய் மூடப்படும் என எகிப்து அறிவித்தது.

1950 – பாக்கித்தானுக்குக் கொண்டு செல்லப்படவிருந்த வெடிகுண்டுகள் அடங்கிய படகு அமெரிக்காவின் தெற்கு அம்போய் துறைமுகத்தில் வெடித்ததில் நகரம் பெரும் சேதத்துக்குள்ளாகியது.

1961 – சோவியத்தின் வெனேரா 1 வெள்ளிக் கோளைக் கடந்தது. பூமியை விட வேறொரு கோளைக் கடந்த முதலாவது விண்ணூர்தி இதுவாகும்.

1961 – அசாம் மாநிலத்தில் சில்சார் தொடருந்து நிலையத்தில், வங்காள மொழி இயக்கத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது காவல்துறையினர் சுட்டதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

1971 – சோவியத் ஒன்றியம் மார்ஸ் 2 விண்கலத்தை ஏவியது.

1978 – விடுதலைப் புலிகள் மீதான தடை ஜே. ஆர். ஜெயவர்த்தனா அரசினால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.

1991 – குரோவாசியர்கள் தமது விடுதலைக்காக பொது வாக்கெடுப்பில் வாக்களித்தனர்.

2012 – சிரியாவில் இடம்பெற்ற வாகனக் குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

2016 – எகிப்திய வானூர்தி பாரிசில் இருந்து கெய்ரோ செல்லும் வழியில் நடுநிலக் கடலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 66 பேரும் உயிரிழந்தனர்.

2018 – வேல்சு இளவரசர் ஹாரி, ரேச்சல் மேகன் மெர்கல் ஆகியோரின் திருமணம் வின்சர் மாளிகையில் இடம்பெற்றது.

இன்றைய தின பிறப்புகள்


701 – லி பை, சீனக் கவிஞர் (இ. 762)

1762 – யோஃகான் ஃவிக்டெ, செருமானிய மெய்யியலாளர் (இ. 1814)

1824 – நானா சாகிப், இந்திய சிப்பாய் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கியவர் (இ. 1857)

1858 – ச. வே. இராமன் பிள்ளை, மலையாள எழுத்தாளர் (இ. 1922)

1881 – முஸ்தாபா கெமால் அத்தாதுர்க், துருக்கியின் 1வது அரசுத்தலைவர் (இ. 1938)

1890 – ஹோ சி மின், வியட்நாமின் 1வது அரசுத்தலைவர் (இ. 1969)

1910 – நாத்தூராம் கோட்சே, மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலையாளி (இ. 1949)

1912 – கிருஷ்ண குமாரசிங் பவசிங், இந்திய அரசியல்வாதி (இ. 1965)

1913 – நீலம் சஞ்சீவ ரெட்டி, இந்தியாவின் 6வது குடியரசுத் தலைவர் (இ. 1996)

1914 – கே. டி. கே. தங்கமணி, இந்தியத் தொழிற்சங்க இயக்க முன்னோடி, அரசியல்வாதி (இ. 2001)

1925 – போல் போட், கம்போடியாவின் 29வது பிரதமர், இராணுவத் தலைவர் (இ. 1998)

1925 – மல்கம் எக்ஸ், அமெரிக்க மனித உரிமைச் செயற்பாட்டாளர் (இ. 1965)

1933 – எட்வர்ட் டி போனோ, மால்ட்டா மருத்துவர், நூலாசிரியர்

1934 – பி. லீலா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி (இ. 2005)

1934 – ரஸ்கின் பாண்ட், இந்திய எழுத்தாளர், கவிஞர்

1938 – கிரிஷ் கர்னாட், கன்னட நடிகர், எழுத்தாளர் (இ. 2019)

1964 – முரளி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (இ. 2010)

1984 – தேச. மங்கையர்க்கரசி, தமிழக இலக்கிய, சமயச் சொற்பொழிவாளர்

இன்றைய தின இறப்புகள்


1296 – ஐந்தாம் செலஸ்தீன் (திருத்தந்தை) (பி. 1215)

1536 – ஆன் பொலின், இங்கிலாந்தின் அரசி, எட்டாம் என்றியின் இரண்டாம் மனைவி (பி. 1501)

1623 – மரியம் உசு-சமானி, முகலாயப் பேரரசி (பி. 1542)

1864 – நாதனீல் ஹாதோர்ன், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1804)

1895 – ஒசே மார்த்தி, கியூபா ஊடகவியலாளர், கவிஞர், மெய்யியலாளர் (பி. 1853)

1898 – வில்லியம் கிளாட்ஸ்டோன், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1809)

1904 – ஜம்சேத்ஜீ டாட்டா, இந்தியத் தொழிலதிபர் (பி. 1839)

1935 – டி. ஈ. லாரன்சு, பிரித்தானியத் தொல்லியலாளர் (பி. 1888)

1952 – பெங்களூர் நாகரத்தினம்மா, கர்நாடக மரபிசை வாய்ப்பாட்டுக் கலைஞர் (பி. 1878)

1985 – பி. சுந்தரய்யா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், மார்க்சிய அரசியல்வாதி (பி. 1913)

1994 – ஜாக்குலின் கென்னடி ஒனாசிஸ், அமெரிக்காவின் 37வது முதல் சீமாட்டி, ஊடகவியலாளர் (பி. 1929)

1996 – வி. என். ஜானகி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை, தமிழகத்தின் 4-வது முதல்வர் (பி. 1924 )

2007 – ஆ. பு. வள்ளிநாயகம், தமிழக எழுத்தாளர், இதழாளர் (பி. 1953)

2009 – க. வேலாயுதம், ஈழத்து எழுத்தாளர் (பி. 2017)

இன்றைய தின சிறப்பு நாள்


இனவழிப்பு நினைவு நாள் (கிரேக்கம்)

ஓ சி மின் பிறந்தநாள் (வியட்நாம்)

கல்லீரல் அழற்சி சோதனை நாள் (ஐக்கிய அமெரிக்கா)

அன்னையர் நாள் (கிர்கிசுத்தான்)