வாலாஜாவை அடுத்த ரெட்டியூர் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி (வயது 72). ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர். இவர் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் வாலாஜா நகராட்சி அலுவலகம் எதிரில் ராணிப் பேட்டை நோக்கி சென்றார். அப்போது காஞ்சீபுரத்தில் இருந்து வேகமாக வந்த தனியார் பஸ் மோதியதில் பழனி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.