👉 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி இந்திய திரைப்பட நடிகையான ஸ்ரீதேவி மறைந்தார்.

👉 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஐ.மாயாண்டி பாரதி மறைந்தார்.

👉 1955ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை தொடங்கியவர்களுள் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ் அமெரிக்காவிலுள்ள சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார்.

முக்கிய தினம் :-

மத்திய கலால்வரி தினம் (Central Excise Day)


🌟 இந்திய அரசாங்கத்தால் 1944ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதியன்று வரம்பு மீறப்பட்ட பொருட்களின் மீதான வரிகளை சேகரிக்க மத்திய மசோதா சட்டம் உருவாக்கப்பட்டது.


🌟 சரக்கு உற்பத்தி தொழிலில் உள்ள ஊழலைத் தடுக்கவும், சிறந்த சுங்கவரி சேவைகளை மேற்கொள்ள மற்ற விதிகளை நடைமுறைப்படுத்தவும், இந்தியாவில் சிறந்த சமூக-பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.


🌟 இத்தினத்தில் நேர்மையாக பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களின் உண்மையான சேவையை பாராட்டி இந்திய அரசாங்கம் விருதுகள் வழங்கி கௌரவிக்கிறது.



இ.எஸ்.ஐ.சி நிறுவன தினம் (E.S.I.C Day)


🌺 பண்டிட் ஜவஹர்லால் நேருவினால் 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி கான்பூரில் இ.எஸ்.ஐ (Employees State Insurance Corporation) திட்டம் தொடங்கப்பட்டது. தொழிலாளர்களுக்கு தேவையின் அடிப்படையில் சமூக நோக்கத்தோடு காப்பீடு வழங்கப்படுகிறது. குறைந்த வருவாயுள்ள தொழிலாளர்கள் நோய்வாய்ப்பட்டு அவர்கள் கஷ்டப்படும் நெருக்கடி காலத்தில் இ.எஸ்.ஐ.சி கழகம் உதவி செய்து வருகிறது.



பிறந்த நாள் :-

ஜெயலலிதா


🌟 தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்கள் 1948ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி மைசூரில் பிறந்தார்.


🌟 தனது குழந்தை பருவத்திலிருந்தே, கல்வியில் சிறந்து விளங்கிய ஜெயலலிதா அவர்கள், சட்டம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டார். ஆனால் சூழ்நிலை காரணமாக ஷங்கர்.வி.கிரி அவர்கள் இயக்கிய 'எபிஸில்' என்ற ஆங்கில படம் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார்.


🌟 இவர் 'வெண்ணிற ஆடை' என்ற படம் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவரது திரை வாழ்க்கைக்கு ஒரு முடிவை தந்த படம் 1980ஆம் ஆண்டு வெளியான 'நதியை தேடி வந்த கடல்' ஆகும்.


🌟 அதே ஆண்டில், அதிமுக நிறுவனரான எம்.ஜி.ஆர் அவர்கள், இவரை பிரச்சார செயலாளராக நியமித்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார்.


🌟 எம்.ஜி.ஆரின் மரணத்திற்கு பின், ஜானகி ராமச்சந்திரன் அவர்களை அதிமுகவின் எதிர்கால தலைவராக கட்சி உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் 1989ஆம் ஆண்டு அதிமுக கட்சி ஒன்றுபட்டு ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. இவருக்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது.


🌟 1991, 2001, 2011, 2015 மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று, தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்றார். தமிழ்நாட்டின் தங்க தாரகையாக திகழ்ந்த ஜெயலலிதா அவர்கள் தன்னுடைய 68வது வயதில் (2016) மறைந்தார்.



ஆர்.முத்தையா


🌸 தமிழ் தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கிய ஆர்.முத்தையா 1886ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சுண்டிக்குளியில் பிறந்தார்.


🌸 1913-ல் ஸ்லோன் டுப்ளோயன் சர்வதேச சுருக்கெழுத்துப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். இவர் 21 வயதில் மலேசியா, சிங்கப்பூர் இணைந்த பகுதியான மலாயா ரயில்வே துறையில் வேலை பார்த்தார். அங்கு 1930 வரை பணிபுரிந்தார்.


🌸 ஆங்கிலத்தில் இருப்பதுபோல தமிழில் தட்டச்சு இயந்திரம் இருந்தால் நன்றாக இருக்கும் என கருதி, அதை உருவாக்க முயற்சித்தார். தமிழ் எழுத்துக்கள் அனைத்தையும் 4 வரிசைகளில் 46 விசைகளுக்குள் வைப்பது சவாலாக இருந்தது.


