ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த பள்ள குன்னத்தூர், பிராமணர் தெருவை சேர்ந்தவர் கமலம்மாள்(72). இவருக்கு கடந்த 6 மாதமாக உடல்நிலை சரியில்லாததால் அரக்கோணம் சென்று சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது பேரன் யுவராசன் என்பவருடன் நேற்று முன்தினம் பைக்கில் அரக்கோணம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். பொன்னியம்மன் கோயில் அருகே சென்றபோது, கமலம்மாள் திடீரென மயங்கி பைக்கில் இருந்து கீழே விழுந்துள்ளார். பின்னர் அவரை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கமலம்மாள் மகன் கோபி (43) பாணாவரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் மேசிட் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.