சிப்காட்டில் காட்டிபாடியை சேர்ந்த செக்யூரிட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். காட்பாடி அருகே திருவலம் அடுத்த கெம்பராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் துளசிராமன் (63). இவர் சிப்காட் பேஸ்-1 பகுதியில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று வேலை பார்த்து கொண்டு இருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், அங்கு வந்து பரிசோதனை செய்ததில் துளசிராமன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.