🌸 இறுதியாக தமிழ் தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கி, அதற்கு 'ஸ்டாண்டர்டு தட்டச்சு' என பெயரிட்டார். மேலும் அந்த இயந்திரத்தில் சில குறைபாடுகள் இருப்பதைக் கண்டறிந்து அவற்றை சரிசெய்து, மேம்படுத்தினார்.


🌸 தமிழ் தட்டச்சு இயந்திரத்தின் தந்தை என போற்றப்படும் ஆர்.முத்தையா இலங்கையில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களைப் பற்றி ஆங்கிலத்தில் நூல் ஒன்று எழுதியுள்ளார். ஆனால் அந்நூல் வெளியிடுவதற்கு முன்பே மறைந்து விட்டார்.


இன்றைய தின நிகழ்வுகள்


1386 – நேப்பில்சு மற்றும் அங்கேரி மன்னன் மூன்றாம் சார்லசு கொல்லப்பட்டான்.


1525 – எசுப்பானிய-ஆசுத்திரிய இராணுவம் பாவியா நகர சமரில் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தது.


1582 – கிரெகொரியின் நாட்காட்டி திருத்தந்தை 13வது கிரெகோரியினால் ஆணை ஓலை மூலம் அறிவிக்கப்பட்டது.


1739 – கர்னால் சமரில், ஈரானிய ஆட்சியாளர் நாதிர் ஷா இந்திய முகலாயப் பேரசர் முகம்மது ஷாவின் படைகளைத் தோற்கடித்தார்.


1809 – இலண்டன் ரோயல் நாடக அரங்கு தீக்கிரையானது.


1822 – உலகின் முதலாவது சுவாமிநாராயண் கோயில் அகமதாபாத்தில் திறக்கப்பட்டது.


1826 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பர்மா மன்னர் ஆவாவுக்கும் இடையில் ஏற்பட்ட யாந்தபு உடன்பாட்டினை அடுத்து முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர் முடிவுக்கு வந்தது.


1848 – பிரான்சின் லூயி-பிலிப் மன்னர் முடிதுறந்தார்.


1854 – முதற்தடவையாக சிவப்புப் பென்னி என அழைக்கப்படும் துளைகளிடப்பட்ட அஞ்சல் தலை பிரித்தானியாவில் வெளியிடப்பட்டது.


1863 – அரிசோனா ஐக்கிய அமெரிக்காவின் பிராந்தியமாக அமைக்கப்பட்டது.


1875 – ஆத்திரேலியக் கிழக்குக் கரையில் கோத்தன்பேர்க் என்ற கப்பல் பவளத்திட்டு ஒன்றில் மோதி முழ்கியதில் 102 பேர் உயிரிழந்தனர்.


1881 – இலி ஆற்றுப் படுகையின் கிழக்குப் பகுதியை சீனாவுக்குக் கையளிக்கும் உடன்பாடு சீனாவுக்கும் உருசியாவுக்கும் இடையில் எட்டப்பட்டது.


1895 – கியூபாவில் புரட்சி வெடித்ததை அடுத்து விடுதலைக்கான கியூபா போர் ஆரம்பமானது. இது 1898 இல் எசுப்பானிய அமெரிக்கப் போருடன் முடிவுக்கு வந்தது.


1916 – கொரிய ஆளுநர் தொழு நோயாளிகளுக்கான மருத்துவமனையை ஆரம்பித்தார்.


1918 – எஸ்தோனியா விடுதலையை அறிவித்தது.


1920 – நாட்சி கட்சி ஆரம்பிக்கப்பட்டது.


1945 – எகிப்தியப் பிரதமர் அகமது மாகிர் பாசா நாடாளுமன்றத்தில் வைத்துக் கொல்லப்பட்டார்.


1949 – 1948 அரபு – இசுரேல் போர்: போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது.[1]


1969 – மரைனர் 6 விண்கலம் செவ்வாய் கோளுக்கு ஏவப்பட்டது.


1971 – மூன்று நாட்களுக்கு முன்னர் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு கட்சியின் தலைவர் ஏமந்தகுமார் போசு கொல்லப்பட்டதை அடுத்து பா. கா. மூக்கைய்யாத்தேவர் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


1981 – கிரேக்கத்தில் நிகழ்ந்த 6.7 ரிக்டர் நிலநடுக்கத்தினால் 16 பேர் உயிரிழந்தனர்.


1984 – லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஆரம்பப் பள்ளி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டனர், 12 பேர் காயமடைந்தனர்.


1989 – ஒனலுலுவில் இருந்து நியூசிலாந்து நோக்கிச் சென்ற யுனைட்டட் ஏர்லைன்சு விமானத்தின் சரக்கு வழிக் கதவு திடீரெனத் திறந்ததில் ஒன்பது பயணிகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.


