வாலாஜா அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஏஜர்(21). இவர் சென்னை ஓரகடத்தில் உள்ள தனியார் தொழிற் சாலையில் வேலை செய்து வந்தார். இதே போல் அதே பகுதியை சேர்ந்தவர் மோகன்(20). இவர் மேல்விஷாரத்திலுள்ள தனியார் கல்லுரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். நண்பர்களான இவர்கள் இருவரும் சோளிங்கருக்கு நேற்று பைக்கில் சென்றனர். பைக்கை ஏஜர் ஓட்டி சென்றார்.

அப்போது வாலாஜா அடுத்த சித்தாத்தூரில் உள்ள தனியார் பாலி டெக்னிக் கல்லூரி அருகே சென்ற போது எதிரே வந்த டிப்பர் லாரி இவர்கள் பைக் மீது மோதியது. இதனால் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் ஏஜர் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக பலியானார். மேலும் மோகன் படுகாயமடைந்தார். இதைபார்த்த அருகிலிருந்தவர்கள் மோகனை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.