1991 – வளைகுடாப் போர் ஆரம்பம்: தரைப் படைகள் சவூதி அரேபிய எல்லையைக் கடந்து ஈராக்கை அடைந்தன.


1999 – கிழக்கு சீனாவில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 61 பேர் உயிரிழந்தனர்.


2004 – வடக்கு மொரோக்கோவில் 6.3 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 628 பேர் உயிரிழந்தனர்.


2006 – பிலிப்பீன்சு அரசுத்தலைவர் குளோரியா மகபகல்-அர்ரொயோ நாட்டில் அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்தார்.


2007 – மணிப்பூர் தமெல்லாங் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.


2008 – 32 ஆண்டுகளாக கியூபாவின் அரசுத்தலைவராக இருந்த பிடல் காஸ்ட்ரோ அப்பதவியில் இருந்து இளைப்பாறினார். இவர் கூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் தலைவராக அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பதவியில் இருந்தார்.


2009 – வாட்சப் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது.


2016 – கனடாவில் டாரா ஏர் விமானம் ஒன்று வீழ்ந்ததில், 23 பேர் உயிரிழ்ந்தனர்.


இன்றைய தின பிறப்புகள்


1500 – ஐந்தாம் சார்லசு, புனித உரோமைப் பேரரசர் (இ. 1558)


1670 – சத்திரபதி இராஜாராம், மராட்டியப் பேரரசர் (இ. 1700)


1886 – ஆர். முத்தையா, தமிழ் தட்டச்சுப் பொறியை உருவாக்கிய இலங்கை-சிங்கப்பூர்த் தமிழர்


1920 – நானம்மாள், இந்திய யோகக்கலைப் பயிற்சியாளர் (இ. 2019)


1928 – ஏ. பி. நாகராசன், தமிழகத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் (இ. 1977)


1942 – காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பிவாக், இந்திய மெய்யியலாளர்


1944 – டேவிட். ஜே. வைன்லேண்டு, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்


1946 – டெர்ரி வினோகிராட், அமெரிக்கக் கணிப்பொறி அறிவியலாளர், உளவியலாளர்


1948 – செ. செயலலிதா, தென்னிந்திய நடிகை, அரசியல்வாதி, தமிழ்நாட்டின் 16வது முதலமைச்சர் (இ. 2016)


1950 – ஸ்டீவ் மெக்குரி, அமெரிக்க ஊடகவியலாளர்


1955 – ஸ்டீவ் ஜொப்ஸ், ஆப்பிள் நிறுவனத்தை ஆரம்பித்த அமெரிக்கத் தொழிலதிபர் (இ. 2011)


1956 – ஜூடித் பட்லர், அமெரிக்க மெய்யியலாளர்


1967 – பிறையன் சிமித், நோபல் பரிசு பெற்ற ஆத்திரேலிய இயற்பியலாளர்


1977 – பிளாய்ட் மேவெதர், அமெரிக்க குத்துச்சண்டை வீரர்


இன்றைய தின இறப்புகள்


1810 – என்றி கேவண்டிசு, பிரான்சிய-ஆங்கிலேய இயற்பியலாளர், வேதியியலாளர் (பி. 1731)


1815 – ராபர்ட் ஃபுல்டன், அமெரிக்கப் பொறியாளர், கண்டுபிடிப்பாளர் (பி. 1765)


1969 – பா. தாவூத்ஷா, தமிழகப் பத்திரிகையாளர், எழுத்தாளர், சொற்பொழிவாளர் (பி. 1885)


1983 – ச. வெள்ளைச்சாமி, தமிழக சமூக ஆர்வலர், கொடை வள்ளல் (பி. 1897)


1986 – ருக்மிணி தேவி அருண்டேல், தமிழக நடனக் கலைஞர், கலாசேத்திரா நடனப் பள்ளியினை நிறுவியவர். (பி. 1904)


1990 – மால்கம் போர்ப்ஸ், அமெரிக்கப் பதிப்பாளர் (பி. 1917)


1996 – அன்னா லாறினா, உருசியப் புரட்சியாளர், எழுத்தாளர் (பி. 1914)


2001 – கிளாடு சேனன், அமெரிக்கக் கணிதவியலாளர், பொறியாளர் (பி. 1916)


2011 – அனந்து பை, இந்திய எழுத்தாளர் (பி. 1929)


2015 – மாயாண்டி பாரதி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், பொதுவுடமையாளர், இதழாளர் (பி. 1917)


2018 – ஸ்ரீதேவி, இந்தியத் திரைப்பட நடிகை (பி. 1963)


இன்றைய தின சிறப்பு நாள்


விடுதலை நாள் (எசுத்தோனியா, உருசியாவிடம் இருந்து 1918)